எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சாதனை அரசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனை அரசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.

திங்கள், 3 நவம்பர், 2014

சாதனை அரசிகள் என்னுரை :-

வாசகர்களுக்கு ,

வணக்கம்.

வாழ்வது ஒருமுறை. எதையாவது சாதித்துச் செல்லவேண்டும் என விரும்பினேன். இறைவன் அருளால் லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்தை சந்தித்தேன். அவரைப் போன்றே சாதனைப் பெண்களும் கிடைத்தார்கள் . இந்த சாதனை அரசிகளின் பின்புலத்தில் குடும்பத்தாரும், நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.. என்னைத் தன்னம்பிக்கைப் பெண்ணாக வெளிவரச் செய்த கிரிஜாம்மாவுக்கும் , மனம் உணர்ந்து பணம் தந்து புத்தகம் வெளியிடச் சொன்ன அன்புக் கணவருக்கும்., இந்தப் புத்தகத்தை தங்கள் பெயரில் வெளியிட முன்வந்திருக்கும் என் தாய்தந்தையருக்கும், என் அன்புக் குழந்தைகளுக்கும், அணிந்துரை தந்த என் அன்புத் தமிழன்னை சுசீலாம்மா அவர்களுக்கும்,  நட்புரை தந்த  அன்புத் தோழி  ஃபாத்திமா பாபு அவர்களுக்கும்,  புத்தக அட்டைப்படம் வரைந்து தந்த ஜீவாநந்தன் அவர்களுக்கும், புத்தக வடிவமைப்பில் உதவிய செல்வகுமார் அவர்களுக்கும், புத்தகம் வெளியிடும் கரிசல் மீடியா மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

திங்கள், 27 அக்டோபர், 2014

தாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-

தாய்மையின் பேரன்பில்.

ஒற்றை ஒளிக்கீற்றும் சில துளி மழையும் ஒளித்து வைத்திருக்கிறது வானவில்லை. மயில்தோகையாய் விரியும் வில்லிலிருந்து பெருகும் சொல் துளியால் கவிதை சமைத்துண்ணும் பெண்மைக்குக் கனவுகளே தானியக் கருவூலம்.

பால் நிலவு பொழியும் நீரில் பகுத்துண்டு நீந்தும் அன்னப்பட்சியாயிருத்தல் சுகம். காணும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு குணத்தில் இனம் கண்டு ஒரு துளி சுவைத்துப் பருகி சபரியாய்ச் சிறந்ததைக் கொடுக்கும் ஆசை.


நலங்கெடப் புழுதியில் விழுந்த நற்கனிகள் புதுப்பித்து எனதென்று அறியத்தருவது என் அன்பு.

புதன், 1 அக்டோபர், 2014

மக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்.



போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரைப் பேட்டிக்காக எங்கள் வீட்டிற்கு மூவரும் வந்தபோது எடுத்த புகைப்படம்.
நிலையில்லா உலகினில்
நிம்மதி நிழல் தேடிடும் வேளையில்
கடந்துவந்த காலத்தின் காற்று
கனலாய் இருக்கும் சில வேளைகளில்
அதில் கருணை மழையும் பொழிந்திடும்.
நம் பருவ வயதில் – அதில் காதல் இப்போதைக்கு
அது தேவையில்லை. ஆம் வாழ்க்கைப் பயணமோ
நம் பிறப்பு இறப்பு தண்டவாளத்தில் – நாம்
பிறந்துவிட்டோம் உழலும் உலகத்தில் –
சுகாதாரம் அதில் பாதி. சீர்கேடு அதன் மீதி
இறந்துவிடுவோம் எதிர்காலத்தில்
ஏதாவது செய்திடுவோம் பெயர் விளங்கும்
விதத்தில் சுயநலமின்றி- பொதுநலன் கருதி
செய்திடுவோம் இரத்த தானம்.
செத்தாலும் பார்த்துக் கொண்டிருப்போம்
சிறந்தது கண் தானம். உடல் உறுப்புகள்
தானம் – தம்பி ஹித்தேந்திரனே முன்னுதாரணம்
மண்ணுக்கும் போகாது நெருப்பிலும்
வேகாது நமது முழு உடல்தானம், மருத்துவ
ஆராய்ச்சி மகத்துவத்திற்கு சிறந்த சாதனம்
மனிதன் மனிதனுக்காகவே ! என்றும் மனித நேயத்துடன்
உலக அரங்கில்நமது நாடு. ஆமாம்
நிலையில்லா உலகினில் நமது செயல்
என்றும் நிலையானதோடு.

புதன், 24 செப்டம்பர், 2014

அகநாழிகை வெளியீடுகளும் எனது புத்தகங்களும் வாங்க.. இங்கேவாங்க.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

சென்னை:-

1. அகநாழிகை புத்தக உலகம் - சென்னை.  
2. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.
3. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.
4. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.
5. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.

மற்றும்

புதன், 18 ஜூன், 2014

என் முதல் புத்தக வெளியீடு பற்றி.. பரிவு இலக்கிய இதழில்

எழுத்து எனக்கு ஒரு முகம் கொடுத்தது. அதை என் புத்தக வெளியீடு அங்கீகரித்தது. அதனால் பத்ரிக்கைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் ,  சில சந்தர்ப்பங்களில் என்னிடமும் (  முக நூல் சர்ச்சைகள் பற்றியும், சாதனைப் பெண்கள் பற்றியும், சர்வதேச சினிமா பற்றியும் )  கருத்துக் கணிப்புக் கேட்டன.

