எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அணிந்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணிந்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2022

தான் கருணை இல்லக் குழந்தைகளின் மூத்தோர் தினவிழாக் கட்டுரை நூலுக்கான அணிந்துரை

 மூத்தோர் தினவிழாக் கட்டுரைப் போட்டி

சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி மதுரை தானம் அறக்கட்டளை வெளியிட்ட கட்டுரைப் போட்டி நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு அமைந்தது.

நிலக்கோட்டை தான் கருணை இல்லக் குழந்தைகளின் கருணையும் காருண்யமும் பொதிந்த கட்டுரைகள் படித்துக் கண்கள் கசிந்தது நிஜம். முதியோர்களைப் பாதுகாக்கவும், முதியோர் நலன் பற்றியும் ஆக்கபூர்வமாய் ஆலோசனைகள் வழங்கி நம்பிக்கை தந்த குழந்தைகளுக்கு அன்பு &
வாழ்த்துக்கள்

முதியோர் நலனில் அக்கறை கொண்டு இந்நூலை ஆக்கம் செய்த தானம் அறக்கட்டளைக்கும் திரு. பகவதி திருமலை சார் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்
& நன்றிகள்.

தான் கருணை இல்லக் குழந்தைகளின் கட்டுரைகள்.

தான் கருணை இல்லம் நிலக்கோட்டை

முகவுரை

அணிந்துரை:-

தான் கருணை இல்லக் குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிப்பியின் முத்துக்கள். பள்ளியில் பயிலும் வயதிலேயே தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மாணாக்கரும் வடித்திருக்கும் கட்டுரைகள் அதி சிறப்பு. இந்நூலில் சிறார்களுக்குச் சிறார்களின் கட்டுரைகளே ஞானக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாக அமைந்திருக்கின்றன.

”முதியவர்களை மதிப்பவர்கள் வெற்றியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள்” என்பது ஆப்ரிக்கப் பழமொழி. ”மூத்தோர் சொல் அமிர்தம்” என்பது தமிழ் மொழி. அதை வழிமொழிகிறது செல்வி ஜெயஸ்ரீயின் கட்டுரை. முதியோர்கள் நமது வழிகாட்டிகள் என்று முத்தாய்ப்பாய்க் கூறி இருக்கிறார்.

திங்கள், 29 அக்டோபர், 2018

கூட்டாஞ்சோறு – அணிந்துரை.


கூட்டாஞ்சோறு – அணிந்துரை.

நிஜமான கூட்டாஞ்சோறு என்றால் இது தான். புதுக்கவிதைகள் மட்டுமல்ல. மரபுக்கவிதைகளும் வெண்பாக்களும் க்ளெரிஹ்யூக்களும் கூட கூட்டாஞ்சோற்றில் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை ஆக்கிரமிப்பு, விவசாயம், வான்பொய்த்தல், மழை, தரிசு, வெள்ளாமை, காதல், பாசம், காமம், உறவுகள், மூன்றாம் பாலினத்தவர், கிராமம் எனப் பல்வேறு பாடுபொருட்களுடன் துலங்குகின்றன கவிதைகள். அனைத்துக் கவிதைகளையும் பக்குவமாக ருசியான ஒரே கூட்டாஞ்சோறாக்கிய இம்மாபெரும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

கலக்கல் ட்ரீம்ஸின் வெளியீடான இதில் பதினாறு கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். தன சக்தி, சீதா, ஸ்வேதா, கார்த்திக் மணி, ராம் சங்கரி, காயத்ரி அருண்குமார், கிருபாஷினி, மதுவதனி, கரிக்கட்டி கவிராயர், ஸ்ரீபுஷ்பராஜ், தமிழ்த்தென்றல், சாயா சுந்தரம், அனுசரன், கடவுளின் ரசிகன், மதுரை சிக்கந்தர், வைகை ராஜீவ் ஆகியோர்.

புதன், 4 ஜனவரி, 2017

கசியும் மௌனம்- மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கு முன்னுரை.



