எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதிய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 டிசம்பர், 2018

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.


ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை

காந்தி தேசம், சுமங்கலித்திட்டம், நீர் மேலாண்மை வாழ்வியல் விதைகள் ஆகிய காத்திரமான கட்டுரை நூல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல  பத்ரிக்கையாளர் திருமலை அவர்களும், குடிநீர்வாரியத்தில் தணிக்கை உதவியாளராகப் பணியாற்றியவரும் குடிநீரில் ஃப்ளூரைடு கலந்திருப்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கைசெய்து நூலாக அளித்தவருமான கே கே என் ராஜன் அவர்களும் இணைந்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு இது. புதிய தரிசனம் வெளியீடு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஆர். நல்லக்கண்ணு காத்திரமான முன்னுரை அளித்துள்ளார்.

மணல் கொள்ளையினால் மரணத்தை நோக்கிச் செல்லும் ஆறுகள், தண்ணீரை சேமிப்பதில் மணலின் பங்கு, மணற் கொள்ளையில் ஆற்றோரங்களில் குடி இருப்பவர்களின் அறிந்தும் அறியாமலுமான பங்கு, மணலின் தேவைகள் குறித்துப் பேசுகின்றன கட்டுரைகள்.

திங்கள், 29 மே, 2017

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனம் ஸ்பெஷல் இதழில் என்னுடைய கூலம் கவிதை,

விழிப்புணர்வுக்கோலங்கள்,

செவ்வாய், 2 ஜூன், 2015

எரு முட்டை. ( புதிய தரிசனம் )


ரு முட்டை :-

ணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எரு முட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப் போலாகி ஒளிரும் நெருப்பின் முன் சாம்பல் நிற இருளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். கண்ணீர்க் கோடுகள் தீயாய் நீண்டு மண்ணில் சொட்டுச் சொட்டாக விழுந்து லேசாக மண் வாசத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

திங்கள், 19 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

  1. அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.

அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31  புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.

தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

செவ்வாய், 9 டிசம்பர், 2014

நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.

1.உன் நினைவு மகரந்தத்தோடு
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.

***********************************

2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..


**************************************
 
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..

***************************************

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

செவ்வாய், 22 ஜூலை, 2014

பீமனும் பாஞ்சாலியும்:-

பீமனும் பாஞ்சாலியும்:-
******************************

திருவிழாவில் கூத்துக் கட்டினாள்.,
கியாஸ் லைட்டின் வெப்பத்தில்
சுண்ணமிட்ட உருவத்தில்
பஞ்சமரும் வெஞ்சமரும் பொங்க..

காதலித்து விட்டுப் போனவன்.,
கட்டி முடித்து வெட்டி விட்டவன்.,
சித்தாளாய்ச் சேர்த்துக் கொண்டவன்.,
அறுத்தபின் கோர்த்துக் கொண்டவன்
முகமெல்லாம் முகம் வழியே
வர்ணங்களாய்ப் பிதுங்கி வழிய..

புதன், 2 ஜூலை, 2014

வண்ணப் பயணங்கள்.

தினமும் எதையோ
விற்பவனைப் போல
இறக்கை மணியடித்தபடி
உள்நுழைகிறது பட்டாம் பூச்சி.

சுற்றிச் சுற்றிப் பறந்து
திருடுகிறது
என் நேரத்தை.

புதன், 7 மே, 2014

புதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.

புதிய தரிசனம் இணைய இதழில் அன்ன பட்சி பற்றிய நூல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

////அன்ன பட்சி

அன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

வீடு ரேகையும் விதையான சீதையும்.

வீடு ரேகை
கால் சுற்றிக் கிடக்கிறது
பாம்பாய்.
காலடி எடுத்து
வைக்கும் போதெல்லாம்
தடுக்கி விடுகிறது
சுவர்கள் அரண்களாய்
ஆரண்யத்திலும்.

புதன், 26 பிப்ரவரி, 2014

நங்கூரம்.


தத்தளிக்கிறது கடல்.
தடுமாறுகிறது படகு.
மெசையாவோ ஆணிகளுக்குள்.


பூக்கும் ரத்தத் துளிர்களைக்
கூந்தலில் துடைத்தபடி மகதலேனா.,
மாசுமறுவற்ற பாசத்தோடு.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா என்பது திருவிளையாடல் காலத்துக் கேள்வி.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஆயில் உபயோகித்தாலும்  கூந்தலின் ஆயுள் என்பது டி என் ஏ தீர்மானித்ததுதான் எனத் தோன்றுகிறது.  கூந்தலுக்கு நறுமணம் உண்டா எனக் கேட்க வேண்டாம். முதலில் கூந்தலே உண்டா எனக் கேட்கலாம். எல்லாருமே அநேகமா குட்டையாக முடி வெட்டிங். பேபி கட், பாய் கட் என.

திங்கள், 20 ஜனவரி, 2014

நவதானிய சமையல் குறிப்புக்கள். புதிய தரிசனத்தில்.

1. கவுனரிசி:-

தேவையானவை:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

வியாழன், 2 ஜனவரி, 2014

கீரை வெரைட்டீஸ்.. புதிய தரிசனத்தில்.

கீரை வெரைட்டீஸ்..:-
*****************************

கீரை சாப்பிடணும்னா ஓடுறவரா நீங்க.. இந்த கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்லுவீங்க..

நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு , அப்புறம் இரும்புச் சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்கு தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம்.  அதுக்குன்னு கீரை போண்டா., கீரை கட்லெட். கீரை வடைன்னு எண்ணெயில குளிச்சு எந்திரிக்காம. சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்கள் பத்திப் பார்ப்போம்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

முகுளம்.

முகுளம்.
****************
மடிப்புகள் கொண்ட
முகுளமாய்
பசியரேகைப்
பள்ளங்களோடு குளம்.

வியாழன், 19 டிசம்பர், 2013

கருணை :-

கருணை:-
****************
காய்கறிகளைக் கழுவும்
வீட்டுக்காரி கையிலிருந்து
விடுபட்டு செம்மண்ணில்
வீழ்கிறது பொடிக்கருணை.

வியாழன், 24 அக்டோபர், 2013

அக்கா வனம் புதிய தரிசனத்தில்..

பட்டாம்பூச்சிகளாய்ப்
பறந்து திரிந்தோம்
அக்கா வனத்தில்.

இறக்கைகள் தடவி
காற்றாய்ப் பின் தொடர்ந்து
சிரிப்பாள் அக்காளும்.

அவள் கலகலத்துக்
கொத்துக் கொத்தாய்ச்
சிரிப்பதைப் பூக்கள் என்பார்கள்,

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.

எல்லாப் பிறப்பும்..:-
**************

வாஸ்துவுக்காய்
வைத்திருக்கும் தொட்டியில்
அழகு மீன்கள்
சுவாசிக்கமுடியாமல்
மரிக்கின்றன.

இலைகள் விழுகின்றன என
என் வீட்டு மரத்தின்
கிளைகளைக் கோபமாய்
வெட்டுகிறார்கள்
அண்டை வீட்டார்,
Related Posts Plugin for WordPress, Blogger...