எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுவர் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மே, 2018

பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.


பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன்.

காரிருள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது. பரிதி தன் குதிரைகளில் ஆரோகணம் செய்து உலாவர ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். விடியப்போகிறது. ஆனால் பதினைந்து வயது பாலகன் ஒருவனை நினைத்து அவனைப் பெற்றவர்கள் பரிதவித்தபடி பரமனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

கங்கையின் மணிகர்ணிகை கட்டம். பிரவகிக்கும் கங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் ஜொலித்துக் கொண்டிருக்க சின்னஞ்சிறு பாலகன் ஒருவனின் குரல் நம்பிக்கையுடன் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ சிவாய நமக. ஓம் நமச்சிவாய.”

வெள்ளி, 25 மே, 2018

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.
அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வாளில் பயிற்சி பெற்ற இளையர்களின் திறமைக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு போட்டியிலும் யாரோ வென்ற போது கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் அவர்களை ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினார்கள்.
அர்ஜுனன் முறை வந்தது. அவர் அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பொம்மைக் கிளியின் கண்ணைத் தன் அம்பால் எய்தார். உடனே அவருக்குக் கரகோஷம் எழும்ப கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் மத்தியிலிருந்து சூரியனைப் போலப் ப்ரகாசமான, தேஜசான ஒரு வீரன் எழுந்தான்.
“ இந்தக் கிளியின் ஒரு கண் என்ன , இரு கண்களையும் என்னால் குறிவைத்து அடிக்கமுடியும். “ என்று போட்டி மேடையில் ஏற முயன்றான்.
“நில்.. அரசிளங்குமரர்களுடன் போட்டியிட நீ தகுதியானவந்தானா. எந்த நாட்டு இளவரசன் நீ. ? “ என்று தடுத்து நிறுத்தினார் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணர்.
திகைத்து நின்றான் அந்த வீரன். இழிவரல் கொண்டு இறங்க முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அக்குரலுக்குச் சொந்தக்காரன் துரியோதனன்.

புதன், 23 மே, 2018

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசர்.

பாண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாக அந்தக் குடிசையைப் பதம் பார்த்தும் இன்னும் விடுவதாயில்லை. உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் கரங்களோ அந்தக் குடிசையில் இருக்கும் சொக்கநாதப் பெருமானின் படத்தை வணங்கிக் காத்தருளுமாறு வேண்டுகின்றன.

அன்று ஆவணி மூல நட்சத்திர நாள். தினமும் பிட்டு சுட்டுப் படைக்கும் அவள் சிலநாட்களாகப் பிட்டு சுட்டுப் படைக்கமுடியவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறாள். “ஈசா என்ன நினைத்து என்னைப் படைத்தாய்?. இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் ? என்று நிற்கும் இம்மழை.? என்று வடியும் இவ்வெள்ளம்.? என்னை அடித்துச் சென்றாலாவது காக்க வருவாயா? “ என்றெல்லாம் அவள் ஈசனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

சாதாரண நாட்களிலேயே சூரியனும் சந்திரனும் கூரை இடுக்குகளின் வழியாக அவள்மேல் தங்கள் கண்களைப் பதிப்பார்கள். அன்றோ காற்றும் தன் பங்குக்குக் குடிசையின் தென்னங்கிடுக்குகளை விசிறித்தள்ளிக் கொண்டிருந்தது. சில கிடுகுகளைப் பெயர்த்தும் போட்டிருந்தது.  பெய்த மழையில் சொதசொதவென்று ஈரமாக இருந்தது அவளது குடிசை.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.

வியாழன், 3 மே, 2018

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன்.
யர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன.  வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள்  நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வேதங்களைக் காத்த கல்விக் கடவுள். தினமலர் சிறுவர்மலர் - 14.


வேதங்களைக் காத்த கல்விக் கடவுள்.

ங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அறியாமையின் இருள். நான்கு வேதங்கள் கொண்டுதான் பிரம்மன் படைப்புத்தொழிலைச் செய்துவந்தார். ஆனால் இதென்ன அந்த வேதங்களை திடீரென எங்கிருந்தோ வந்த இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டனவே. அதனால் சூழ்ந்த இருள் பிரம்மனின் மனத்தில் மருளை உருவாக்கிவிட்டது. தன் தந்தையாராகிய விஷ்ணுவிடம் ஓடிச் சென்று முறையிடுகிறார்.

“தந்தையே .. வேதங்களை இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டன. அவற்றைக் காப்பாற்றித் தாருங்கள். “

”என்னது குதிரைகளா.. எதற்காகத் திருடிச் சென்றார்கள் “

” ஆம் தந்தையே குதிரைகளேதான். தாங்களே புதிய உயிர்களைப் படைக்க எண்ணிப் பறித்துச் சென்றார்கள் அப் பரிகள் ”

”எங்கே சென்றன. ?”