ூடியிரைவில் வெளிவ இருக்கும் அன்பத்ங்கை மீக்கா ஃபாருக்கின் கிை நூலுக்கானுன்னுரையை எழி ஓரிரு வுடங்கள் ஆகிறு. அை இங்கே பிர்வில் மிழ்ிறேன். பத்ம் ச்கிரம் விவந்து வெற்றியையாழ்த்ுகள். அன்பும் மிழ்ச்சியும் மீக்கா :)

 தமிழ்ப் பெண்களின் வாழ்வியலை அதன் உயிர்த்துடிப்பை இவ்வளவு அருமையாக ரத்தமும் சதையுமாகப் பகிர முடியுமா என வியக்க வைக்கிறார் மலீக்கா ஃபாரூக். என் வலைப்பதிவ சகோதரியான இவர் நீரோடை என்ற வலைப்பதிவு மூலம் அறிமுகம். கன்னடக் கவிஞர் பி லங்கேஷின் கவிதைகளைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு இவரின் கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. 

நிறைய விருதுகள் பெற்றிருக்கும் இவர் இந்நூலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் திருமணமான பெண்ணின் மனையியலையும் மனவியலையும் பேசுகின்றன கசியும் மௌனம் மூலம். ஓரிரு கவிதைகள் ஆண்களையும் தாங்கிப் பிடிக்கின்றன. 

ஆணின் அத்தனை
லாமுக்கு அடியிலும்
ஆரா சுமையின்
லாடங்கள் அடித்திருப்பதை “

“ஆண் மகன் அழுவது
அழகல்ல என்ற காரணத்தால் “

“அன்பிருந்தும்
அதை அழுத்தி அழுத்தியே
அழுத்தக்காரனாய் ஆக்கப்பட்டதென”

புதன், 16 ஏப்ரல், 2014

அன்ன பட்சி - அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மா.

நன்றி அதீதம் சிறப்பான முன்மொழிதலுக்கு. :-





 மிக்க நன்றி சுசீலாம்மா..


////எம்.ஏ.சுசீலா
[எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,தமிழ்ப்பேராசிரியர்-பணி ஓய்வு(பாத்திமாக்கல்லூரி)]
:

அன்னப்பட்சியை நீவியபடி…..

*கொப்பளித்துப் பெருகும் உற்சாகமும் மலர்ச்சியும் கொண்ட பதின்பருவத்துப் பெண்ணாக, வேதியல் மாணவியானாலும் சமகாலப்படைப்புக்களின்பால் தணியாத தாகம் கொண்ட வாசகியாக, தினம் ஒரு கவிதையை எழுதிப் பார்த்தபடி மலர்ந்து கொண்டிருக்கும் துடிப்பான படைப்பாளியாக….இப்படிப் பல பரிமாணங்களில் ‘80களில் எனக்கு அறிமுகமாகியிருந்த என் அன்பு மகளும் மாணவியுமான தேனம்மை லட்சுமணனின் இன்றைய வளர்ச்சிக்கு உரைகல்லாகக் கைகளில் தவழும் ’அன்னப்பட்சி’யைப் பரிவோடு நீவித் தந்தபடி இந்த அணிந்துரை……

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அன்னப்பட்சியை நீவியபடி... எம். ஏ, சுசீலாம்மா..

இன்று எனது கவிதைத் தொகுப்பு  “அன்ன பட்சி ” சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகை பதிப்பகத்தில் அரங்கு எண் . 666., 667 இல் கிடைக்கும்.

அனைவருக்கும்
இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். !
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.!

கல்லூரியை விட்டு வந்து பல வருடங்களான பின்பு போன மாதம்தான் சுசீலாம்மாவை அவரது கோவை வீட்டில் சந்தித்தேன்.துருப்பிடித்துக் கிடந்த நான் தொடர்ந்து இயங்குவதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

திங்கள், 25 நவம்பர், 2013

முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்துரை.


ஆதிமனிதனின் விலாவிலிருந்து செதுக்கப்பட்டவள் பெண். ஆப்பிளைக் கொடுத்து மனிதனுக்குள் காதலை இழைத்தவள் பெண். கர்ப்பத்தில் உதித்து கர்ப்பக்கிரகத்தில் அடைத்தாலும் கர்ப்பம் சுமந்து காத்து ரட்சிப்பவள் பெண். அம்மா, சகோதரி தோழி எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும் காதலியாகவும் மனைவியாகவும் கொஞ்சியும் கடிந்தும் ஊடல் செய்தும் ஆணைப் பைத்தியமாக்குபவள் பெண்.
Related Posts Plugin for WordPress, Blogger...