”இதழில் எழுதிய கவிதைகள் ” அப்பிடின்னு தில்லா புத்தகம் போட்டவர் நம்ம வலை உலக சகோ சதீஷ் சங்கவி. ( மனைவி விமலா ரொம்ப ரொம்ப நல்லவங்க .. ) சங்கவிகிட்ட உங்க முதல் காதல் எதுன்னு கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டுருக்கேன். என்ன அக்குறும்புன்னா புள்ளயோட அப்பிராணி மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கிற சங்கவி ஒரு புள்ளய சுத்திச் சுத்திக் காதலிச்சுருக்காரு. இப்ப இல்ல.. அட அது சின்ன வயசுலப்பா..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 12 அக்டோபர், 2013
வியாழன், 14 பிப்ரவரி, 2013
காதல் கசப்பா இனிப்பா..
காதல் கசப்பா இனிப்பா..
இன்னிக்கு வாலண்டைஸ் டே..
நாமளும் எதுனாச்சும் கவுஜ சொல்லணும்னு பார்க்குறேன். அல்லது கருத்து பகிரணும்னு பார்க்குறேன்.
ரோசிச்சு ரோசிச்சு வயசான மாதிரி ஆயிடுச்சு..
"நம் தோழியி"ல் போட்டபடி
"காதலுக்கு தூது சென்றேன் . உதைத்தார்கள்." "அத்தைமகனும் தோழியும் பின்ன நானும்" என்றெல்லாம்
காதலுக்காவது தூது போயிருக்கமான்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை.
வியாழன், 21 ஜூலை, 2011
காஃபி...
விஷ்..விஷ் என வடிவேலு போல சப்தமெழுப்பினார் என் கணவர்.. அட அவர் விஷ் மட்டும் தான் வடிவேலு போல .. ஆனா ஆள் அந்தக்கால பாலாஜி., அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..
அது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..
கொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..
அது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..
கொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..
வெள்ளி, 4 மார்ச், 2011
பூவாய் நீ...
பூவாய் நீ..
நினைவின் தோட்டம்.. காதல் கோட்டம்..
எப்போதாவது என்னை நினைப்பாயா.. உன் நறுமண உலகில்தான் நான் இறகாய் சுழல்கிறேன். நிற்காத சுழற்சி.
சின்னஞ்சிறு பூக்களாய் விரிந்து கிடக்கிறது நினைவு.. உன்னையும் ஒரு பூவாய்த்தான் பார்த்தேன்.. முள்ளோடு கூடிய பூ.. அதற்குத்தானே கிராக்கி அதிகம்.. நீ புன்னகைத்ததை விட குத்தி காயமாக்கியதே அதிகமாய் இருக்கும்..
அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..
அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..
செவ்வாய், 21 டிசம்பர், 2010
தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..
1. தேனீர் தாகம்..
**************************
சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,
வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..
**************************
சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,
வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..
திங்கள், 20 செப்டம்பர், 2010
நீ என்பதான ஒன்று..
எங்கு சென்றாலும் உன்னையும்
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...
எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..
நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...
எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..
நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...
திங்கள், 6 செப்டம்பர், 2010
நதியலையில் ஆடும் நிலவு....
ஒளிந்தும் கரைவதுமான
விளையாட்டில் நீ....
நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
பிம்பமென அறியாமல்...
நீ நிஜம் போலிருக்கிறாய்..
காலை வரை..
பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
மழுங்கின இதயத்தோடு..
மாலைப் பொழுதின் மயக்கத்தில்
பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..
உணர்வுப் பெருக்கில்
உன் வரவுக்காகக் காத்து நான்..
விளையாட்டில் நீ....
நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
பிம்பமென அறியாமல்...
நீ நிஜம் போலிருக்கிறாய்..
காலை வரை..
பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
மழுங்கின இதயத்தோடு..
மாலைப் பொழுதின் மயக்கத்தில்
பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..
உணர்வுப் பெருக்கில்
உன் வரவுக்காகக் காத்து நான்..
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
நான் சிவகாமி....!!!
நான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..
எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..
என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..
எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..
என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..
புதன், 21 ஜூலை, 2010
முகம்......
என்னைச் சுற்றிலும் ஒராயிரம் முகங்கள்.. உனக்கு நானும் ஒரு முகம்.. வெறும் அறிமுகம்..
கார்பனும் ஹைட்ரஜனுமான மூலக்கூறின் கலவை தானே உனது முகமும் என்றது எனது அகந்தை... மென்மையாய் அழகாய்., ஓராயிரம் அல்ல லட்சம் கவிதைகள் எழுதலாம் என்றது மனம்..ஒரு ஒளியைச் சிந்தி ., பூவாய் விரிந்து., குழந்தையைப் போலானதாய்..