“அவை பாதாளலோகம் நோக்கிச் சென்றன.அங்கே ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மீட்டுத்தந்தால்தான் நான் சிருஷ்டிகளை உருவாக்க இயலும்.”

வேதங்களை மீட்க விஷ்ணு ஒரு உபாயம் செய்தார். அதற்காக ஒரு வித்யாசமான வடிவையும் எடுத்தார்.

சனி, 21 ஏப்ரல், 2018

பிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.

பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.

ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் பூக்கும் சூரிய தேவன் தன் வெப்பத்தால் அதைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த இடத்தின் பெயர் சாம்பபுரம். அது தேவர்களுக்கெல்லாம் தேவன் சூரியன் உறையும் இடம். அதற்கு ஏன் சாம்பபுரம் என்ற பெயர் ஏற்பட்டது? ஜாம்பவதியின் புதல்வன் சாம்பன் ஏன் ரோகம் பீடித்த உடலுடன் அங்கே சூரியதேவனைப் பற்றிக்கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறார்.

தந்தையே மகனுக்கு சாபம் அளிக்க முடியுமா.. அதுவும் கொடுவினையாகிய தொழுநோய் பீடிக்கும்படி.? சில நிகழ்வுகள் நிகழ வேண்டியே இந்த சாபம் உண்டானது. அவை என்னென்ன நிகழ்வுகள். ?

சனி, 24 மார்ச், 2018

திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் சிறுவர்மலர் - 10.


திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி:-

வில் போலவும் வேல் போலவும் மயில் போலவும் திருவாவினன் குடி நிறையக் காவடிகள் ஆடி வருகின்றன. பறவைக்காவடிகளும், பன்னீர்க்காவடிகளும் புஷ்பக்காவடிகளும் , பால் காவடிகளும், தீர்த்தக் காவடிகளும், அலைஅலையாய்ப் பழனி மலையைக் கடலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி மலைமேல் முருகனைக் காண ஓட்டமாய் ஓடுகின்றன. பல கண்கவர் காவடிகள் சிந்து பாடி ஒயிலாகச் செல்கின்றன.

இந்தக் காவடிகள் எல்லாம் திருவாவினன்குடிக்கு ஆயிரக்கணக்கில் வருடந்தோறும் வரும் காரணம் என்ன ? எதனால் வருகின்றன.. இதன் காரணகர்த்தா யார் ?

முருகனுக்கு முன்னே முழு மரியாதையும் இந்தக் காவடிக் கட்டும் யாருக்காக ? சக்தி கிரியையும் சிவகிரியையும் அநாயசமாகத் தூக்கி வந்தானே அந்த அசுரனுக்கா இத்தனை மரியாதை ?

இதைத் தெரிந்துகொள்ள நாம் அதோ இடும்பவனத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துவரும் இடும்பாசுரனையும் இடும்பியையும் பின்தொடர வேண்டும்.

சனி, 17 மார்ச், 2018

சமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9.

சமத்துவம் போதித்த சாதுவன்.

டல் கொந்தளிக்கிறது. அலை தத்தளிக்கிறது. கப்பல் தடுமாறுகிறது. மேலும் கீழும் சதிராடுகிறது. திசைமாறிச் சென்று எதன் மீதோ மோதுகிறது. மிகப் பெரும் பாறையாக இருக்கக்கூடும் அது.

வெளியே எங்கும் அந்தகாரம். எந்தப் பிடிமானமும் கைக்கு அகப்படவில்லை. உடைந்த மரக்கலத்தின் ஒரு துண்டுகூடக் கிட்டவில்லை. இருளைப் பற்றி நீரைச் சுழற்றி நீந்துகிறான் சாதுவன். எங்கெங்கும் நீர். சில்லென்று மேனியெங்கும் விறைக்கிறது. தான் பிழைப்போமா சாவோமா தெரியாது நீரில் தவறி விழுந்த பறவையைப் போலத் தலைதெறிக்க நீந்திக் கொண்டிருக்கிறான் சாதுவன்.

அலை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. கால்கள் சோர்வுறுகின்றன. அவனுடன் பயணித்தவர்கள் எங்கே ?. நாவாய் மோதித் தெறித்ததும் அனைவரும் எங்கெங்கோ சிதறிப் போனார்கள். கண்கள் இருள கைகளும் கால்களும் சோர தன் அன்பிற்குரிய மனையாட்டி ஆதிரையின் முகத்தை நினைத்து ஏங்கியபடி மயக்கத்துக்குப் போனான் சாதுவன்.  

