மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.
பொறாமை வந்துவிட்டால் முப்பெரும் தேவியரும் மானுடர் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பொறாமையால் மும்மூர்த்திகளும் குழந்தையாக நேர்ந்தது. அதுவும் ஒரு முனிவரின் மனைவியான அனுசூயா அம்மூவரையும் குழந்தையாக்கி விட்டாள். நம்பமுடியவில்லைதானே. அது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.