எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவள் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவள் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2015

வலம்புரியாம்.



எல்லாம் குப்பை. !
எழுதாதே என்று சொல்ல
உனக்கேது அதிகாரம்
சர்வாதிகாரம்,
அதி காரம்.

அனைத்தும் வலம்புரியானால்
வல்லமை இழந்துபோகும்

முத்துக்கள் சித்தித்தால்
விட்டெறியவா முடியும்.?

திங்கள், 25 மே, 2015

கூண்டுக்கிளி




கூண்டுக்கிளி:-
=================
அவள் தங்கக் கூண்டுப் பறவை. விநாயகா மில்ஸின் ஓனர் விஸ்வநாதனின் மகள் விசித்ரா.

அந்த ஆவேசக் கோஷங்கள் அவளுக்குப் புதியவை. அவளுக்கு ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது இப்படியெல்லாம் கொடுமைகள் உண்டாவென்று. தானும் ஊர்வலம் போகும் அந்தப் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாய் நினைத்துப் பார்த்தாள். அது சுலபத்தில் நடக்கக் கூடியதில்லை. டாடி பார்த்தால் தன் மானமே போய்விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். மம்மியை நினைத்தவுடன் பிடரியில் வியர்த்தது அவளுக்கு.

அந்தப் பெண்கள் ‘லோயர் மிடில்’ வகுப்பைச் சார்ந்தவர்கள். சேலை அணிந்து கொண்டிருந்த அவர்கள் பெண் எரிப்பையும் வரதட்சணையையும் கண்டனம் செய்து கொண்டு சென்றார்கள்.

போர்டு வாசகங்கள், “ பெண் எரிப்பை ஒழிப்போம்” எனக் கூப்பிட்டன.

“ வாங்காதே.. வாங்காதே.. வாலிபமே.. வரதட்சணை வாங்காதே. “

கொடுக்காதே கொடுக்காதே பெண்குலமே வரதட்சணை கொடுக்காதே.. “

”பொறுத்தது போதும் பெண்ணே பொங்கி எழு..”

”பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசப் புத்தகங்கள் விளம்பரங்கள் படங்களைக் கொளுத்து. “

அவர்களின் வார்த்தைகள் சத்தியமானவையாய் வந்து காதை அறைந்தன. டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணியதும்தான் தான் உறைந்து போயிருப்பது அவளுக்கு உறைத்தது.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.



உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து  ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார்.  ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள்  இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

அக்னியின் ரேணுகை:-

அக்னியின் ரேணுகை:-
****************************

பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.

கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.

சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.

நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.

விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.

Related Posts Plugin for WordPress, Blogger...