ஒரு குடும்பத்தலைவியாய் இருந்து மத்திம வயதில் திரும்ப எழுத வந்து எனக்கான ஒரு இடத்தை வலைத்தளத்தில் பெற்றதே என்னுடைய கடின மற்றும் தொடர்ந்த உழைப்பின் பலனாகும். லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த நான் பேட்டி கண்ட போராடி ஜெயித்த பெண்களின் கதைகளைத் தொகுத்து  சாதனை அரசிகள் புத்தகமாக வெளியிட்டேன். என் அப்பா அம்மா பெயரில் பதிப்பித்தேன். மிக எளிதாக ஆரம்பித்த அந்த முயற்சி பலத்த அயற்சிகளுக்குப் பின் கடைசியில் மிக எளிதாக நிறைவேறியது.

என் புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துப் புத்தகத்தை அவர்கள் கையாலேயே வெளியிட எண்ணினேன். ஒருவரைச் சேர்த்தால் இன்னொருவரைக் கோர்க்க முடியவில்லை. நவம்பரில் முடிவான  புத்தகம் ஜனவரியில்தான் வெளிவந்தது. வெளியிட எண்ணிய நாளில் எல்லாம் ஏதோ ஒரு இடையூறு இருந்தது.

செவ்வாய், 17 ஜூன், 2014

சாதனை அரசிகள் பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.



மதிப்பிற்குரிய தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்..

நாம் தினம் வீதிகளில் பார்க்கும் முகங்கள்தான், அந்த முகங்களுக்குள்
எத்தனை வலிகள் , பயங்கள்., குறைகள்.அத்தனை தடங்கல்களையும் தாண்டி - ரம்யாதேவி என்ற ஃபீனிக்ஸ், மோகன சோமசுந்தரம் புற்றுநோய்ப்போராளி (A cancer warrior) , தலித் சமூதாய பெண்களுக்காக, அநாதரவாய் குரல் எழுப்பிய மணிமேகலை ரோட்டில் கிடப்பவருக்கு வாழ்வளிக்க தங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை ஒதுக்கிய சாருமதி, தமிழரசி, வெங்கடேசன், ஒன்பது பட்டம் நினைக்கவே பெருமிதம் கொள்ளச்செய்யும் ஆஸ்வின் ஸ்டாலின்,

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.

வலைப்பதிவராக அறிமுகமான திரு. இரத்தின வேல் ஐயா என்னுடைய கவிதைகளைப் படித்து வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிறந்ததைப் பகிர்வார்கள்.

என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே  உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.


/////நான் படித்த புத்தகம்.

சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

புத்தகத்தைப் பற்றி:

வெள்ளி, 15 மார்ச், 2013

கும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம் ”ங்கா”வும்.

கும்பகோணத்தில் ஃபிப்ரவரி 10, 2013  லிருந்து மார்ச் 10, 2013  வரையில் பவளம் ஹாலில் ( பரணிகா தியேட்டர் அருகில் ), பக்தபுரி தெருவில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அவர்களின் உரை..



 சாதனை அரசிகள் புத்தகம் ஜனவரி  8 அன்று ( பபாசியில் ) டிஸ்கவரி புத்தக நிலைய ஸ்டாலில் வெளியிடப்பட்டது. என் கணவர் வெளியிட முதல் காப்பியை நடிகர் மற்றும் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு . பாரதி மணி அவர்களும் , இரண்டாம் காப்பியை கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.

திங்கள், 8 அக்டோபர், 2012

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்து என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டுக் கடிதம் வந்தது. தினமலர் திருச்சி பதிப்பில் வெளிவந்த சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் பார்த்தபின் புத்தகம் வேண்டி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

“சாதனை அரசிகள்” விமர்சனம்

 இந்நூலை வாசித்ததும் எனக்கு ஓர் ஆச்சர்யம் ஏற்பட்டது. என்னவெனில் பெரும்பாலும் கவிஞர்கள் கற்பனை புனைந்து எழுதித்தான் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் இந்தக் கவியோ 17 பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பெண் சாதனையாளர்களின் உண்மைச் சம்பவங்களை முழுமையாகக் கேட்டு ஆராய்ந்து பின்பு அதை மாத்திரை வடிவத்தில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தொகுத்து அளித்திருப்பதுதான்.

திங்கள், 19 மார்ச், 2012

சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வெள்ளி, 2 மார்ச், 2012

நன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை அரசிகள் விமர்சனம்.)

கோமதி அரசு.. வலைப்பதிவர். ( வலைச்சரத்தில்)

////’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோபின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சாப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.

//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.


பாரதி மணி ஐயா..

இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சாதனை அரசிகளுக்கு நட்புரை நல்கிய நல்உள்ளம் பாத்திமா பாபு..


பல வருடங்களாக ., குறிப்பாக தொலைக்காட்சி என்று நாம் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே செய்தி வாசிப்பில் என்னைக் கவர்ந்தவர் பாத்திமா பாபு அவர்கள். ஷோபனாவும், சந்தியாவும் வாசித்த போதும் சிலரைப் பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுமல்லவா அந்த வகை இவர்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..


வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களில் சிலர் என் வலைப்பதிவை படித்து வருவதாலும், முகநூலில் நான் எழுதும் கவிதைகளைப் படிப்பதாலும் இந்த புத்தக வெளியீடு முடிந்தவுடன் ஆன்லைனில் புத்தகம் கிடைக்குமா என விசாரித்தார்கள். அதற்கான முயற்சியை தொடங்கலாம் என நினைக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...