எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நமது மண்வாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நமது மண்வாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 நவம்பர், 2024

கருப்பை நம் உயிர்ப்பை நூலின் முன்னுரை.

கருப்பை நம் உயிர்ப்பை 

எனது 27ஆவது நூலின் முன்னுரை. 


என்னுரை


"பெண் என்று பூமிதனில் பிறந்திட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்று பாரதியார் பாடியது பெண் உடல்நலம் குறித்துப் பேசுவதற்குப் பொருந்தும்.

"ப்யூபர்டி" என்னும் பருவமடைதலில் தொடங்கி மெனோபாஸ் வரைக்கும் ஏன் அதன் பின்னும்கூட பெண் தனது உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து அறிந்து கொள்வது காலத்தின் தேவை.

புதன், 3 ஜூலை, 2024

19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்

 19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்


கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசை நார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.

சிலருக்கு ஒழுங்கற்ற வடிவக் கருப்பை இருக்கலாம். நார்த்திசுக் கட்டி, பாலிப்கள், புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றால் இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கர்ப்பம் தரிக்க இயலாமை, அதீதவலி ஆகியனவும் ஏற்படலாம். மெனோபாஸ் சமயத்திலும் அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம். கருப்பைக் குழாய்களின் நீண்டகால அழற்சி கருவுறாமைக்கு வழிவகுக்கும். இரண்டு முல்லேரியன் குழாய்கள் இணைந்து கருப்பைக் குழியை உருவாக்குகின்றன. சிலருக்கு இது சரியாக இணையாததால் ஒழுங்கற்ற வடிவ கருப்பை உருவாகின்றது. பைகார்னுவேட் கருப்பை (இதய வடிவம்), ஆர்குவேட் கருப்பை, செப்டேட் கருப்பை ( ஒரு சவ்வு மூலம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்), யுனிகார்னுவேட் கருப்பை, டிடெல்ஃபிஸ் கருப்பை ( இரண்டு கருப்பைகள் கொண்டது) ஆகியன இதன் வகைகள்.

வியாழன், 20 ஜூன், 2024

18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்

 18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்


கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போதும் மிகப்பெரும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு நேரலாம். இரத்தசோகை ஏற்பட்டு வழக்கத்தை விடக் குறைவான இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் நஞ்சு கலக்கவும் கூடும். இதைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், தண்ணீர், நார்ச்சத்து உணவு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் பதிமூன்று வாரங்களில் அநேக கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. குழந்தையின் குரோமோசோமில் ஏற்படும் சிக்கல்கள், தாயின் ஹார்மோன் பிரச்சனை, தொற்று, உடல்நலக் கோளாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, போதைப் பொருள் உபயோகம், அதிகப்படியான காஃபின் மற்றும் நச்சுப் பொருள், அதிர்ச்சி, தாயின் வயது, நீரிழிவு நோய், இரத்தம் உறைதல் கோளாறு, குறுகிய கருப்பை வாய் அல்லது அசாதாரண ஒட்டுதல்களுடன் கூடிய கருப்பை, உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசு ஆகிய முக்கியப் பங்கு வகிக்கின்றன.

செவ்வாய், 4 ஜூன், 2024

17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்

 17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்



சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது.

 

சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது.

வியாழன், 9 மே, 2024

16.பிரசவம் என்பது மறுபிறப்பு

 16.பிரசவம் என்பது மறுபிறப்பு


பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாகும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அந்தத் தாயும் புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். தன் வாழ்விற்கானா ஒரு புதிய ஜீவனை வெளிக்கொணரப் போகும் மகிழ்வோடு அவள் தாங்கும் பிரசவ வலி என்பது மனோதைரியத்துடன் கூடியது. 


பொதுவாகப் பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது

திங்கள், 25 மார்ச், 2024

15.கர்ப்பத்தைக் கண்டறிதல் மற்றும் ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகள்

 15.கர்ப்பத்தைக் கண்டறிதல் மற்றும் ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகளும்


பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.

 

இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது  PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

சனி, 10 பிப்ரவரி, 2024

14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

 14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்


கருத்தரிப்பு என்பது பாலூட்டிகளில் நிகழும் ஒன்று. அடுத்த சந்ததியை உருவாக்க, மனித இனம் செழித்துப் பெருக கருத்தரிப்பு இன்றிமையாதது. பரிணாம வளர்ச்சியில் மனித இனமே முதல்நிலை வளர்ச்சி அடைந்த ஆறாம் அறிவு பெற்ற உயிரினமாகும். உறவு கொள்ளும்போது ஆணின் விந்தணு பெண்ணின் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுவது இயற்கைக் கருத்தரிப்பு.

