எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 அக்டோபர், 2014

அக்னியின் ரேணுகை:-

அக்னியின் ரேணுகை:-
****************************

பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.

கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.

சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.

நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.

விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.

செவ்வாய், 22 ஜூலை, 2014

பீமனும் பாஞ்சாலியும்:-

பீமனும் பாஞ்சாலியும்:-
******************************

திருவிழாவில் கூத்துக் கட்டினாள்.,
கியாஸ் லைட்டின் வெப்பத்தில்
சுண்ணமிட்ட உருவத்தில்
பஞ்சமரும் வெஞ்சமரும் பொங்க..

காதலித்து விட்டுப் போனவன்.,
கட்டி முடித்து வெட்டி விட்டவன்.,
சித்தாளாய்ச் சேர்த்துக் கொண்டவன்.,
அறுத்தபின் கோர்த்துக் கொண்டவன்
முகமெல்லாம் முகம் வழியே
வர்ணங்களாய்ப் பிதுங்கி வழிய..

புதன், 18 ஜூன், 2014

என் முதல் புத்தக வெளியீடு பற்றி.. பரிவு இலக்கிய இதழில்

எழுத்து எனக்கு ஒரு முகம் கொடுத்தது. அதை என் புத்தக வெளியீடு அங்கீகரித்தது. அதனால் பத்ரிக்கைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் ,  சில சந்தர்ப்பங்களில் என்னிடமும் (  முக நூல் சர்ச்சைகள் பற்றியும், சாதனைப் பெண்கள் பற்றியும், சர்வதேச சினிமா பற்றியும் )  கருத்துக் கணிப்புக் கேட்டன.

ஒரு குடும்பத்தலைவியாய் இருந்து மத்திம வயதில் திரும்ப எழுத வந்து எனக்கான ஒரு இடத்தை வலைத்தளத்தில் பெற்றதே என்னுடைய கடின மற்றும் தொடர்ந்த உழைப்பின் பலனாகும். லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த நான் பேட்டி கண்ட போராடி ஜெயித்த பெண்களின் கதைகளைத் தொகுத்து  சாதனை அரசிகள் புத்தகமாக வெளியிட்டேன். என் அப்பா அம்மா பெயரில் பதிப்பித்தேன். மிக எளிதாக ஆரம்பித்த அந்த முயற்சி பலத்த அயற்சிகளுக்குப் பின் கடைசியில் மிக எளிதாக நிறைவேறியது.

என் புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துப் புத்தகத்தை அவர்கள் கையாலேயே வெளியிட எண்ணினேன். ஒருவரைச் சேர்த்தால் இன்னொருவரைக் கோர்க்க முடியவில்லை. நவம்பரில் முடிவான  புத்தகம் ஜனவரியில்தான் வெளிவந்தது. வெளியிட எண்ணிய நாளில் எல்லாம் ஏதோ ஒரு இடையூறு இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...