ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை
காந்தி தேசம், சுமங்கலித்திட்டம், நீர் மேலாண்மை வாழ்வியல் விதைகள் ஆகிய காத்திரமான கட்டுரை நூல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல பத்ரிக்கையாளர் திருமலை அவர்களும், குடிநீர்வாரியத்தில் தணிக்கை உதவியாளராகப் பணியாற்றியவரும் குடிநீரில் ஃப்ளூரைடு கலந்திருப்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கைசெய்து நூலாக அளித்தவருமான கே கே என் ராஜன் அவர்களும் இணைந்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு இது. புதிய தரிசனம் வெளியீடு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஆர். நல்லக்கண்ணு காத்திரமான முன்னுரை அளித்துள்ளார்.
மணல் கொள்ளையினால் மரணத்தை நோக்கிச் செல்லும் ஆறுகள், தண்ணீரை சேமிப்பதில் மணலின் பங்கு, மணற் கொள்ளையில் ஆற்றோரங்களில் குடி இருப்பவர்களின் அறிந்தும் அறியாமலுமான பங்கு, மணலின் தேவைகள் குறித்துப் பேசுகின்றன கட்டுரைகள்.