இயற்கைக் கருத்தரிப்பில் கலவியின் போது ஆணின் விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் பலமணி நேரங்கள் நீந்திச் சென்று கருப்பை வாய் வழியாக ஃபலோப்பியன் குழாயை அடைகிறது. கருப்பையிலிருந்து வெளியேறி ஃபலோப்பியன் குழாய்க்கு வரும் சினைமுட்டையை துளைத்துச் சென்று இணைந்து கரு உருவாகிறது. இதன் பின்னர் கருவணுவானது கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கு 4 – 7 நாட்கள் ஆகும்.

சனி, 30 டிசம்பர், 2023

12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்

 12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்


மகளிர்க்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய்களும், கருப்பைப் புற்றுநோய்களும் ஆகும். கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு எது காரணம் என்று இனம் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபுரீதியான கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பப்பைக் கட்டிகள் உருவாகின்றன. கர்ப்பப்பை கட்டியின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடுகின்றன. இவற்றில் தீங்கற்ற கட்டிகளும், தீங்கு உருவாக்கும் புற்றுநோய்க் கட்டிகளும் அடக்கம்.

இளம்பெண்களை விட அறுபது வயதான பெண்களே கருப்பைப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்றும் கருப்பைப்புற்றும் ஏற்படுவது குறைவு என்கிறது ஒரு புள்ளிவிபரம். பொதுவாகத் தாய்ப்பால் ஊட்டும்போது கர்ப்பப்பையின் வாய் சுருங்கித் தசைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. உடலுறவின் போது ரத்தக்கசிவு, மாதவிடாய் முற்றிலும் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இரத்தப்போக்கு, மாதவிடாய்க்கு இடையே இரத்தப் போக்கு ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்

 11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்


 

பெண் பிறப்புறுப்புப் பிரச்சனைகளில் முக்கியமானதில் ஒன்று பார்த்தோலின் சுரப்பி சீழ்க்கட்டி. யோனித் திறப்பின் இருபுறத்திலும் இந்த பர்த்தோலின் சுரப்பி உள்ளது. யோனியின் உதடுகளில் இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் அமைந்திருக்கும். இவை யோனியின் உதடுகள் ஈரப்பதமாய் இருக்கும் வண்ணம் ஒரு சிறிய திரவத்தை உருவாக்குகின்றன. இச்சுரப்பிகளில் ஒன்றின் திறப்புக்கு மேல் தோலில் மடிப்பு வளரும்போது இதில் சுரக்கும் திரவம் பின் வாங்கித் தடுக்கப்படுகிறது.


பர்தோலின் நீர்க்கட்டி அல்லது சீழ் என்பது பர்தோலின் சுரப்பியிலிருந்து ஒரு சிறிய திறப்பு தடுக்கப்படும்போது அழற்சித் திசுக்களால் உருவாகும் வீக்கம் அல்லது சீழ்க்கட்டி ஆகும். இது நீர்க்கட்டி போன்றதொரு வீக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்க்கட்டி ஒரு பைசா அளவிலிருந்து சிறிய ஆரஞ்சு அளவு பெரிதாக வளரும். இவ்வாறான கட்டிக்குள் தடுக்கப்படும் குழாயிலேயே திரவம் உருவாகிச் சேரும்போது தொற்று ஏற்படலாம். இது புண்ணாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திரவம் உருவாகிறது.

வெள்ளி, 13 அக்டோபர், 2023

10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

 10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்


கர்ப்பப்பையில் பெண்களுக்கு ஏற்படும் நார்த்திசுக்கட்டிகள் பற்றி முன் இதழில் பார்த்தோம். அடுத்து நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம்.இடுப்பு வலி, இடுப்பு அழற்சி இருந்தால் அது கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாலும் ஏற்படலாம். பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். இவை சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுப் பெரும்பாலும் சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


இதனால் பெண்களில் ஆண்தன்மை, முகத்தில் மீசை போன்ற முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, இடுப்புக்களில் வலி, மலட்டுத்தன்மை, இதயநோய், சீரற்ற மனநிலை போன்றவையும் ஏற்படும். உடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக இருக்கின்றன. இருப்பினும் சில புற்றுக்கட்டிகளாக மாறுகின்றன. அல்லது புற்றுக் கட்டிகளால் உருவாகின்ற்ன. அவை நிலையானதாகவும் வீரியமிக்கதாகவும் இருக்கும்போது அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

