எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுவர்மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர்மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜூன், 2021

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.


ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யும்போது ஏன் செய்தார்கள் என்று அறிந்துகொண்டோமானால் நமக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பு சிறிதாவது குறையும்.இப்படித்தான் கேகய நாட்டு மன்னனும் தயரதனின் மனைவியுமான கைகேயி அனைவராலும் வெறுக்கப்பட்டாள். ஆனால் அவள் மகன் ராமனோ அவளுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினான். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தியே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் இல்லங்களைக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலேயே பம்பையும் எக்காளமும் ஒலிக்க அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவர்கள் சக்கரவர்த்தி தயரதன் தன் இளவல் ராமனுக்கு முடிசூட்டப் போகிறார். அந்த இனிய காட்சியைக் காண அரண்மனை நோக்கி சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

வியாழன், 11 மார்ச், 2021

அமரன் ஆன அங்காரகன்

அமரன் ஆன அங்காரகன்

ஒருவர் பிறந்தபோதே தாயும் தந்தையும் கைவிட்டாலும் பயிற்சியாலும் முயற்சியாலும் சாகாவரம் பெற்ற தேவர் ஆகமுடியுமா. முடியும் என நிரூபிக்கிறது அங்காரகனின் கதை. அங்காரகன் சிவந்தநிறமும் சிவப்பு வாயையும் கொண்டவன். அதனால் செவ்வாய் எனவும் அழைக்கப்படுகிறான்.   செவ்வாய் வெறும் வாய் என்பார்கள் ஆனால் அங்காரகன் அமரன் ஆனான், மங்களமானவன் என்னும் பெயரில் மங்களனும் ஆனான். அது எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திங்கள், 11 மே, 2020

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை. தினமலர் சிறுவர்மலர் - 59.

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை.
சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்
சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.

புதன், 25 மார்ச், 2020

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன். தினமலர் சிறுவர்மலர் - 57.

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன்
தனக்குத் தெரிந்த கலையைப் பிறருக்கு சொல்லிக்கொடுக்கக் கூடப் பலர் தயங்குவார்கள். ஆனால் தன் எதிரிக்கும் கூட தனக்குத் தெரிந்த ஜோசியக் கலை மூலம் பலன் சொல்லி நன்மை செய்தான் ஒருவன். அதனால் தனக்குத் தோல்வியே கிட்டுமென்றாலும் தான் கற்ற கலைக்கு நேர்மையாக இருக்கவேண்டுமானால் எதிரியாயிருந்தாலும் அவர்களிடம் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்தப் பண்பாளன் யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் மேலிடுகிறதுதானே குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் திருதராஷ்டிரனும் அவனது மக்கள் கௌரவர்களும் இருக்கிறார்கள். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் மக்களான பாண்டவர்க்கு கௌரவர்கள் அரசுரிமையில் பங்குதர மறுக்கிறார்கள். நயவஞ்சகமாக சகுனியின் போதனையின் பேரில் தர்மரை சூதாட்டத்துக்கு அழைத்துத் தோற்கடித்து அவர்களின் அனைத்து உடைமைகளையும் தங்களுடையதாக்கிக் கொள்கிறான் துரியோதனன்.
குருக்ஷேத்திரப் போர் வெடிக்கிறது. அந்தச் சூழலில் கௌரவர் பக்கம் துரியோதனன் கேட்டபடி கிருஷ்ணர் தன் சேனைகள் அனைத்தையும் உதவிக்கு அனுப்பிவிட்டார். பாண்டவர் பக்கம் அர்ஜுனன் கேட்டுக்கொண்டபடி தானே உதவிக்கு நிற்கிறார்.
அச்சூழலில் போர் நெருக்கடியும் கெடுபிடியும் அதிகமாக யார் ஜெயிப்பார் என்றே தெரியாத சூழல். துரியோதனன் பக்கம் கிருபாசாரியார், துரோணாசாரியார், பீஷ்மர், கர்ணன் , கிருஷ்ணரின் சேனை ஆகியன இருந்தாலும் அநியாயமாக பாண்டவர்க்கு உரிய உரிமையை மறுப்பதால் அநீதி கோலோச்சுகிறது. பாண்டவர் பக்கம் கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார் தெய்வமே பாண்டவரின் நேர்மை பார்த்துத் துணை நிற்கும்போது துரியோதனுக்குத் தாம் போரில் வெல்வோமா என்ற சந்தேகம் எழுகிறது.

திங்கள், 16 மார்ச், 2020

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன். தினமலர் சிறுவர்மலர் - 56.