சாயங்கால மஞ்சள் கிரணமாக., காலை நேர இசைவகுப்பின் ஒலிக்குறிப்பாக.,இரவின் தண்ணென்ற பால் ஒளியாக ஒரு தீபத்தை ஏந்தி இருக்கிறது உன் முகம்.. சமயத்தில் கனிவாகவும்.. சமயத்தில் உக்கிரமாகவும்..
சாயங்கால மஞ்சள் கிரணமாக., காலை நேர இசைவகுப்பின் ஒலிக்குறிப்பாக.,இரவின் தண்ணென்ற பால் ஒளியாக ஒரு தீபத்தை ஏந்தி இருக்கிறது உன் முகம்.. சமயத்தில் கனிவாகவும்.. சமயத்தில் உக்கிரமாகவும்..
திங்கள், 19 ஜூலை, 2010
கசியும் மின்சாரம்...
பஞ்சாமிர்தமும் தேனுமாய்
வழிகிறது உன் சிரிப்பு..
திகைத்து நிற்கும்
தெய்வச்சிலையாய் நான்..
பூக்களின் இதழ்கள் உண்டு..
இதழ்களில் பூக்கள்
விரியப் பார்த்தது உன்னிடம்தான்..
கன்னக் குழியின் கள்ளச் சிரிப்பு
கைப்பிடி பதித்த .,கற்கள் ஜொலிக்கும் .,
குறுவாளாய் மினுமினுக்க..
வழிகிறது உன் சிரிப்பு..
திகைத்து நிற்கும்
தெய்வச்சிலையாய் நான்..
பூக்களின் இதழ்கள் உண்டு..
இதழ்களில் பூக்கள்
விரியப் பார்த்தது உன்னிடம்தான்..
கன்னக் குழியின் கள்ளச் சிரிப்பு
கைப்பிடி பதித்த .,கற்கள் ஜொலிக்கும் .,
குறுவாளாய் மினுமினுக்க..
செவ்வாய், 29 ஜூன், 2010
பிடிவாதமும் பிடிமானமும்
சாயங்காலங்களில் சம்புடங்கள் திறந்து
அம்மா தரும் இனிப்பாய்..
தினம் உன் குரலை எதிர்பார்த்து..
பேதையை மயக்கும்
போதையாய் உன் குரல்..
திறந்திடு சீசேம் என
காட்டிவிட்டு மறைந்தாய்...
அற்புதக் குகையே என்னை
உள்வைத்து மூடிவிடு..
கடவுச்சொல் மறந்து கிடக்க..
அம்மா தரும் இனிப்பாய்..
தினம் உன் குரலை எதிர்பார்த்து..
பேதையை மயக்கும்
போதையாய் உன் குரல்..
திறந்திடு சீசேம் என
காட்டிவிட்டு மறைந்தாய்...
அற்புதக் குகையே என்னை
உள்வைத்து மூடிவிடு..
கடவுச்சொல் மறந்து கிடக்க..
புதன், 2 ஜூன், 2010
கிருஷ்ணப் ப்ரேமி
பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...
நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?
இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...
நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?
இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி
வியாழன், 20 மே, 2010
பற்று வரவு (பத்துவரவு)
பட்டுப்பூச்சி இறக்கையாய்
படபடக்கும் இமையில்
ஒரு நூறு முத்தம்..
நான் நூறு கொடுத்தால்
அது ஒன்று....!!!
ஈரமும் கருணையும்
விகசித்துக் கிடக்கும்
உன் இள இமைகளில்
இதுபோல் ஒரு நூறு..
படபடக்கும் இமையில்
ஒரு நூறு முத்தம்..
நான் நூறு கொடுத்தால்
அது ஒன்று....!!!
ஈரமும் கருணையும்
விகசித்துக் கிடக்கும்
உன் இள இமைகளில்
இதுபோல் ஒரு நூறு..
செவ்வாய், 18 மே, 2010
புனர் ஜென்மம்
உன் அழகான புன்னகையுடன்
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..
ஞாயிறு, 16 மே, 2010
ஸ்க்ரீன் ஸேவர்
ரீசார்ஜ் செய்தாயிற்று.,
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..
குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..
குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..
சனி, 15 மே, 2010
கைப்பிடிக்குள் பசு
ஜென்ம ஜென்மமாய் என்னுடன் நீ வருகிறாய்
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..
உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..
காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..
உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..
காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..
புதன், 5 மே, 2010
அன்பின் வண்ணமே
பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..
கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..
கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..
திங்கள், 3 மே, 2010
நான் என்ற எல்லாம்
பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..
உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...
தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..
என் மேல் நீ விழுந்தாய் ..
உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...
தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
அடுத்த தடத்துக்காய் ..................
உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..
கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....
உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..
கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....
உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,
புதன், 28 ஏப்ரல், 2010
நான் நிலவு
துரத்தத் துரத்தத்
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...
யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...
தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...
யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...
தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)