எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குண்டலகேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குண்டலகேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மே, 2022

பாரதி பதிப்பகத்தில் எனது நான்கு நூல்கள் வெளியீடு.

வளையாபதி குண்டலகேசி - மூலமும் உரையும். வெளியீடு. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது பாரதி பதிப்பகம். இந்நிறுவனம் 70 ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வரும் பெருமை உடையது. 

இதன் தற்போதைய நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன். துடிப்பான இளம்பெண். 




இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்காகக் கிட்டத்தட்ட 50 புது நூல்களை புது ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். அதில் நானும் ஒருத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

திங்கள், 16 டிசம்பர், 2019

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி. தினமலர் சிறுவர்மலர் - 45.

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி
ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்ததும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டுவிட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.

செவ்வாய், 25 ஜூலை, 2017

வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை.



வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை.

ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன.

இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக ஒரு பாடல் கூட இல்லை.