எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

 10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்


கர்ப்பப்பையில் பெண்களுக்கு ஏற்படும் நார்த்திசுக்கட்டிகள் பற்றி முன் இதழில் பார்த்தோம். அடுத்து நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம்.இடுப்பு வலி, இடுப்பு அழற்சி இருந்தால் அது கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாலும் ஏற்படலாம். பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். இவை சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுப் பெரும்பாலும் சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


இதனால் பெண்களில் ஆண்தன்மை, முகத்தில் மீசை போன்ற முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, இடுப்புக்களில் வலி, மலட்டுத்தன்மை, இதயநோய், சீரற்ற மனநிலை போன்றவையும் ஏற்படும். உடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக இருக்கின்றன. இருப்பினும் சில புற்றுக்கட்டிகளாக மாறுகின்றன. அல்லது புற்றுக் கட்டிகளால் உருவாகின்ற்ன. அவை நிலையானதாகவும் வீரியமிக்கதாகவும் இருக்கும்போது அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

 

பெண்களுக்கு இடுப்பின் இரு பக்கமும் இரண்டு கர்ப்பப்பைகள் உள்ளன. இந்த கருப்பையில் முட்டைகள் உருவாகின்றன மற்றும்  மாதாந்திர சுழற்சிகளின் போது அவை வெளியிடப்படுகின்றன. கருப்பைகள் பாதாம் வடிவ அளவில் இருக்கும். இவற்றின் மேற்பரப்பில் திரவத்தால் நிரப்பப்பட்ட கட்டிகளே நீர்க்கட்டிகள். பிறப்புறுப்பிலும் இவை ஏற்படலாம்.இது நீர் இல்லாமல் மூடிய திசுக்கள் அல்லது காற்றை அல்லது சீழைக் கூடக் கொண்டிருக்கலாம். யோனில் புறணி மீது இவ்வகைக் கட்டிகள் அல்லது சீழ் ஏற்படுகிறது. இடுப்பில் வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை செய்து அது கருப்பை நீர்க்கட்டியினால் ஏற்பட்டது என்றால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

யோனி நீர்க்கட்டிகளில் பல வகைகள் உள்ளன. குழந்தைப் பிறப்பின் போது அல்லது அறுவைச் சிகிச்சையின் போது யோனியின் சுவர்களில் ஏற்படும் காயத்தால் இவை உருவாகின்றன. குழந்தை உருவாக்கத்தின் போது ஏற்படும் கார்ட்னர் குழாய் குழந்தை பிறந்தபின் மறைந்துவிடும். சில சமயம் அது அப்படியே இருந்தால் அதில் திரவம் சேர்ந்து நீர்க்கட்டியாக உருவாகலாம்.

அண்டவிடுப்பின் போது எப்போதாவது உருவாகும் நீர்க்கட்டி கர்ப்பகாலம் முழுதும் கர்ப்பப் பையில் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், கருவுறுவதற்கு உண்ணும் மருந்துகள், முன்பு நீர்க்கட்டி ஏற்பட்டால் அது தொடர்ந்து ஏற்படுவது, கருப்பைக்கு வெளியே வளரும் எண்டோமெட்ரியோசிஸ் செல்களின் திசுக்கள் கருமுட்டையுடன் சேர்ந்து வளர்தல், இடுப்புத் தொற்று போன்றவை நீர்க்கட்டி உருவாவதற்கான ஆபத்துக் காரணிகள்.

50 வயதுக்கு மேற்பட்ட சில பெண்களுக்கும், பரம்பரைநோய், உடல்பருமன், எண்டோமெட்ரியோசிஸ் நோய் போன்றவையும் இக்கட்டி உருவாதில் பெரும்பங்கு வகிக்கின்றன. செயல்ப்பாட்டு நீர்க்கட்டி, எண்டோமெட்ரியோமா நீர்க்கட்டி மற்றும் டெர்மாய்ட் நீர்க்கட்டி எனப் பலவகையான கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளன.

மாதவிடாய் சுழற்சியின் காரணமாக பெரும்பாலான கருப்பை நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது பொதுவான வகை, மற்றும் பாதிப்பில்லாதது. வலி ரொம்ப இருக்காது மேலும் சில மாதவிடாய் சுழற்சிகளுக்குள்ளேயே மறைந்துவிடும். கருப்பையில் ஒவ்வொரு மாதமும் நுண்ணறைகள் எனப்படும் நீர்க்கட்டி போன்ற அமைப்புகள் வளர்கின்றன. இவை செயல்பாட்டு நீர்க்கட்டி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஃபோலிக்குலர் நீர்க்கட்டி, இன்னொன்று கார்ப்பஸ் லியூடியம் நீர்க்கட்டி.


மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் முட்டை அதன் நுண்ணறையிலிருந்து வெடித்து ஃபலோபியன்குழாயில் பயணிக்கும். ஃபோலிக்குலர் நீர்க்கட்டியானது நுண்ணறையில் சிதையாது ஆனால் தொடர்ந்து வளரும்போது அது சிக்கலாகும். நுண்ணறை ஒரு முட்டையை வெளியிடும்போது அது கருவுறுவதற்கு புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது கார்ப்பஸ் லியூடியம் என அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் இந்த நுண்ணறையில் திரவம் குவிந்து நீர்க்கட்டியின் வளர்ச்சிக்கு வழிகோலுகிறது.


பெரிய கருப்பை நீர்க்கட்டிகளால் வீக்கம், அடிவயிற்றில் கனமான உணர்வு, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். மாதவிடாய் நின்றபிறகு உருவாகும் சிஸ்டிக் கருப்பை வீரியம் மிக்கதாக புற்றுநோயாக மாறக்கூடும். இடுப்புப் பரிசோதனையின் போது இவற்றைக் கண்டறியலாம். கருப்பை நீர்க்கட்டிகளுடன் கருப்பை முறுக்கம், முறிவு, போன்ற சிக்கல்களும் அரிதாக ஏற்படுகின்றன. பெரிதாகும் நீர்க்கட்டிகள் கருப்பையை நகர்த்துகின்றன. இது கருப்பையின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, வலியுடன் முறுக்கத்தை உருவாகும். இதனால் குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான இடுப்பு வலி போன்றவை ஏற்படலாம். ஒரு நீர்க்கட்டி உடைந்து உட்புற இரத்தப் போக்கு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டால் அது முறிவு ஆகும். பெரிய நீர்க்கட்டி சிதைந்தால் அது ஆபத்தை உண்டாக்கும். இது உடலுறவின் போது இடுப்புப் பகுதியைப் பாதித்து ஆபத்தை உண்டாக்கும்.

கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்க எந்த வழிகளும் இல்லை. என்றாலும் வருடாந்திர சோதனைகளின் மூலம் கருப்பையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியலாம். மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது இடுப்பு வலி வீக்கம் அழற்சி ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நலம் பயக்கும்.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவரை அணுகினால் திடமான, அல்லது திரவத்தால் நிரப்பட்ட நீர்க்கட்டிகளின் வடிவம், அளவு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து கருப்பை நீர்க்கட்டிக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்கள். கருப்பை நீர்க்கட்டியைக் கண்டறிய இடுப்பு அல்ட்ராசவுண்ட், லேப்ரோஸ்கொபி, ஹார்மோன் சோதனை மற்றும் சிஏ 125 இரத்தப் பரிசோதனை போன்றவை செய்யப்படுகின்றன.


கருப்பை நீர்க்கட்டிக்கான சிகிச்சை வயது, நீர்க்கட்டியின் அளவு மற்றும் கருப்பை நீர்க்கட்டியின் அறிகுறிகளைப் பொறுத்து வழங்கப்படுகின்றது. இவை மீண்டும் வராமல் இருக்க ஹார்மோன் கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படலாம். சில மாதங்களில் நீர்க்கட்டிகள் மறையலாம் என்பதால் காத்திருந்து பார்க்கலாம். அல்ட்ராசவுண்ட் சோதனையின் நீர்க்கட்டிகள் சிறியதாகவும் திரவம் நிறைந்ததாகவும் காட்டும்போது அதன் அளவு மற்றும் மாற்றங்களை கவனித்துப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவம் மேற்கொள்ளலாம். நீர்க்கட்டியின் அளவு பெரிதாக இருந்தால் அது வலியை உண்டாக்கும். மேலும் அடுத்தடுத்த மாதவிடாய் சுழற்சிகளின் போது தொடர்ந்து வளரும் என்று கண்டறிந்தால் மட்டுமே மருத்துவர்கள் இதற்கு அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் கருப்பையை அகற்றாமல் கருப்பை நீர்க்கட்டி மட்டும் அகற்றப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் பாதிப்பு அதிகம் இருந்தால் கருப்பையும் அகற்றப்படுகின்றது.


கருப்பை நீர்க்கட்டி உள்ளவர்கள் உடல் பருமனைக் குறைக்க வேண்டும். யோகா, நடைப்பயிற்சி செய்தல் நலம். 8 மணி நேரத் தூக்கம் அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ணுதல் வேண்டும். க்ரீன் டீ, மூலிகை தேநீர், புதினா தேநீர், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்த தேநீர், இலவங்கப்பட்டை தேநீர் போன்றவை அருந்தலாம். பாசிப்பயறு சுண்டல், கோதுமை தோசை, காய்கறி சூப், வாழைப்பழம், சப்போட்டா, மட்டை அரிசிச் சாதம், கைக்குத்தல் அரிசி, தானிய சப்பாத்தி, பச்சைக்காய்கறிகள், பாதாம் வால்நட், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகள் எடுத்துக் கொள்வது சிறந்தது. அடுத்து பார்தோலின் சீழ்க்கட்டியைப் பற்றிப் பார்ப்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...