வெள்ளி, 21 ஜூலை, 2023

8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்

 8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்


மனித குலத்தைத் தழைத்தோங்கச் செய்வது கருப்பையின் திருப்பணி. அதன் அமைப்பு எப்படி இருக்கும், மாதவிடாய் ஏற்படுதல், கருவுறுதல், மற்றும் கர்ப்பகாலத்தில் அதன் பணி என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பேரிக்காய் பார்த்திருக்கின்றீர்களா? அதன் வடிவத்தில் அமைந்த உறுப்பே ஓவரி என்னும் கருப்பை. இது மாதவிடாய், அதன் பின் கருவுறுதல் மற்றும் கர்ப்ப காலம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. இது மலக்குடலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் இடையில் இடுப்பின் இரு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. பெண்மையின் ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் போன்றவற்றைச் சுரக்கிறது. இதனால் பெண்களுக்குப் பூப்படையும் வயதில் மார்பங்கள் பெரிதாகின்றன. இதன் அடையாளமாக அந்தரங்க உறுப்புகளில் ரோமம் முளைக்கத் துவங்குகிறது.

மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது ? முதல் பூப்பிற்குப் பின் வரும் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தம் மற்றும் திசுக்களுடன் கருப்பைப் புறணி என்னும் எண்டோமெட்ரியத்துடன் கருவுறாத முட்டையைச் சுமந்து ரத்தப் போக்காய் மாதா மாதம் வெளியேறுவதால் ஏற்படுகிறது.

செவ்வாய், 13 ஜூன், 2023

7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்

 7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்


பொதுவாகப் பெண்களுக்குப் பூப்படையும் பருவத்திலும், மாதவிடாய்க்கு முன்னிரு பின்னிரு நாட்களிலும், கர்ப்பகாலங்களிலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். இது இயற்கை. வழுவழுப்பான இந்தத் திரவம் இனப்பெருக்கப்பாதையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப் பயன்படும்.

பூப்படைந்தபின் மாதாந்திரத் தீட்டு ஏற்படும். ஆனால் மாதாந்திரத் தீட்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறப்புறுப்பில் வஜினிடிஸ் எனப்படும் அழற்சியுடன் வெள்ளைப்படுதலோ அல்லது மற்ற நிறங்களில் கசிவு ஏற்பட்டாலோ, கர்ப்பக் காலத்தில் இரத்தப் போக்கைக் கண்டாலோ, மெனோபாஸுக்குப் பின்னும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் ஏற்பட்டால் அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

முதல் காரணம் தொற்றுப் பிரச்சனை. பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படுவது நிறமற்ற, வாசனையற்ற, லேசான பிசுபிசுப்பான திரவம். அமிலத்தன்மை நிறைந்த இத்திரவம் பிறப்புறுப்பைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. பால்வினைத் தொற்று, பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால் பிறப்புறுப்பில் வீக்கம், புண், கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். நிறமற்ற அந்தத் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறி வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, சாம்பல் ஆகிய நிறங்களிலும் பால், தயிர் போன்று கெட்டியாகவும் நூல் போன்றும், மீன் வாசனையோடும், நுரையுடன் அல்லது பாலாடைக் கட்டி போன்றும் வெளியாகும். இப்படி நிறம் மாறித் தொடர்ச்சியாக வெளியாகித் துர்நாற்றமும் வீசினால் முறையான சிகிச்சை எடுப்பது அவசியம்.

வெள்ளி, 5 மே, 2023

6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்

 6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்


மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் முடக்குவதில் அதிக இரத்தப் போக்கும் பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு இரத்தப் போக்கு மற்றும் அது அதிக நாட்கள் நீடித்தால் அதை மெனோராஜியா என்று குறிப்பிடுகிறார்கள். மெட்ரோராஜியா என்றால் இரு மாதவிடாய்களுக்கு இடையிலும் ரத்தப் போக்கு ஏற்படுதலைக் குறிக்கிறது. அதிக அளவு இரத்த இழப்பால் இரத்த சோகையும் ஏற்படுகிறது.

மாத விலக்கின் போது அதிக இரத்தப் போக்கினால் அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிவரும். இதனால் தொடைகளில் உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எங்கே சென்றாலும் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று பேடை மாற்றவேண்டி வருவதால் வெளியே செல்வதே சிரமம் கொடுப்பதாய் இருக்கும். இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும்..

