எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கருணாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2016

சாட்டர்டே போஸ்ட். ஆணென்ன பெண்ணென்ன , கார்ப்பரேட் யுகம் பற்றிக் கருணாகரன்.

பெ. கருணாகரன் 
புதிய தலைமுறையின் இணையாசிரியர், அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின என்ற நூலின் ஆசிரியர், இன்னும் சில கவிதை, கதை , கட்டுரை நூல்கள் எழுதியவர் , பல்வேறு இலக்கிய விருதுகள்  வாங்கியவர் என்பதையெல்லாம் விட முகநூலில் எனது மதிப்பிற்குரிய நண்பர் கருணாகரன்.  இவரது தினப்படி போஸ்டையும் கர்ணாவின்  ( மழைக் கவிதை ரொம்ப ஸ்பெஷல் ) கவிதைகளையும் அவ்வப்போது படிப்பதுண்டு. சினிமாப்பாடல் மெட்டுகளில் உடனடியாகப் பாடல் இயற்றும் இன்ஸ்டண்ட் கவிஞர் !

சிரியஸ் மற்றும் சீரியஸான விஷயங்களையும் அநாயாசமாகத் தொட்டுச் செல்லும் இவரது எழுத்து. பதின் பருவப் பிள்ளைகளின் பிரச்சனையாகட்டும், இணைய உலகப் பயன்பாடாகட்டும் இயற்கைப் பேரிடராகவோ, அரசியல் அக்கப்போராகவோ இருக்கட்டும் இன்னும் பலப்பல விஷயங்களையும் தன்னுடைய பாணியில் தருவதில் தனித்துவமிக்கவர்.  மிக எளிமையானவர், மிக இனிமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.  நேர்பட உரைப்பதில் சிறந்தவர்.

இவரிடம் நமது வலைத்தளத்துக்காக சாட்டர்டே போஸ்ட் ஒன்று எழுதித்தரும்படிக் கேட்டவும் அரசியல் நிலவரங்களால் அரக்கப் பரக்க வேலை செய்து கொண்டிருக்கும் இந்நிலையிலும் நட்புக்காக இதை எழுதிக் கொடுத்துள்ளார். மிகச் சீரிய சிந்தனை ஆனால் முடிவில் எனது கருத்தையும் சொல்கிறேன் கருணா.

/// கருணா, இன்று உங்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு விஷயத்தை முகநூலில் பதிவிடாமல் எனக்காக என் வலைத்தள சாட்டர்டே போஸ்டுக்குத் தாருங்கள். இப்பவே. :) ///

நாலு பாரா போதும் ப்ளீஸ் எனக் கேட்டுக் கொண்டவுடன் எட்டுப் பாராவே எழுதி அனுப்பி விட்டார். நன்றி கருணா.

திங்கள், 18 நவம்பர், 2013

பகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.

புதிய தலைமுறையின் ஆசிரியர் பெ கருணாகரன் எழுதிய “அமேசான் காடுகளும் சகாரா பாலைவனங்களும்” புத்தகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருதும் , எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ஜி யூ போப் விருதும் குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...