என்ன சமையலோ..
கல்யாணம் ஆன புதுசுல கணவன் மனைவிகிட்ட ஆசை ஆசையாக் கேட்டான், ”உனக்கு என்னெல்லாம் சமைக்கத் தெரியும். ”.
மனைவி சொன்னா ”எனக்கு நூடுல்ஸ் சமைக்கத் தெரியும்.”.
கணவன் சொன்னான் “ அத நான் கூட செய்வேனே.. வெந்நீர் கொதிக்க வைச்சு அதுல நூடுல்ஸைப் போட்டா வெந்திரும் அதென்ன கம்பசித்திரமா . ”
மனைவி சொன்னா “அதேதாங்க எனக்கும் வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். அதுல நூடுல்ஸைப் போட்டுக் கொதிக்க வைச்சு சாப்பிடுவேன்.” இதக் கேட்டு அந்தப் புருஷன் முகம் போன போக்கைப் பார்க்கணுமே..
ஏன் சமையல் என்பது பெண்ணுக்கும் மட்டும்தான் எழுதி வைச்சிருக்கா. அதை ஆண் பெண் இருவருமே செய்யலாம். என்ன விஷயம்னா. இந்தக் காலத்துல பையன் பெண் இருவருமே படிக்கிறதாலயும் வேலைக்குப் போறதாலயும் சமையல் கத்துக்குறதுமில்லை. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுமில்லை. கணவனும் மனைவியும் அவங்க அவங்க வேலை செய்யிற இடத்துல இருக்க உணவகத்துலேயே உணவை வாங்கி சாப்பிட்டுட்டுப் படுக்க மட்டும்தான் வீட்டுக்கு வர்றாங்க.