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன்
எப்போதும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்து வரம் பெற்றான் ஒருவன். அவன் இயக்கர் வம்சமாயினும் பஞ்சமாபாதகங்களைக் கண்டாலே அஞ்சுபவன். அவன் எப்படி அதர்மம் புகுந்த இடத்தில் இருப்பான். அதனால்தான் அவன் தர்மத்திடம் சரணடைந்தான். அவன் யார் ? அவன் பெற்ற வரம் என்ன ? அவன் தர்மத்திடம் சரணடந்த காரணம் என்ன எனப் பாப்போம் குழந்தைகளே.
விஸ்ரவஸ் என்ற முனிவருக்கு புஷ்போத்கை, மாலினி, ராகை ஆகிய மூன்று மனைவியர் மூலம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை, கரன் ஆகியோர் பிறந்தார்கள். இவர்களுள் மாலினிக்குப் பிறந்த விபீஷணன் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றவன். அத்தோடு அறச் செயல்களில் விருப்பம் கொண்டவன். சிறந்த பக்திமான்.
இவர்களில் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் வேதங்கள் கற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தாலும் இன்னும் பலம்பெற வேண்டி பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர். முடிவில் பிரம்மன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி வரங்கள் வழங்கினார். இராவணன் யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் கேட்டவன் மனிதனாலும் இறப்பு நேரக்கூடாது என்பதைக் கேட்க மறந்தான். கும்பகர்ணனோ நித்திய ஆயுசு வேண்டும் எனக் கேட்கவந்தவன் நித்திரை வேண்டும் என வாய்தவறிக் கேட்டு தூக்கத்தை வரமாகப் பெற்றான்.
உண்ணா நோன்பு நோற்றிருந்த விபீஷணனோ இன்னும் ஞானமும் மேன்மையும் அடைந்தான். அவன் “ எந்தச் சமயத்திலும் எத்தகைய சூழலிலும் நான் தர்மத்தில் இருந்து வழுவாமல் வாழவேண்டும். மேலும் எனக்கு ஞான ஒளி பெருகவேண்டும் ” என்பதை பிரம்மாவிடம் வரமாகக் கேட்டதால் அவர் மகிழ்ந்து ’அவன் சிரஞ்சீவியாகவும் வாழ்வான்’ என்ற வரத்தையும் சேர்த்து அருளினார்   

புதன், 11 மார்ச், 2020

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி. தினமலர் சிறுவர்மலர் - 55.

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி
பறவைகள் ப்ராணிகளின் மொழி அறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காக்கை காகாவெனக் கரைவதையும் கிளி கிக்கீ எனப் பேசுவதையும் குயில் குக்கூவெனக் கூவுவதையும் மட்டுமல்ல குரங்கின் கீச் கீச்சையும் நாயின் குரைப்பையும் கூட நாம் விலங்குகளின் பாஷை அறிந்தால் அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியலாம். இப்படி குதிரைகளின் கனைப்பொலியையும் அவற்றின் உள்ளுணர்வையும் அறியும் திறனோடு ஒருவர் இருந்தார். அதனால் அவர் தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடிந்தது. அப்படிப்பட்டவர் யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் குழந்தைகள் கௌரவர்கள். பாண்டுவின் குழந்தைகள் பாண்டவர்கள். இவர்களில் பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு தர்மர், பீமன் அர்ஜுனர் ஆகியோரும் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரிக்கு நகுலன் சகாதேவன் ஆகியோரும் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தமையால் நகுலன் சகாதேவன் ஆகியோர் மிகுந்த அழகுடன் திகழ்ந்தார்கள். கடைக்குட்டிகள் என்ற செல்லம் வேறு. எல்லாரிலும் அழகு வாய்ந்த நகுலன் ஆயுர்வேத மருத்துவம், வாள் பயிற்சி, குதிரை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்தவன்.

புதன், 4 மார்ச், 2020

பசியில் குதித்த பிரம்மகபாலம். தினமலர் சிறுவர்மலர் - 54.

பசியில் குதித்த பிரம்மகபாலம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழி உண்டு. இது மனிதர்களுக்குத்தான். ஆனால் ஒரு கபாலத்துக்குப் பசித்தது. அதனால் அது போட்டது அனைத்தையும் தின்று தீர்த்தது. சிவனுக்கு இட்ட உணவை எல்லாம் பகாசுரன் மாதிரி அதுவே அனைத்தையும் தின்றதால் சிவன் பசியால் துடித்தார். அதுவோ அனைத்தையும் தின்றும் பசியில் குதித்து அழிந்தது. அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அன்னை உமையவள் பரிவு கொண்ட மனத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கி வந்தாள். அதனால் காசி மாநகர மக்கள் பசிப்பிணி நீங்கி வாழ்ந்து வந்தனர். அன்னை உமையவளின் கணவர் சிவன் விளையாட்டாக அவளிடம் “உணவு என்பது மாயை” என்று கூற அன்னையோ ”உணவு இல்லாமல் உலகம் இல்லை. உங்களுக்கு உணவின் அருமை ஒருநாள் தெரியும் ” என்று கூறி கோபிக்கிறார்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர். தினமலர் சிறுவர்மலர் - 53.

