எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராமானுஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமானுஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர். தினமலர் சிறுவர்மலர் - 50.

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர்


தன்னிடம் இருக்கும் வேண்டாத குப்பைகளைக் கூட தூரப் போடாமல் சேர்த்து வைத்துக் கொண்டிருப்போர் பலர். ஆனால் தங்கத்தால் ஆன வட்டிலைக் கூட வேண்டாம் என்று விட்டெறிந்தார் ஒருவர். தன்னைச் செருக்கு ஆக்கிரமித்துவிடக் கூடாதே என்பதற்காக தன் சொத்து முழுவதையும் தானம் வழங்கிய தனவந்தர். அவர் யார் ? ஏன் அப்படிச் செய்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கூரம் என்ற இடத்தில் பிறந்தவர் கூரேசர். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவி பெயர் ஆண்டாள். மனமொத்த தம்பதிகள் இருவரும். செல்வந்தரான இவர் தினமும் அன்னதானம் செய்து வந்தார். எல்லா நாட்களிலும் எல்லா வேளைகளிலும் இவர் இல்லத்துக்கு வரும் அடியவர்களுக்கு உணவிடுவதையே தன் பெரும் பேறாகக் கொண்டிருந்தார்.
இவரது செல்வத்தையும் அன்னதானத்தையும் பார்த்து ஊரார் பிரமித்தார்கள். ”குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்தக் கூரேசர் தன் சொத்தை எல்லாம் அன்னதானத்திலேயே கரைக்கிறார். துளிக்கூடக் கரையக் காணோம். இவர் போல் சிறந்த அன்னதாதா யாருளார் ? “ என்று அனைவரும் சிலாகிக்கிறார்கள்.

திங்கள், 4 நவம்பர், 2019

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மலர் - 38.

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி
இனம் மதம் சாதி பார்த்து ஒருவரை உயர்ந்தவர் என்றும் இன்னொருவரைத் தாழ்ந்தவர் என்றும் கற்பித்துக் கொள்கின்றோம். ஆனால் அதுதவறு என நிரூபிக்கிறது உறங்காவில்லி என்பவரின் கதை. இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்ட அவரையும் அவரைப் போலவே நல்லுள்ளம் படைத்த அவரது மனைவி பொன்னாச்சி பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
சாலையில் வெய்யில் தகிக்கிறது. மக்கள் எல்லாம் வீடுகளில் ஒண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் திண்ணையில் அமர்ந்து விசிறியால் வீசி ஆசுவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு காட்சியைப் பார்த்து அனைவரும் பரிகாசப் புன்னகை செய்கிறார்கள். சிலர் நமட்டுத்தனமாய்க் கிண்டலடிக்கிறார்கள்.
அச்சாலையில் அப்போது ஒரு மனிதன் தன் மனைவிமேல் வெய்யில் படாமல் குடைபிடித்தபடி செல்கிறான். அவன்தான் உறங்காவில்லி. அவனது மனைவி பெயர் பொன்னாச்சி. பொதுமக்கள் பார்க்கிறார்களே. தன்னை ஏளனம் செய்வார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அவன் தன் மனைவிக்குக் குடைபிடித்தபடி செல்கிறான்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பண்டிதரை வாதில் வென்ற பராசரர். தினமலர், சிறுவர்மலர் - 6.

பண்டிதரை வாதில் வென்ற பராசரர்.
குழந்தைகள் பலவிதம். சில குழந்தைகள் வளர வளர உலக ஞானம் பெறுவார்கள். ஆனால் சில குழந்தைகளோ கருவிலே திருவுடையவர்களாகப் பிறந்திருப்பார்கள். மேலும் எவ்வளவு திறமை இருந்தாலும் அகங்காரம்கொள்ளாமல் இவர்கள் தங்கள் பணிவன்பாலும் அடக்கத்தாலும் ஆசார்யர்களை மதித்து நடந்து பல்வேறு உயர்வுகளை எய்துவார்கள். அப்படிப்பட்ட புத்திசாலிக்குழந்தை ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீரங்கத்தில் கூரேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீரங்கன் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் மனைவி பெயர் ஆண்டாள் அம்மையார். ஆயிரக்காணக்கான அதிதிகளுக்குத் தினமும் அன்னமிட்டு வந்தவர்கள் இவர்கள். காலமாற்றத்தால் தினமும் உஞ்சவிருத்தி செய்தோ அல்லது கோயில் பிரசாதங்களைக் கொண்டோ எளிமையாக வாழ்ந்து வந்தார்கள் இத்தம்பதிகள்.
ரு நாள் உஞ்சவிருத்திக்குச் செல்லமுடியாமல் வெகுமழை பொழிந்தது. கணவன் மனைவி இருவரும் கொலைப்பட்டினி கிடந்தார்கள். தினமும் கோவிலுக்கு வந்து செல்லும் கூரேசர் மழை காரணமாக வராததால் அக்கோவிலின் அர்ச்சகர் பிரசாதங்களைக் கொண்டு வந்து வீட்டிற்கே கொடுத்துச் செல்கிறார். மகிழ்ந்த கூரத்தாழ்வார் அதிலிருந்து தனக்கு ஒரு கவளமும் தன் மனைவிக்கு ஒரு கவளமுமே பெற்றுக் கொள்கிறார்.

புதன், 24 அக்டோபர், 2018

ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில். தினமலர். சிறுவர்மலர் - 39.


ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில்.

உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராத உன்னதமான உறவுகளில் ஒன்று அண்ணன் தங்கை உறவு. உடன்பிறந்த சகோதரர்களே சகோதரிகளுக்குச் சீர் செய்ய அலுத்துக் கொள்ளும் காலமிது. ஆனால் உடன்பிறவா சகோதரர் ஒருவர் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளுக்கு அக்கார அடிசில் படைத்த கதை ஒன்று உண்டு. தங்கை பாடிச் சென்றதற்காக ஒன்று இரண்டல்ல ஆயிரம் அண்டாக்கள் நிறைய வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைத்த அந்தப் பாசக்கார அண்ணன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் என்பார் வாழ்ந்து வந்தார். ஒரு திரு ஆடிப்பூரத்தன்று அவரது தோட்டத்தில் இருந்த திருத்துழாய்ச் செடியின் அருகில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது அவருக்கு. கொள்ளை அழகு கொண்ட அக்குழவிக்குக் கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
கோதை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயிலுக்கு அவள் தந்தை விஷ்ணு சித்தர் தினமும் மலர் கைங்கர்யம் செய்து வந்தார். நந்தியாவந்தனப் பூக்களைத் தொடுத்துக் கெட்டி மாலையாக்கித் தினம் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பது அவர் தொண்டு. அந்த மாலைகளின் அழகைக் கண்ட கோதை விளையாட்டாய்த் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடியில் அழகு பார்ப்பார்.
Related Posts Plugin for WordPress, Blogger...