எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாயமான் ஆன மாரீசன்

மாயமான் ஆன மாரீசன்

தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

விராதன் தும்புரு ஆன கதை

விராதன் தும்புரு ஆன கதை

காமம் குரோதம் லோபம் மதம் மாச்சர்யம் ஆகிய ஐந்து கீழ்நிலைக் குணங்களும் வந்துவிட்டால் ஒரு மனிதன் உயர முடியாதது மட்டுமல்ல. கீழான நிலைக்கும் போய்விடுவான். அப்படி ஒரு கந்தர்வன் தன் கீழ்நிலைக் குணத்தால் அரக்கனானதும் அதன்பின் சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனானதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ராமனும் சீதையும் இலக்குவனும் கைகேயி தயரதனிடம் கேட்டுப் பெற்ற வரத்தினை நிறைவேற்றப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யப் புறப்பட்டனர். அப்படி அவர்கள் சித்திரகூடத்தில் தங்கி அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத் தென்திசை நோக்கிச் சென்றார்கள்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் எதிர்ப்பட்டது. அங்கே அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வரவேற்று உபசரித்தனர். அனுசூயாதேவி தன் ஆபரணங்களை சீதைக்குப் பூட்டி அழகு பார்த்தார். அவர்களிடம் விடைபெற்று ராமனும் இலக்குவனும் சீதையுடன் தண்டகாரண்யம் நோக்கிப் பயணமாயினார்.

திங்கள், 11 மே, 2020

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை. தினமலர் சிறுவர்மலர் - 59.

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை.
சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.

புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன். தினமலர் சிறுவர்மலர் - 11.

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
ள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

சனி, 1 டிசம்பர், 2018

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள்.


தேசம் தேசமாகச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது ஒரு புரவி. அதை ஒருவரும் கட்டி வைக்க முயலவில்லை. ஆனால் இரட்டையராய்ப் பிறந்த சின்னஞ்சிறுவர்கள் அதைக் கட்டி வைத்துவிட்டார்கள். அயோத்தி மாநகரமே போருக்கு வந்தும் அதை மீட்க முடியவில்லை. கடைசியாக ராமன் வந்துதான் மீட்டார். அப்படிப்பட்ட வீரச் சிறுவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வால்மீகி முனிவரின் ஆசிரமம். காலைச் சந்தி. அங்கே முனிவர்கள் தினசரி பூஜை புனஸ்காரங்கள் செய்து வேதபாராயணம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வால்மீகி முனிவரின் அருகே இரட்டை நிலவு போல் காட்சி தரும் இரு சிறுவர்கள் அவருடைய பூஜைக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் லவன் மற்றும் குசன். சீதைக்கும் ராமருக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

இவர்கள் தாய் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபின் இவர்களைப் பெற்றாள். அதனால் அவர்களுக்கு ராமர் தம் தந்தை என்பது தெரியாது.
”சாமி ..ஒரு குதிரை சர்வ அலங்காரத்தோட நம்ம ஆசிரமம் பக்கமா வருது. அது யாரோடதுன்னு தெரியல “ என்று சொன்னார் ஒருவர்.
“அலங்காரத்தோட வருதுன்னா அது அஸ்வமேத யாகக் குதிரையா இருக்கலாம் “ என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
“அது ஏன் இங்கே வருது. அதப் போய் நாங்க பிடிச்சுக் கட்டி வைக்கிறோம். அனுமதி கொடுங்க” என்று கேட்டார்கள் சிறுவர்களான லவனும் குசனும்.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.
Related Posts Plugin for WordPress, Blogger...