எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இளமதி பத்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளமதி பத்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 செப்டம்பர், 2017

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

நிலவைப்போல் தேய்ந்து மறைந்து பின் புதிதாய் உருவாகி வருகிறது இன்றைய காதல். ஆனால் இளமதி பத்மாவின் காதலோ  என்றும் ஒளிரும் சூரியனாய் மிளிர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டாண்டுகளே ஆயுள் கொண்ட அவரது காதலின் (காதலன்  ) நினைவில் பொழிந்த கவிதைகளிலும் அக்காதல் ஆகர்ஷிக்கிறது. நம்மையே புரட்டிப் போடுகிறது. மாலை ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. இரவெனும் தனிமையில் தோயச்செய்கிறது. மறுநாளாய்ப் பூக்கிறது. மனம் கொண்டு மணம் சேர்க்கிறது.

சனி, 8 அக்டோபர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்.. ??!!

என் அன்புத் தங்கை புவனா மூலம் அறிமுகமான அன்புத் தோழி இளமதி பத்மாவிடம் இந்த வார சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எதுவும் எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.

பத்மா மிக அன்பானவர், குழந்தை உள்ளம், வெள்ளந்தி, நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். காதல் பொங்கும் சிறு சிறு கவிதைகள் மூலம் என்னைக் கவர்ந்தவர், பத்ரிக்கைத் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டிலும், அதன் மதிப்புரைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அவர் எழுதிய அனுப்பிய ஜாலி  பதிவு இதோ உங்களுக்காக.

/////சுற்றுலா பிடிக்காதவர் எவரேனும் உண்டா அதுவும் பள்ளியில் படிக்கும் போது... மதுரையிலிருந்து தூத்துக்குடி கன்யாகுமரி திருச்செந்தூர் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்புவது என பள்ளியில் சொல்ல ஆர்வம் அதிகமானது! அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் ( அம்மம்மா) செல்லம் என்பதால் பாட்டியை ராஜா செய்தால் போதும் என்றிருந்தேன்.

சனி, 25 ஜூன், 2016

இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">

////"பெண் பூக்கள்"

பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு

காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...

அது மட்டும் போதுமா என்றால் போதாது...

படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!

ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!

நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!

தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...

இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !

வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
 நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)
Related Posts Plugin for WordPress, Blogger...