எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஜூலை, 2023

8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்

 8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்


மனித குலத்தைத் தழைத்தோங்கச் செய்வது கருப்பையின் திருப்பணி. அதன் அமைப்பு எப்படி இருக்கும், மாதவிடாய் ஏற்படுதல், கருவுறுதல், மற்றும் கர்ப்பகாலத்தில் அதன் பணி என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பேரிக்காய் பார்த்திருக்கின்றீர்களா? அதன் வடிவத்தில் அமைந்த உறுப்பே ஓவரி என்னும் கருப்பை. இது மாதவிடாய், அதன் பின் கருவுறுதல் மற்றும் கர்ப்ப காலம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. இது மலக்குடலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் இடையில் இடுப்பின் இரு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. பெண்மையின் ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் போன்றவற்றைச் சுரக்கிறது. இதனால் பெண்களுக்குப் பூப்படையும் வயதில் மார்பங்கள் பெரிதாகின்றன. இதன் அடையாளமாக அந்தரங்க உறுப்புகளில் ரோமம் முளைக்கத் துவங்குகிறது.

மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது ? முதல் பூப்பிற்குப் பின் வரும் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தம் மற்றும் திசுக்களுடன் கருப்பைப் புறணி என்னும் எண்டோமெட்ரியத்துடன் கருவுறாத முட்டையைச் சுமந்து ரத்தப் போக்காய் மாதா மாதம் வெளியேறுவதால் ஏற்படுகிறது.

சிறுநீர் வெளியேறும் உறுப்பை ஒட்டியே கருப்பையின் திறப்பும் அமைந்துள்ளது. கருப்பையின் வாய், அதாவது யோனியின் திறப்பு சில பெண்களுக்குச் சிறியதாக இருக்கும். யோனியின் திறப்பை மைக்ரோபெர்ஃபோரேட் ஹைமன் என்ற மெல்லிய சவ்வு மூடி இருப்பதே இதற்குக் காரணம். திறப்பு சிறியதாக இருப்பதால் அதிகப்படியாக சேர்ந்து உள்ள இரத்தம் மெதுவாகவே வெளியேறும். எனவே இவர்கள் அடி வயிற்றில் வலி, இடுப்பெலும்பில் வலி, கால் வலி, தலைவலி, கடினத்தன்மையை உணர்வார்கள்.

அக் கருவளையச் சவ்வு தடுப்பதால் இவர்களால் அத்திறப்பில் ஒரு டம்பானைக் ( எனப்படும் ஒருவகை உருண்டையான காட்டன் நேப்கின்) கூட செருக முடியாது. அல்லது அதிகப்படி இரத்தப் போக்கால் நிரம்பிய அந்த டம்பானை வெளியே எடுப்பதும் சிரமமாக இருக்கும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு அக்கருவளையத்தை அகற்ற மேலும் திறப்பைப் பெரிதாக்க ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கும்.

செப்டேட் கருவளையம் என்ற இன்னொரு பிரச்சனையையும் சில பெண்கள் எதிர்கொள்ளலாம். இந்த மெல்லிய கருவளையச் சவ்வின் நடுவில் கூடுதலான திசுப்பட்டையைக் கொண்டிருப்பதே செப்டேட் கருவளையம். ஒன்றிற்குப் பதிலாக இரண்டு யோனித் திறப்புகளை இத்திசுத் தடுப்பு உண்டாக்கும். இவர்களுக்கும் டம்பானை எடுப்பதிலும் வைப்பதிலும் சிரமம் ஏற்படலாம். இதற்கான அறுவை சிகிச்சையானது கூடுதலான திசுப்பட்டையை அகற்றி சாதாரண அளவிலான யோனித் திறப்பை உருவாக்கிறது. மேற்கூறிய இரண்டு பிரச்சனை உள்ள பெண்களும் பாலுறவின் போதும் சிக்கல்களைச் சந்திப்பார்கள். எனவே மாதவிடாய்க் காலங்களிலும் தாம்பத்தியத்தின் போதும் வலி, இன்னல்களைச் சந்திப்பவர்கள் இந்த சவ்வு மற்றும் திசுப்பட்டைக்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.


