எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துர்வாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துர்வாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை. தினமலர் சிறுவர்மலர். 34,

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை.
வீட்டிற்குப் பெரியவர்கள் வரும்போது அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே வாங்க என்று வரவேற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இன்றைய சில இளையவர்கள். சிலரோ தங்கள் அறைக்குள் சென்று விடுகிறார்கள். சிலரோ கைபேசியில் விளையாடிக் கொண்டு யாரையும் சட்டை செய்வதில்லை. இப்படி கவனக் குறைவாக வீட்டிற்கு வந்த ஒரு முனிவரை வரவேற்காததால் சகுந்தலை என்ற பெண்ணுக்கு சாபம் கிடைத்தது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்ற அப்சரஸுக்கும் பிறந்தவள்தான் இந்த சகுந்தலை. தந்தையோ முனிவர் அதனால் அவர் சகுந்தலை பிறந்ததும் தன் தவம் எல்லாம் அழித்துவிட்டதாகக் கருதித் தவம் செய்யச் சென்றுவிட்டார். தாயோ தேவலோகத்தின் அப்சரஸ். நாட்டிய தாரகை. அதனால் அவளும் குழந்தையை ஒரு வனத்தில் விட்டுச் செல்கிறாள்.
அக்குழந்தையின் குரல் கேட்டுப் பறவைகள் சூழ்ந்து கானம் பாடுகின்றன. குழந்தைக்குரலும் பறவைக்குரலும் கேட்ட கண்வ மகரிஷி இவளை எடுத்து வளர்க்கிறார். பறவைகளால் பாதுகாக்கப்பட்ட குழந்தை என்ற அர்த்தத்தில் ”சகுந்தலை” என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

இந்திரனின் துடுக்குத்தனம். தினமலர் சிறுவர்மலர் - 27.

இந்திரனின் துடுக்குத்தனம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் . அதனால் கிட்டிய அமிர்தத்தைக் குடித்து தேவர்கள் பலம் பெற்றார்கள். ஆனால் ஏற்கனவே அழகாபுரியில் அனைத்து ஐஸ்வர்யங்களோடும் இருந்த தேவர்கள் அமிர்தம் அருந்த வேண்டிய அவசியம் என்ன.? எல்லாவற்றுக்கும் இந்திரனின் துடுக்குத்தனம்தான் காரணம். அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தேவலோகம் தங்கநிற வெளிச்சத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது. தன் யானையின் மேல் இந்திரபுரியின் இராஜபாட்டைகளில் உலாவந்து கொண்டிருந்தான் இந்திரன். அமரர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் கந்தர்வர்களும் கானமிசைக்க தேவலோக கன்னியர் நடனமாடி பூத்தூவியபடி முன் வந்தனர்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

துர்வாசரைத் துரத்திய சக்கரம். தினமலர். சிறுவர்மலர். 26.

துர்வாசரைத் துரத்திய சக்கரம்.
சிறியவர்கள் துஷ்டத்தனம் செய்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் முனி சிரேஷ்டர் ஒருவரே ஒரு முறை அல்ல இருமுறை இப்படி துர்ப்புத்தியோடு செயல்பட்டு அல்லலுக்கு ஆளானார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முன்னொரு முறை பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது துரியோதனனின் துர் எண்ணப்படி வனத்துக்குத் தன் சிஷ்யர்களோடு உணவருந்த வந்தார் துர்வாசர். நீராடிவிட்டு உணவருந்த வருவதாகக் கூறிவிட்டு சிஷ்யர்களோடு சென்றுவிட்டார்.
சூரியன் பாண்டவர்களுக்கு அளித்த அட்சய பாத்திரம் ஒருநாளில் ஒருமுறையே உணவளிக்க வல்லது. துர்வாசர் வந்த அன்று அப்பாத்திரத்தில் உணவு பெற்று கழுவிக் கவிழ்த்துவைத்துவிட்டாள் திரௌபதி. அதனால் திடீரென வந்தவர்க்கு உணவளிக்க முடியாமல் தன் அண்ணனாம் கண்ணனை வேண்ட அவர் அப்பாத்திரத்தில் ஒட்டி இருந்த உணவுத் துணுக்கை உண்டு திருப்தியாக தன் வயிற்றைத் தடவ  நீர் நிலையில் நீராடிய துர்வாசருக்கும் அவரது சிஷ்யருக்கும் வயிறு நிறைந்தது. அதனால் அவர் தர்மரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு தன் சிஷ்யர்களுடன் உணவை மறுத்து நடையைக் கட்டினார்.  அக்கதையை நாம் அறிவோம்.
இன்னொரு முறையும் அவ்வாறே அவர் அம்பரீஷன் என்ற மன்னனிடம் செயல்படுத்த திருமாலின் சுதர்சனம் துர்வாசரைத் துரத்தியது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

புதன், 6 மார்ச், 2019

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
Related Posts Plugin for WordPress, Blogger...