எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2022

குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்

 குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்


புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து சாபம் பெற்றோர் பலர். சாபம் பெற்றபின் தங்கள் தவறுணர்ந்து சாப விமோசனத்துக்காக சாபமிட்டவரிடமே வணங்கி மன்னித்தருளும்படி வேண்டுவார்கள். உடனே சாபமிட்ட மகரிஷிகளும் முனிவர்களும் சாபவிமோசனத்துக்கான வழிமுறைகளைக் கூறி மன்னிப்பார்கள். இப்படி சாபம் பெற்ற இருவர் பற்றியும் அவர்கள் பெற்ற சாபத்திலிருந்து எப்படி விமோசனம் அடைந்தார்கள் என்பது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.

குபேரனின் புதல்வர்களின் பெயர் நளகூபரன், மணிக்ரீவன். அவர்கள் இருவரும் ஒருநாள் மிதமிஞ்சிய களியாட்டத்தில் அரண்மனை வாவியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே பல்வேறு வகையான மங்கையர்களும் அவர்களுடன் ஜலக்ரீடை ஆடிக் கொண்டிருந்தனர்.

வெள்ளி, 22 நவம்பர், 2019

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர் - 42.

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன்
ஒருவரே இரு பாதி உருவங்களாகப் பிறக்கமுடியுமா. அப்படிப் பிறந்து ஒன்றான ஒருவன்தான் ஜராசந்தன். இவன் ஏன் இருகூறு உருவமாய்ப் பிறந்தான் எப்படி ஒன்றானான் என்பதை எல்லாம் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகத நாட்டை பிரகத்ரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காசி மன்னரின் இரு புதல்வியரையும் மணந்துகொண்டான். ஆனால் இருவருக்குமே பல்லாண்டுகளாகப் புத்திரப் பாக்கியம் வாய்க்கவில்லை. மன்னனோ மனம் ஒடிந்து காட்டுக்குச் சென்று அங்கே சந்திர கௌசிகர் என்ற முனிவரைக் கண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தான்.
அவனுக்குப் பிள்ளையில்லாப் பெருங்குறையை அறிந்திருந்த அம்முனிவர் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை மகாராணியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அவனுக்கோ இரு பட்டமகிஷிகள். அதனால் அக்கனியை இருபாதியாக்கி இருவருக்கும் உண்ணக் கொடுத்தான்.
இருவரும் சூலுற்றனர். குழந்தை பிறக்கும் நேரமும் வந்தது. மன்னனோ ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஐயகோ ஈதென்ன இரு மகாராணியருக்கும் பாதிப் பாதியாகப் பிள்ளைகள் இறந்தே பிறந்திருக்கின்றனவே. மன்னன் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

புதன், 6 மார்ச், 2019

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வியாழன், 3 மே, 2018

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன்.
யர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன.  வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள்  நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...