புதன், 5 ஏப்ரல், 2023

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?


பூப்படையும் பதின் பருவத்தில் ஒவ்வொரு இளம்பெண்ணும் அனுபவிக்கும் முதல் துயரம் டிஸ்மெனோரியா. அடிவயிற்றிலும் தொப்புளைச் சுற்றிலும் ஏற்படும் தாங்கொணா வலி டிஸ்மெனோரியா எனப்படுகிறது. பல்வேறு வயதிலும் தொடரும் இதற்குப் பல்வேறு காரணங்களும் உண்டு. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பார்ப்போம்.

முதல் காரணம் எண்டோமெட்ரியத்திலிருந்து இரத்தம் வெளியேறி ஆனால் அது பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறாமல் உள்ளே தங்கிவிடுவதும் பின் தேங்கித் தேங்கிக் கட்டிகளாக வெளியேறுவதுமே இந்த டிஸ்மெனோரியா என்ற வலி மிகுந்த மாதவிடாய். சில வளரிளம் பெண்களுக்குத் தொடர்ந்து ஆறு மாதங்களோ அதற்கும் மேலோ இந்த வலி தொடர்ந்து வந்து அதன் பின்புதான் பூப்பெய்துவார்கள். பூப்பெய்தியபின் ஒவ்வொரு மாதமும் எட்டு முதல் பத்து நாட்கள் வரை கடுமையான வலியோடு ரத்தக் கட்டிகளுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்படும்.

வெள்ளி, 17 மார்ச், 2023

அமினோரியா என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?

 அமினோரியா என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?



இயல்பாகவே ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ வயதில் பூப்படைதலில் இருந்து தீட்டு நிற்கும் (மெனோபாஸ்) காலம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் உடல் நலிவுகளால் அவஸ்தைப்படுகின்றாள். ஆனால் பூப்படைவதே கோளாறு என்றால், பருவவயது கடந்து விட்ட பின்னும் பூப்பு அடையாவிட்டால் அதுதான் அமினோரியா. இது ஒரு பெண்ணின் தாய்மை அடையும் தகுதியையே பாதிக்கும்.

உடலியல் மற்றும் நோய்க்குறியியல் சார்ந்தது என அமினோரியா இரு வகைப்படும்.. உடலியல் அமினோரியா என்பது மாதவிலக்கு ஏற்படாத நிலை. உடற்கூறின்படி இது பருவ வயதில் பூப்பெய்தாமல் இருப்பது, மேலும் கர்ப்ப காலத்திலும், குழந்தைக்குப் பாலூட்டும் போதும், மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் (மெனோபாஸ்) ஏற்படுகின்றது.

நோய்க்குறியியல் அமினோரியா மூன்று வகைப்படும் க்ரிப்டோமெனோரியா, ப்ரைமரி அமினோரியா, செகண்டரி அமினோரியா.இதில் க்ரிப்டோமெனோரியா என்றால் எண்டோமெட்ரிய மடிப்புகளில் இருந்து உதிரம் வெளியேறும் ஆனால் அது மாதவிலக்காக பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறாமல் நின்றுவிடும்.

வியாழன், 9 மார்ச், 2023

பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியமா சாப்பிடுவோம்.

பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியமா சாப்பிடுவோம்.


முன்பெல்லாம் பசிக்கும் ருசிக்கும் சாப்பிட்டோம். ஆனால் இப்ப ஹெல்த் கான்சியஸ் அதிகமாகி மக்கள் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கு. அதில் எதை சாப்பிடலாம்னு தேர்ந்தெடுத்து சாப்பிடுறாங்க. அப்படி சில ஆரோக்கியமான உணவுகள் பத்தியும் அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றியும் கொடுத்துள்ளேன்.

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு ப்ரோட்டீன் முக்கியம் எனவே முளைவிட்ட பாசிப்பயறு பீட்ரூட் தோசை கொடுக்கலாம். இதன் பெயரே ப்ரோட்டீன் தோசைதான். இதுக்குத் தேவை பாசிப்பயிறு ஒரு கப்.

