எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகள்.



பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் இருந்திருக்கு. இப்போ எல்லாம் ஈ கார்ட்தான். அதுவும் வாட்ஸப்பில் எக்கச்சக்கமாகக் குவியும்.

ஆனா போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும்போது அந்தக் கார்டை வாங்கி யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்த்து மகிழ்வதில் ஒரு சஸ்பென்ஸும் த்ரில்லும் இருந்ததை மறுக்க முடியாது. நாம் ரொம்ப ஸ்பெஷல் ஆயிட்டமாதிரி ஃபீல் பண்ண வைப்பவை இந்த பர்த்டே கார்ட்ஸ்தான். 

அதுவும் கல்லூரிப் பருவத்தில் அசெம்ப்ளியில் நம்ம பிறந்தநாளை அனௌன்ஸ் செய்து கார்ட்ஸை கலெக்ட் செய்துக்குங்கன்னு ப்ரசிடெண்ட் கத்தையா கார்ட்ஸைக் காட்டும்போது ஏற்படுற உற்சாகத்துக்கு அளவில்லை. பந்தாவாப் போய் வாங்கிட்டு அன்னிக்குப் பூரா கெத்தா அலையிறது J

ரொம்ப முன்னே எல்லாம் தீபாவளிக்கு விதம் விதமா தீபம் கார்ட்ஸும்., பொங்கலுக்குப் பொங்கல்பானை, கரும்பு, விவசாயி, சூரியன் கோலங்கள் ஆகிய கார்ட்ஸும் , புத்தாண்டு கிறிஸ்மஸ் அப்பிடின்னா கிறிஸ்மஸ் தாத்தாவும் மெழுகுவர்த்திகளும் ஸ்பெஷலா இடம் பெற்றிருக்கும்.

அதுவும் பொங்கல் தீபாவளின்னா அநேகமா சாமி பட கார்ட்ஸ்தான். முருகன் ரொம்ப கார்ட்ல இருப்பார். உள்ளே பிரிச்சா ஆறு தாமரையும் முருகனும் இதழ் இதழா எழுந்து வர்றமாதிரி கட் பண்ணி வைச்சிருப்பாங்க. அதுமாதிரி இயற்கைக்காட்சிகள்ல பறவைகள் பூக்களை கட் செய்து தத்ரூபமா நகர்றமாதிரி கட் பண்ணி இருப்பாங்க. அது ஒரு த்ரில் அனுபவம். 

அதே போல் சில மியூசிக் பர்த் டே கார்ட்ஸ திறந்தா அது ஆட்டோமேட்டிக்கா ஹாப்பி பர்த்டே பாட்டெல்லாம் பாடும். ஓராயிரம் தரம் எல்லாரையும் ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே அந்தக் கார்டை மடக்கி மடக்கிப் பிரிச்சு ஹாப்பி பர்த்டே பாடலை ரசிக்கிறது உண்டு.  J
 
மத்த நாட்கள்ல அதிகம் பேசாத அல்லது லெட்டர் காண்டாக்ட் இல்லாத  உறவு முறைகள் கூட இந்த விசேஷ தினங்கள்ல ஒண்ணு கூடி கார்ட் அனுப்பிருவாங்க. ’உங்கள நாங்க மறக்கல’ங்கிறமாதிரி.
அப்பிடி வந்த பல கார்டுகள சேமிக்கல.. இது ஏதோ மிச்சம் மீதி இருந்தத எடுத்துப் போட்டிருக்கேன். J

ஒன்றிரண்டு இதுல திருமண மற்றும் திருமணநாள் வாழ்த்தும், பரிட்சைக்கு வாழ்த்தும், முதல் தரத்தில் வெற்றிபெற்றதுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கு. 