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர்.
பொதுவாகவே சின்னக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் என்றால் பிடிக்கும். மிகப் பிடித்த ஆசிரியர் என்றால் அவர்களுடனே இருக்க விரும்புவார்கள். அதே போல் முற்காலத்திலும் ஒருவர் இருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரியருக்காகவே அர்ப்பணித்து அவரோடே வாழ்ந்து அதன் பின்னும் அவரது பாதுகைகளுக்கு சேவை செய்து மறைந்தார்.  
எல்லாரும் கடவுளைத் தொழுவார்கள், ஆனால் அவர் தன் ஆசிரியரைக் கடவுளாகத் தொழுதார். ஆசிரியரது பாதுகைகளைக் கூட அவர் தன் கடவுளாகப் பாவித்தார். அப்படிப்பட்ட அதிசய மனிதர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே வாருங்கள் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் திருநாராயணபுரம் அருகேயுள்ள சாலிகிராமம் என்ற இடத்தில் பிறந்தவர் ஆந்த்ரபூரணர். இவரது இன்னொரு பெயர் வடுகநம்பி. கி.பி. 1079 ஆம் ஆண்டு கிருமிக்கண்டச் சோழன் என்பவரது ஆட்சிக்காலத்தில் இராமானுஜர் தன் சீடர் குழாமோடு இத்திருநாராயணபுரம் என்ற ஊருக்கு வந்ததோடு இந்த சாலிகிராமத்துக்கும் வருகை புரிந்தார்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன். தினமலர் சிறுவர்மலர் - 52.

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன்

எவ்வளவு செல்வந்தர் ஆனாலும் ஒருநாள் உணவளிக்கலாம். இருநாள் உணவளிக்கலாம். தன் வாழ்நாள் பூராவும் வருடம் முன்னூற்றறுபத்தியைந்து நாளும் அடியார்களுக்கு அன்னமிட்ட திருமலை மன்னன் பற்றித் தெரியுமா குழந்தைகளே. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சோழ நாட்டின் திருவாலி திருநகரி என்ற ஊருக்கு அருகிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் நீலன் என்பார். இவர் இவரது தந்தை சோழமன்னனிடம் பணிபுரிந்தவர். அதனால் இவரும் தக்க பருவம் எய்தியதும் சோழனிடம் வீரராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து படைத்தலைவரும் ஆனார். இவர் எதிரிகளைத் துவம்சம் செய்வதைப் பார்த்து வியந்து சோழ மன்னரே இவர் எதிரிகளுக்குக் காலன் போன்றவன் என்ற அர்த்தத்தில் இவருக்குப் “பரகாலன் “ என்று பட்டம் வழங்கினார்.
ஒரு போரில் இவரின் வீரதீரப் பராக்கிரமத்தைப் பார்த்து அதிசயித்த சோழ மன்னன் இவரைத் தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்து இவரது தகுதிக்கேற்ப திருமங்கை என்ற நாட்டின் மன்னனாக ஆக்குகிறார். குறுநில மன்னர்கள் என்றால் அவர்கள் அரசர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும். திருமங்கை என்ற குறுநிலத்தின் மன்னரானதால் இவர் திருமங்கை மன்னன் என்று அழைக்கப்படுகிறார்.

புதன், 12 பிப்ரவரி, 2020

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன். தினமலர் சிறுவர்மலர் - 51.