செவ்வாய், 7 மார்ச், 2023

3.லுகேரியா ( வெள்ளைப்படுதல் ) இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா

 3.லுகேரியா ( வெள்ளைப்படுதல் )  இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா


மாதவிடாய்க் கோளாறுகள் என்று எடுத்துக் கொண்டால் அதிக ரத்தப் போக்கு, குறைந்த ரத்தப் போக்கு, சீக்கிரப் பூப்பு, தாமதப் பூப்பு, ஹார்மோன் கோளாறுகள் இவற்றோடு நாம் வெள்ளைப் படுதலையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

முறையான வயதில் பூப்பெய்துவதற்கு உணவுப் பழக்கம்வாழ்க்கை முறை மற்றும் பரம்பரையும் காரணமாகின்றனஉடல் உழைப்பின்மைமுறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக ஏற்படும்  உடல் பருமனால் உடலில் ஹார்மோன் உந்துதல் ஏற்பட்டுவிரைவில் பூப்பெய்துகின்றனர் குழந்தைகள்.அதுமட்டுமல்லாமல்உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்விரைவாகப் பூப்பு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள `பிஸ்பீனால் ’, தாலேட்ஸ்  போன்ற வேதிப் பொருள்கள்இயல்பான ஹார்மோன் செயல்பாட்டுக்குக் குந்தகம் உண்டாக்கிவிரைவில் பூப்பு சுழற்சியை ஏற்படுத்துகின்றனகுழந்தைப் பருவத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக மரப்பாச்சி பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்குழந்தைகளுக்கு ஏற்படும் மனவழுத்தமும் விரைவில் பருவமடையச் செய்யும்.

வியாழன், 12 ஜனவரி, 2023

பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

2.பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண், எதிர்கால குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக `பூப்பு நீராட்டு விழாக்கள்கிராமம், நகரம் என வித்தியாசமில்லாமல் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. க்ரீடங்கள், நகைகள், பட்டாடைகள் அணிவித்துப் பலவித அலங்காரங்கள் செய்து மேடையில் அம்மன் உருவில் காட்சிப் பொருளாகப் பெண்ணை ஆக்கிவிடுகின்றன.

விழாவாகக் கொண்டாடவில்லையென்றாலும் இதற்குரிய சடங்குகள் பெரும்பாலான சமூகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாம் பூப்படைதலைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள்.

புட்டு சுத்துதல் என்றும், நலுங்கு வைத்து நீராட்டல் என்றும் சில சமூகத்திலும், பெண் சடங்கானதைப் பேரனுண்டா எனக் கேட்டு இல்லம் வரும் உறவினர்களுக்கு மிட்டாய்த்தட்டு வைத்தும், ரொட்டி சுட்டு ருதுவான பெண்ணின்மேல் நொச்சி இலையில் வைத்து சடங்கு கழித்தும்,
உறவினர்களுக்கு வடித்தும் இந்நிகழ்வைச் சில சமூகத்தினரும் தம் இல்லங்களிலேயே கொண்டாடுகின்றார்கள்.
பூப்படைதலைக் கொண்டாடும் நிகழ்வாகவும் மாதாந்திரத் தீட்டைத் தீண்டத்தகாக நிகழ்வாகவும் ஆக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கருப்பை நம் உயிர்ப்பை - 1. பெண்ணின் உடல் நலம்.

கருப்பை நம் உயிர்ப்பை


பெண்ணின் உடல் நலம்.

பெண்ணின் உடல் நலம் என்பது ஒரு குடும்பத்தின் உயிர்நாடியைப் போன்றது. பெண்ணின் உடல் நலம் சீராக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு மனிதரும் பெண்ணின் உடல் அமைப்புப் பற்றியும் அவளின் உடல் உபாதைகள் பற்றியும் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. இன்றும் குடும்ப அமைப்பு சிறந்தோங்கும் இந்தியச் சூழலில் பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, பெண்ணைப் பேணிக்காப்பதும் அவசியம்.

கருப்பை நமது உயிர்ப்பை. ஏன் அப்படி? பத்து மாதம் ஒரு கருவை உயிருடன் சுமந்து உலகுக்கு அளிப்பதாலே அது உயிரைத் தாங்கி இருக்கும் உயிர்ப்பை. ஒரு பெண் பூப்படைந்தவுடனே சில வீடுகளில் திருமணத்தை நடத்தி விடுவார்கள். ஒரு மலர் மலர்ந்தவுடன் கசக்கி முகர்வதைப் போன்றது அது. பூப்படைந்து ஆறு வருடம் கழித்த பின்புதான் அப்பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்கத் தேவையான அளவு பக்குவப்படும். அப்போதுதான் பிறக்கும் குழந்தைகளும் எந்த ஊனமும் இல்லாமல் முழுமையான குழந்தையாய்ப் பிறக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...