எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிரம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.

 மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.


பொறாமை வந்துவிட்டால் முப்பெரும் தேவியரும் மானுடர் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பொறாமையால் மும்மூர்த்திகளும் குழந்தையாக நேர்ந்தது. அதுவும் ஒரு முனிவரின் மனைவியான அனுசூயா அம்மூவரையும் குழந்தையாக்கி விட்டாள். நம்பமுடியவில்லைதானே. அது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

புதன், 4 மார்ச், 2020

பசியில் குதித்த பிரம்மகபாலம். தினமலர் சிறுவர்மலர் - 54.

பசியில் குதித்த பிரம்மகபாலம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழி உண்டு. இது மனிதர்களுக்குத்தான். ஆனால் ஒரு கபாலத்துக்குப் பசித்தது. அதனால் அது போட்டது அனைத்தையும் தின்று தீர்த்தது. சிவனுக்கு இட்ட உணவை எல்லாம் பகாசுரன் மாதிரி அதுவே அனைத்தையும் தின்றதால் சிவன் பசியால் துடித்தார். அதுவோ அனைத்தையும் தின்றும் பசியில் குதித்து அழிந்தது. அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அன்னை உமையவள் பரிவு கொண்ட மனத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கி வந்தாள். அதனால் காசி மாநகர மக்கள் பசிப்பிணி நீங்கி வாழ்ந்து வந்தனர். அன்னை உமையவளின் கணவர் சிவன் விளையாட்டாக அவளிடம் “உணவு என்பது மாயை” என்று கூற அன்னையோ ”உணவு இல்லாமல் உலகம் இல்லை. உங்களுக்கு உணவின் அருமை ஒருநாள் தெரியும் ” என்று கூறி கோபிக்கிறார்.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை. தினமலர். சிறுவர்மலர் - 43.

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை.
குழந்தை என்றால் அன்னையர் பத்துத்திங்கள் சுமந்து பெற்று வளர்ப்பார்கள். கருவில் உருவாகும் அக்குழந்தைக்கு எந்நோவும் வரக்கூடாது என்று மருந்துண்பார்கள். நதிகள்தோறும் கடலிலும் கூடத் தீர்த்தமாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்களின் தீர்த்தங்களையும் அருந்துவார்கள். வளைகாப்பு, சீமந்தம் என்று தாய்வீட்டில் சீராடுவார்கள். இப்படி எந்த நிகழ்வும் இல்லாமல் ஓரிரு நொடிகளில் ஒரு குழந்தை உருவானது. அதுவும் ஒரு ஓவியத்திலிருந்து உயிர்பெற்றது. இந்த அதிசயத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

புதன், 21 நவம்பர், 2018

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.



ந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.

திங்கள், 1 அக்டோபர், 2018

கர்வம் அழிந்த இந்திரன். தினமலர். சிறுவர்மலர் - 38.


கர்வம் அழிந்த இந்திரன்.

பதவி என்பது எப்பேர்ப்பட்டவரையும் ஆணவம் கொண்டவராக்கிவிடும் தன்மை வாய்ந்தது. சாதரண பதவி கிடைத்தவர்களே இப்படி என்றால் அமரர்களுக்கெல்லாம் தலைவனாகும் பதவி கிடைத்த இந்திரனுக்கு ஏற்பட்ட கர்வமும் அது எப்படி நீங்கியது என்பதையும் பார்ப்போம் குழந்தைகளே.

அமராவதிபட்டிணத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குத் தான் எல்லாரினும் மேம்பட்ட பதவி வகிப்பவன், தேவலோகத்தின் அதிபதி என்ற மண்டைக்கர்வம் ஏற்பட்டது. அதனால் அனைவரையும் உதாசீனப்படுத்திவந்தான். அமிர்தம் அருந்தியதால் தான் இறப்பற்றவன், ஈரேழு பதினான்கு லோகத்திலும் அதிகமான சம்பத்துக்களை உடையவன் என்ற இறுமாப்பில் இருந்தான்.

இந்திரசபையில் அவனுக்குக் கீழ்தான் அனைத்து தேவர்களும் கிரகங்களும் அமர்ந்திருப்பார்கள். ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, அப்ஸரஸ் கன்னிகளும் ததாஸ்து தேவதைகளும் அவனது கையசைவுக்குக் காத்திருப்பார்கள். கலா நிகழ்ச்சிகளும் கேளிக்கை கொண்டாட்டங்களும் அவன் விருப்பப்படிதான் நடந்துவந்தன. இப்படி இருக்கும்போது அவன் தன்னை விண்ணளவு அதிகாரம் கொண்டவனாக நினைத்துக் கர்வம் கொண்டான்.

திங்கள், 30 ஜூலை, 2018

விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் - 28.


விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன்.


ரு விஷயத்தைச் செய்யப் பகீரப் ப்ரயத்தனம் செய்தேன் என்பார்கள் அப்படி என்றால் என்ன ? பகீரதன் என்ற மாமன்னன் கங்கையை இப்பூமிக்குக் கொண்டுவர பலவிதமான தவம் தியானம் இவற்றை ஓராண்டு ஈராண்டல்ல பல்லாயிரம் ஆண்டுகள் இயற்றினார். அதைத்தான் பகீரதப் ப்ரயத்தனம் என்கிறார்கள். 

அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.

Related Posts Plugin for WordPress, Blogger...