அதுவும் வசந்திக்கா, சுசீலாம்மான்னு என் மனசுக்குப் பிடிச்சவங்க அனுப்புன கார்டைப் பார்த்ததும் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். சுசீலாம்மாவோட பல கடிதங்கள் வேற இன்னிக்குப் படிச்சேன். இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நின்னுச்சுன்னு நினைச்சா திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகள்ல குறைஞ்சிருக்குன்னு தோணுது. 1998 லேருந்துதான் செல்ஃபோனே உபயோகிக்கிறேன்..அதிலும் 2016 லேருந்துதான் செல்ஃபோனில் இண்டர்நெட் பார்க்கிறேன். இப்போ ஒரு செகண்ட்தான். எல்லாரையும் ரீச் பண்ணிடலாம். ஆனா அப்போ எல்லாமே லெட்டர்தான். J






இந்தப் ஸ்பெஷல் அக்கேஷனல் வாழ்த்துக்களை என் நாத்தனார்கள், கொழுந்தனார்கள் & அவர்கள் குடும்பத்தினர், மாமனார், மாமியார், தோழிகள் ( மீனா, மீனாக்ஷி, உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) , சுசீலாம்மா, வசந்திக்கா, எனது மாமா ( மலேஷியாவிலிருந்து மற்றும் உறவினர்கள் அனுப்பி இருக்கிறார்கள். !

வெள்ளி, 23 டிசம்பர், 2016

அங்காடித் தெருவில் ஆயர் பிறந்தார். !

”தந்தானைத் துதிப்போமே” என்ற பாடல்தான் நான் முதன் முதலில் கேட்ட கிறிஸ்துவ பாடல். அம்மாவின் தோழி காந்தி டீச்சர் ( நடனம் சார் மனைவி ) கூட்டிச் சென்ற ஒரு பெந்தகொஸ்தே சர்ச்சில் இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு ஞாயிறு. காலை திருப்பலியாக இருக்கலாம். அதன் பின் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், ஃபாத்திமா காலேஜிலும்  சர்ச்சில் முழந்தாளிட்டு அமர்ந்து ப்ரேயர் செய்ததுண்டு. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். :) IN THE NAME OF THE FATHER, AND OF THE SON , AND OF THE HOLY SPIRIT, AMEN. !

தினம் நடக்கும் திருப்பலியில் நமக்கும் நன்மை (அப்பம்)  தரமாட்டார்களா என ஏங்கியதுண்டு. ஞானஸ்நானம் செய்யாதவர்கள் நன்மை வாங்கினால் வாயில் ரத்தம் வரும் என்று கிறிஸ்துவத் தோழி சொன்னதைக் கேட்டுப் பயந்ததுண்டு. :)

நற்கருணை வீரன் படித்துப் புளகாங்கிதம் அடைந்ததுண்டு. இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா என யோசித்ததுண்டு. எல்லா மதங்களும் இஸத்தில் முடிய கிறிஸ்துவம் மட்டும் இன்ஃபினிட்டி என்பது போல கிறிஸ்டியானிட்டி என முடியும் என என் ஆசிரியை ஒருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டதுண்டு. CHOIR GIRLS  கூடப் பாட முயற்சித்ததுண்டு. :)

அல்லேலூயா அல்லேலூயா..

ஆற்றலாலும் அல்ல அல்ல
சக்தியாலும் அல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

கிறிஸ்துமஸுக்கு சில நாட்கள் முன்னான இரவில் கியாஸ் லைட் வெளிச்சத்தில் வீடு வீடாகக் கூட்டமாகப் பாடி வரும் கேரல்ஸை ரசித்ததுண்டு. கிறிஸ்துமஸ்தாத்தா எனக்கு ஏதும் பரிசு வைத்திருப்பாரோ என்றும் யோசித்ததுண்டு.

சென்னை ராயப்பேட்டையில் இருந்தபோது ஷெரில் அம்மா கிறிஸ்துமஸ் அன்று கொடுத்துவிடும் ஹனி கேக்குகள் சுவையானவை. வாழைப்பழ டாஃபி, ஃப்ரூட் கேக், சிக்கன்/மட்டன் பிரியாணியின் சுவை அட்டகாசம்.