50 சதவிகிதப் பெண்களுக்குக் கருப்பை முன்னோக்கி நிலையையும் 25 சதவிகிதப் பெண்களுக்குப் பின்னோக்கி நிலையையும் மீதமுள்ள 25 சதவிகிதப் பெண்களுக்கு நடு நிலையையும் பெறுகிறது. கருப்பையின் வாய் திரும்பி இருந்தால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக் கம்மி. இதற்கென்று அறுவை சிகிச்சை தேவைப்படும். பெண் உறுப்புத் திரவத்தில் அமிலத்தின் அளவு அதிகம் இருந்தால் அது விந்தணுக்களை அழித்துக் கொன்று விடும். கருப்பைப் புறணியில் கருத்தரித்தால், கர்ப்பக் குழாயில் கர்ப்பம் பெரிதாகும் போது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கும் என்று கருச்சிதைவு செய்து விடுவார்கள். சிலருக்கு கருத்தரிக்காமைக்கு ஃபோலிக் ஆசிட்  ( விட்டமின் பி ) எனப்படும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கருவுறுதலின் போது முட்டை கருத்தரிப்பது கருப்பையில்தான். மாதவிடாய் சுழற்சி அண்ட விடுப்பின் போது உருவாகி வரும் முட்டை விந்தணுவால் துளைக்கப்பட்டுக் கருவுறும்போது அது ஃபெலோப்பியன் ட்யூப் வழியாக உட்சென்று எண்டோமெட்ரியப் புறணியைத் துளைத்துக் கருப்பையின் உட்புறம் பொருத்தப்பட்டுக் கர்ப்பம் தொடங்குகிறது. கருவுற்ற முட்டை ப்ளாஸ்டோசைட் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து குழந்தைப் பேறு வரை  அநேகருக்கு மாதவிடாய் ஏற்படாது. குழந்தைப் பேறின் போது தாய்க்கும் சேய்க்கும் இருந்த இணைப்பான நஞ்சுக் கொடியுடன் இந்த இரத்தமும் வெளியேறும்.

சிலருக்கு மட்டும் கர்ப்பக்காலத்தின் போதும் மாதா மாதம் சிறிதளவு இரத்தப் போக்கு ஏற்படலாம். இச்சமயம் இது எதற்காக ஏற்படுகிறது என்று மருத்துவரைக் கலந்து ஆலோசித்துத் தக்க மருத்துவ உதவி எடுத்துக் கொள்வது நல்லது. இதுவே கர்ப்பம் தரிக்கவில்லை என்றாலோ கருச்சிதைவோ, கருக்கலைப்போ ஏற்பட்டாலோ இந்த எண்டோமெட்ரியல் புறணி உதிர்ந்து இரத்தத்துடன் வெளியேறும்.

கர்ப்பகாலத்தில் இந்தக் கைப்பிடி பேரிக்காய் அளவு உறுப்பான கருப்பை குழந்தை வளர வளர அதற்கேற்றபடி நீளமாகவும் பெரிதாகவும் பலூன் போல விரிகின்றது. இனப்பெருக்க கால ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு கருப்பைக்கே. இதுவே பிரசவ காலத்தில் குழந்தையை யோனியிலிருந்து வெளித்தள்ளவும் உதவுகிறது.

பிரசவம் கடினமாயிருந்தால் குழந்தையை ஆயுதம் போட்டு எடுப்பார்கள், அல்லது பிறப்புறுப்பில் சிறிதளவு வெட்டி விட்டுப் பிறப்புப்பாதையை விரிவாக்கிக் குழந்தையை எடுப்பார்கள். சில சமயம் பிரசவத்துக்கு முன் ரத்தப் போக்கு ஏற்பட்டாலோ, குறி கண்டபின்னும் குழந்தையின் தலை கர்ப்ப வாயை நோக்கித் திரும்பாவிட்டாலோ, அல்லது குழந்தை பெரிதாக இருந்தாலோ, தாய்க்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருந்தாலோ, இடுப்பு எலும்பு விரிவடையாததால் கருப்பை வாய் திறக்காவிட்டாலோ,  மயக்க மருந்து செலுத்தி சிஸேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலமாகத் தாயின் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

வயிற்றில் இருக்கும்போது குழந்தைக்கு முடி அதிகம் என்றால் வயிறு அதிகம் அரிக்கும் என்பார்கள் அதனாலும் கோடுகளும் கீறல்களுமாகக் காட்சி அளிக்கலாம். கர்ப்பத்துக்குப் பின் விரிந்த கருப்பை குழந்தைப் பேறுக்குப் பின் சுருங்கத் தொடங்கும். குழந்தைக்குப் பாலூட்டுவதால் மிகச் சீக்கிரம் சுருங்கும் வாய்ப்பு அதிகம். பொதுவாக ஆறு வாரங்களுக்குப் பிறகு கர்ப்பப்பை தன் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

குழந்தை விரிவதால் வயிறும் பெரிதாகிக் குழந்தைப் பேற்றுக்குப் பின் வயிற்றில் கோடுகள், ஆயுதப் பிரசவம் என்றால் தழும்புகள் காணப்படும். வயிற்றைக் கட்டுதல் என்ற முறை மூலம் குழந்தைப் பேறுக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரலாம். பிரசவத்துக்குப் பின் பெரிதான வயிற்றைக் குறைக்கப் படுத்துக்கொண்டே செய்யும் காலுக்கான சில உடற்பயிற்சிகளும் உண்டு.

இடுப்பு எலும்பு பலமடைய கறுப்பு உளுந்து சுண்டல் நல்லது. கருப்பை பலமடைய போலிக் ஆசிட் அதிகமுள்ள முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பப்பாளி, ஆரஞ்சு, மாதுளைப் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, ப்ராக்கோலி, முளை கட்டிய பயறு வகைகள், முழு தானியங்களைச் சமைத்து உண்ணலாம். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க சிறிதளவு விளக்கெண்ணையைச் சமையலில் பயன்படுத்தலாம். எளிதான பிரசவத்துக்கு எண்ணெய்க் குளியலும், சோம்புக் கசாயம் போன்றவையும் கைகொடுக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...