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன்.
இக்கட்டில் மாட்டிக்கொண்ட ஒருவரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் வருவது முக்கியம். அத்தோடு அவரை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கத் தேவையான பொன் பொருள் கொண்டு செல்ல வேண்டும். அப்படி வாக்குக் கொடுத்த ஒருவர் மாட்டிக்கொண்டவருக்காக பொன் பொருள் அல்ல குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அதுவும் எப்படி ? நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்தார். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
திருவாதவூர் என்னும் ஊரில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தவர் திருவாதவூரார். சிறுவயதில் இவர் சகல கலைகளையும் கற்றுக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அப்போது மதுரையை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டியன் என்பான் இவரது புலமையைக் கண்டு தென்னவன் பிரமராயன் என்ற பட்டம் அளித்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்.
என்னதான் பெரும்புலமை பெற்று மன்னனிடம் சேவகம் புரிந்துவந்தாலும் திருவாதவூரார் தன் மனதில் ஏதோ வெறுமையை உணர்ந்தார். அதனால் நிலையற்ற செல்வங்களை விட்டு அவர் மனதை ஒருமுகப்படுத்தி நிலையான செல்வமான சிவனிடம் பக்தி செலுத்தி வந்தார்.
ஒருமுறை சோழநாட்டில் நல்ல ஜாதிக்குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்படுகிறான் மன்னன் அரிமர்த்தன பாண்டியன். தன் படையை விரிவுபடுத்த எண்ணி தன் மந்திரி வாதவூராரிடம் பொற்காசுகள் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வருமாறு பணிக்கிறான்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர். தினமலர் சிறுவர்மலர் - 50.

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர்


தன்னிடம் இருக்கும் வேண்டாத குப்பைகளைக் கூட தூரப் போடாமல் சேர்த்து வைத்துக் கொண்டிருப்போர் பலர். ஆனால் தங்கத்தால் ஆன வட்டிலைக் கூட வேண்டாம் என்று விட்டெறிந்தார் ஒருவர். தன்னைச் செருக்கு ஆக்கிரமித்துவிடக் கூடாதே என்பதற்காக தன் சொத்து முழுவதையும் தானம் வழங்கிய தனவந்தர். அவர் யார் ? ஏன் அப்படிச் செய்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கூரம் என்ற இடத்தில் பிறந்தவர் கூரேசர். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவி பெயர் ஆண்டாள். மனமொத்த தம்பதிகள் இருவரும். செல்வந்தரான இவர் தினமும் அன்னதானம் செய்து வந்தார். எல்லா நாட்களிலும் எல்லா வேளைகளிலும் இவர் இல்லத்துக்கு வரும் அடியவர்களுக்கு உணவிடுவதையே தன் பெரும் பேறாகக் கொண்டிருந்தார்.
இவரது செல்வத்தையும் அன்னதானத்தையும் பார்த்து ஊரார் பிரமித்தார்கள். ”குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்தக் கூரேசர் தன் சொத்தை எல்லாம் அன்னதானத்திலேயே கரைக்கிறார். துளிக்கூடக் கரையக் காணோம். இவர் போல் சிறந்த அன்னதாதா யாருளார் ? “ என்று அனைவரும் சிலாகிக்கிறார்கள்.

புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

புதன், 15 ஜனவரி, 2020

செருக்கைத் துறந்த சுகர். தினமலர் சிறுவர்மலர் - 48.

செருக்கைத் துறந்த சுகர்.
நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.

இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.

வியாழன், 2 ஜனவரி, 2020

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன். தினமலர் சிறுவர்மலர் - 47.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்
இக்காலத்தில் ஒருவர் நோய் நொடியின்றி ஐம்பது, அறுபது ஆண்டுகள் முதல் நூறாண்டுகள் வரை எளிதில் வாழலாம். ஆனால் ஒரு மனிதன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் மூவாயிரம் பாடல்களும் எழுதி இருக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே. வாருங்கள் அவர் பற்றிச் சொல்லுகிறேன்.
திருவாடுதுறை என்னும் ஊரில் மூலன் என்றொரு ஆயர் இருந்தார். அவ்வூரின் அருகில் இருந்த சாத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த குடும்பஸ்தர்களின் ஆநிரைகளை அதிகாலையில் வீடுதோறும் சென்று ஓட்டிக்கொண்டு பகல் பொழுதில் புல்வெளிகளிலும், காடுகளிலும், உழவு முடிந்த வயல்களிலும் மேய்த்து மாலையில் அதனதன் இல்லம் கொண்டு சேர்ப்பது அவர் பொறுப்பு.
அப்படி மேய்த்துவரும்போது ஒருநாள் மாலையாகியது. ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டும். அவை தம் மேய்ப்பரைத் தேடிக் குரல் எழுப்புகின்றன. அந்தியோ மங்கி வருகின்றது. ஆனால் அவரைப் பாம்பு ஒன்று தீண்டியதால் மேய்ச்சல் நிலத்தில் விழுந்து கிடக்கிறார். ஆநிரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தம் மேய்ப்பர் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவலக் குரல் எழுப்புகின்றன. சில மோந்து பார்க்கின்றன. ஒரு சிலவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.

திங்கள், 23 டிசம்பர், 2019

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி. தினமலர் சிறுவர்மலர் - 46.