ஆமாம் யார் இந்த சாதுவன்.? அவன் ஏன் கப்பலில் பயணித்தான். ஏன் விபத்துக்கு ஆட்பட்டான். பார்க்கப் போனால் கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்த ஒருவன் சாதுவன். அவன் எப்படி சமத்துவம் போதித்தான் அதுவும் யாருக்குப் போதித்தான் ?

செவ்வாய், 6 மார்ச், 2018

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிறுவர்மலர் - 8.

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :-

ராம் ராம்”என்றொரு ஒலி எங்கும் ஒலிக்கிறது. நித்ய பிரம்மச்சாரி ஒருவன் சிரஞ்சீவியாய் இதைச் சொல்லியபடி தன் நெஞ்சில் ராமரை நிலை நிறுத்திவிட்டான். அவன் இதயமே அவர் உறையும் கோயில் என்றானது. யார் இந்த சிரஞ்சீவி, இவன் சொல்லும் ’ராம்’ எல்லோரும் எழுதும் ராமஜெயமானது எப்படி ?

சொல்லின் செல்வன் என்று ராமராலேயே அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ? அதைத் தெரிந்து கொள்ள நாம் ரிஷியமுக பர்வதத்துக்குப் போகவேண்டும். அது எங்கே இருக்கிறதா.. ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது. வாருங்கள் நாம் ஒரு சொல்லின் செல்வன் சுந்தரமாய் உதித்த சுந்தரகாண்டத்துள் நுழைவோம்.

ஆம் யார் இந்த சொல்லின் செல்வன் ? அவர் ஏன் சுந்தர காண்டத்தில் உதித்தார். இவர் சுந்தகாண்டத்தில் உதிக்கக் காரணமானவர்கள் யார்?

புதன், 28 பிப்ரவரி, 2018

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தினமலர் சிறுவமலர். 7.

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே.

முப்பத்து முக்கோடி  தேவர்களும் முனிவர்களும் ஓருருவில் அடக்கம். அந்த உருவை வணங்கினாலே மும்மூர்த்திகளையும் தேவாதி தேவர்களையும் வணங்கியதாக அர்த்தம்.

ஆம் இப்படிப்பட்ட உருவம் கொண்டவள் யார்.? அனைவரும் வணங்கும் அவளின் சிறப்பென்ன ?

அன்னையைப் போன்ற முகமும் மனதும், பசுவைப் போன்ற உருவமும் அத்தோடு பறக்க இறக்கைகளும், அழகான மயில் தோகையும், இத்தனையும் ஒரே உடலிலா. ஆம் ஒரே இத்தனையையும் ஒரே உடலில் கொண்டவள்தான் அவள். ஆனால் கேட்டது அனைத்தையும் கொடுப்பாள். அதுவும் நன்மனம் கொண்ட தவசீலர்க்கே கொடுப்பாள். தெய்வீக விருந்து படைப்பாள்.

வள் யார் ? எப்படித் தோன்றினாள் ? தெரிந்துகொள்ள நாம் பாற்கடலைக் கடையும்போது போகவேண்டும். கிட்டத்தட்டப் பதினெட்டாயிரத்து ஐநூறு நாட்கள். திருப்பாற்கடலைக் கடைந்தார்கள் கடைந்தார்கள் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக. மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.

அப்பனுக்கே அம்மையானவள்.

யார் இந்தப் பெண்.?. பேயுரு எடுத்தாற்போல் தலைகீழாய் கைகளால் கைலாயத்தில் ஏறி வருகிறாளே. பார்க்கவே பீதியூட்டும் நரம்பும் தோலும் எலும்புமான இப்பெண்ணைப் பார்த்துப் பரிவோடும் பாசத்தோடும் முக்காலமும் உணர்ந்த சிவ பெருமான் “அம்மையே வருக “ என்றழைக்கிறாரே. 

ஆதி அந்தம் அற்ற சிவனுக்கும் தாயான இவள் யார். ? சிவபூதகணம் போல் இவள் இப்படி ஆனது எப்படி ?

ஒரு மாங்கனி அவளை இப்படி ஞானப்பெணாக்கியது என்று நம்ப முடியுமா .. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காரைவனம் என்னும் மாநகருக்குச் செல்லவேண்டும்.

காரைமாநகரில் தனதத்தன் தர்மவதி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபூசனையில் ஈடுபாடு உள்ள குடும்பம் என்பதால் புனிதவதியும் சிவபக்தையாகவே வளர்ந்தார். உரிய பருவத்தில் அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்கள் புனிதவதியின் பெற்றோர்.

தனியே ஒரு இல்லத்தில் புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தபோது பரமதத்தன் இரு மாங்கனிகளை வாங்கித் தனது இல்லத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றை வாங்கி வைத்த புனிதவதி சமையலில் ஈடுபட்டார்.