அக்னியின் ரேணுகை:-
****************************
பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.
கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.
சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.
நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.
விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.
****************************
பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.
கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.
சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.
நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.
விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.