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி.
எந்தக் காலத்திலும் நீதியைத் தம்பக்கம் வளைத்துவிடலாம் என்பது பணம் படைத்தவர்களின் எண்ணமாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் படைத்தாலும் தெய்வத்தை வளைக்க முடியாது அது உண்மையையே தாங்கிப் பிடிக்கும். ஒரு வைர வாணிகன் தன் செல்வாக்கால் உண்மையைத் திசை திருப்பப் பார்த்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி உண்மையை நிலைநாட்டியது நாளி என்ற காளி தெய்வம். அது பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கடலும் அலையும் கைகோர்த்துத் திரியும் இடம் புகார் நகரம். கடற்துறைமுகத்தில் மரக்கலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று நவகோடி நாராயணன் என்ற வைர வியாபாரி உடையது. இவர்தான் வைர வாணிகன் வளையாபதி என்றும் அழைக்கப்பட்டார். அவர் வீட்டில் செல்வம் மலைபோல் குவிந்திருந்தது. வீடு நிறைய உறவினர்களும் அவர்களுக்குப் பணிபுரிய வேலையாட்களும் நிரம்பி இருப்பார்கள்.
நவகோடி நாராயணன் மிகுந்த சிவபக்தி கொண்டவர். நாள்தோறும் சிவனைப் பூசித்துத்தான் தன் வேலையைத் தொடங்குவார். நவரத்தினங்களும் வைரமும் விற்றுத் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து வந்தார்.

திங்கள், 16 டிசம்பர், 2019

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி. தினமலர் சிறுவர்மலர் - 45.

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி
ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்ததும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டுவிட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன். தினமலர் சிறுவர்மலர் - 44.


ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன்.

நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் கிடைக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தோர் யாரும் இகழ்ச்சி அடைந்ததில்லை. உயர்வே அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு ஜபேஸ்வரனின் உயர்வே சாட்சி. மேலும் அவர் கருடனையே தன் மூச்சுக் காற்றால் வீழ்த்தியவர். யார் அந்த ஜபேஸ்வரன் எப்படி உயர்வடைந்தார் அவர் என்று பார்ப்போம் குழந்தைகளே.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை. தினமலர். சிறுவர்மலர் - 43.

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை.
குழந்தை என்றால் அன்னையர் பத்துத்திங்கள் சுமந்து பெற்று வளர்ப்பார்கள். கருவில் உருவாகும் அக்குழந்தைக்கு எந்நோவும் வரக்கூடாது என்று மருந்துண்பார்கள். நதிகள்தோறும் கடலிலும் கூடத் தீர்த்தமாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்களின் தீர்த்தங்களையும் அருந்துவார்கள். வளைகாப்பு, சீமந்தம் என்று தாய்வீட்டில் சீராடுவார்கள். இப்படி எந்த நிகழ்வும் இல்லாமல் ஓரிரு நொடிகளில் ஒரு குழந்தை உருவானது. அதுவும் ஒரு ஓவியத்திலிருந்து உயிர்பெற்றது. இந்த அதிசயத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வெள்ளி, 22 நவம்பர், 2019

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர் - 42.

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன்
ஒருவரே இரு பாதி உருவங்களாகப் பிறக்கமுடியுமா. அப்படிப் பிறந்து ஒன்றான ஒருவன்தான் ஜராசந்தன். இவன் ஏன் இருகூறு உருவமாய்ப் பிறந்தான் எப்படி ஒன்றானான் என்பதை எல்லாம் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகத நாட்டை பிரகத்ரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காசி மன்னரின் இரு புதல்வியரையும் மணந்துகொண்டான். ஆனால் இருவருக்குமே பல்லாண்டுகளாகப் புத்திரப் பாக்கியம் வாய்க்கவில்லை. மன்னனோ மனம் ஒடிந்து காட்டுக்குச் சென்று அங்கே சந்திர கௌசிகர் என்ற முனிவரைக் கண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தான்.
அவனுக்குப் பிள்ளையில்லாப் பெருங்குறையை அறிந்திருந்த அம்முனிவர் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை மகாராணியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அவனுக்கோ இரு பட்டமகிஷிகள். அதனால் அக்கனியை இருபாதியாக்கி இருவருக்கும் உண்ணக் கொடுத்தான்.
இருவரும் சூலுற்றனர். குழந்தை பிறக்கும் நேரமும் வந்தது. மன்னனோ ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஐயகோ ஈதென்ன இரு மகாராணியருக்கும் பாதிப் பாதியாகப் பிள்ளைகள் இறந்தே பிறந்திருக்கின்றனவே. மன்னன் அடைந்த துயருக்கு அளவே இல்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...