ஒரு முறை விஜிபி கோல்டன் பீச் சென்ற போது உலக உருண்டைக்குள் ஏறிப்பார்த்தால் எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவம் பரவி இருப்பதைப் போட்டிருந்தார்கள். அதற்கு அங்கே வந்த கிறிஸ்துவப் பெண்கள் உலகம் பூரா நம்ம மதம்தான் இருக்குன்னு சொல்றாங்க என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் குளிர்காலத்தில் என்றாலும்  கார்ட்ஸ், கிஃப்ட்ஸ், கிறிஸ்துமஸ் மர ( பைன் , ஃபர்) மர அலங்காரங்கள், தொப்பிக்குள்/சாக்ஸுக்குள் பரிசுகள்,கேக்குகள், சாக்லெட்டுகள் , உறவினர் வருகை என ஒவ்வொருவர் இல்லத்திலும் களை கட்டும். 

மன்னார்குடிக்கு எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் எல்லாம் சுவாமிமலை, சிக்கல், எட்டுக்குடி, எண்கண், நாகூர், வேளாங்கண்ணி சென்று தரிசித்து வராமல் அவர்கள் ட்ரிப் முடியாது. ஜாதி மதம் கடந்து கடவுளர்களை வணங்கி வளர்ந்திருக்கிறோம். :)

நாங்களும் குடும்பமாக வேளாங்கண்ணி, மைசூர் செயிண்ட் ஃபிலோமினா சர்ச், கோவா செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச், கோவை புனித அந்தோணியார் சர்ச் சென்றதுண்டு.

வேளாங்கண்ணி சிலுவைப் பாதையில் சிலர் செபம் சொல்லிக்கொண்டு வருவார்கள். 

மங்கள் வார்த்தை செபம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மேய்ப்பரின் வருகையைச் சுட்டி அக்கம் பக்கம் ஒளிரும் நட்சத்திரங்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

சுயம் எனும் சக்தி.

பூக்கின்ற  புதுவருடத்திலும்
புண்ணியத்தலம் , சுற்றுலாத்தலம்,
பாக்கள் ஊறும் பாற்குளம்
எங்கள் வலைத்தல(ள)மே..

புன்னகையோ மென்னகையோ
பூப்பந்தோ அணுகுண்டோ
வலைவீசிப் பூப்பிடிக்கும்
வலைப் பூவரசிகள்.

வியாழன், 31 டிசம்பர், 2009

தொடர்கிறது

ஒரு சுண்டல் காகிதமோ .,
வறுகடலைப்பொட்டலமோ.,
பஜ்ஜி தோய்ந்த பேப்பரோ .,
எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
எழுத்துக்களில் காதல் உனக்கு...
ஏழேழு பிறப்பிலும்..
நீ அதை தொடர்கிறாயா ..
அது உன்னைத்தொடர்கிறதா ..
தெரியவில்லை.. !!
பெட்டிக்கடையிலிருந்து .,
ஹிக்கின் பாதாம்ஸ் .,
லேண்ட்மார்க் .,பபாஸி வரை
எங்கெங்கும் நீ அதன் பின்னால்... !!
கருக்கலிலும் அந்தி இருட்டிலும்...
பின்னிரவிலும் மெழுகுவர்த்தி
தலை சுட்ட போதும் ...!!
அமேசானின் ஸாப்போவிலும்...
கின்டிலிலும்., கணினியின் கணப்பிலும்.,
செல்போனிலும் கூட
இடையறாது நேசிக்கிறாய் நீ...!!
படுக்கையறையிலும்.,
பாத்ரூமிலும்.,
ஏன் அலுவலகத்தில் கூட ....!!
Related Posts Plugin for WordPress, Blogger...