**பப்பு மம்மு பிசைந்து
புஜ்ஜுவுக்கு ஊட்டும்
பாட்டியின் கன்னமெங்கும்
பப்பு மம்மு.
**பாண்டவர்களுக்குப் பன்னிரெண்டு
ராமனுக்குப் பதினான்கு
எனக்கு நானே
விதித்துக் கொள்ளும் ஆரண்யவாசம்
ஆயுள் வரை.
**பப்பு மம்மு பிசைந்து
புஜ்ஜுவுக்கு ஊட்டும்
பாட்டியின் கன்னமெங்கும்
பப்பு மம்மு.
**பாண்டவர்களுக்குப் பன்னிரெண்டு
ராமனுக்குப் பதினான்கு
எனக்கு நானே
விதித்துக் கொள்ளும் ஆரண்யவாசம்
ஆயுள் வரை.
**நீரற்ற உலகில்
வாழக் கற்கிறேன்
நீரற்ற உலகில்
வாழப் பழகுவேனா.
**ஒளிந்து ஒளிந்து
உன்னை ரசிக்கிறேன்.
திருட்டுக் கண்காணிப்புக்கும்
ருசி அதிகம்தான்.
**டாட்டூப் பட்டாம்பூச்சி வரைந்து
அழகுபடுத்துகிறாய்.
வெட்கித் தலைசாய்ந்து
தோளசைக்கும்போதெல்லாம்
சிறகசைக்கின்றன பட்டாம்பூச்சிகள்.
**கூடு என்னுடையதுதான்
கோபித்துக்கொண்டு
கட்டியிருக்கிறேன்
உன்னுடைய மரத்தில்
**கவிதை மயிலாடக்
காதல் மேகம் பொழிய
மனமெங்கும் மழை.
**வலமும் இடமும்
தலையை ஆட்டிப்
பிடிவாதமாய் உதடு இறுக்கி
பாராமல் பார்க்கும்போது
விருட்டென அணைத்து
விழுத்தாட்டிச் செல்கிறாய்
கொத்தும் முத்தத்தால்.