எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மார்ச், 2023

சாணக்கிய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் ) - எனது இருபத்தி மூன்றாவது நூலின் முன்னுரை

சாணக்ய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் )


முன்னுரை

சாணக்யர் என்ற பேரையும், சாணக்ய நீதி, சாணக்ய சபதம் போன்றவற்றையும் கேள்விப்படாத இந்தியப் பெருமக்களே இருக்கமுடியாது. தனி வாழ்வில் ஆகட்டும் பொது வாழ்வில் ஆகட்டும், திறமையாக, சாமர்த்தியமாக, புத்தி சாதுர்யத்துடன், அளப்பரிய தந்திரத்துடன், தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் கையாள்பவர்களை ”அவன் சாணக்யண்டா” என்றும் “ராஜதந்திரி” என்றும் புகழக் கேட்டிருப்போம்.

”யதா ராஜா ததா பிரஜா, விநாசகாலே விபரீத புத்தி,  பழிக்குப் பழி, இதுவே சாணக்ய நீதி” என்றெல்லாம் வழங்கப்படும் பிரபலமான வாக்கியங்கள் இவரால் படைக்கப்பட்டவைதான்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு மகதநாட்டின் எல்லைப்புறத்தில் குடில கோத்திரத்தில் சனகா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சாணக்யர். தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பயின்று அங்கேயே பணியாற்றியவர். அதன் பின் மன்னர் தனநந்தரிடம் பதவி கேட்டுச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார். வீரர்கள் அவரை அரசவையை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது அவரது குடுமி அவிழ்ந்து விழுந்தது. அதனால்  நந்த வம்சத்தை ஒழிக்கும் வரை தன் குடுமியை முடிவதில்லை என்ற சபதத்தை ஏற்றவர்.

வியாழன், 16 மார்ச், 2023

மகாபாரதத் துணைக் கதைகள் - எனது இருபத்தி இரண்டாவது நூலின் முன்னுரை

 முன்னுரை




மகாபாரதமும் ராமாயணமும் இந்தியாவின் தொன்ம இதிகாசங்கள். மண்ணாசையால் வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியது மகாபாரதம். பெண்ணாசையால் அழிவு ஏற்படும் எனக் கூறியது இராமாயணம். தாய் வழிச் சமூகத்தின் மூலம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மகாபாரத அரசர்கள். அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் வாரிசுகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த ஆட்சி உரிமைப் போரை விளக்கும் இதிகாசம் மகாபாரதம்.

மகாபாரதத்தைத் தொகுத்தவர் வேதவியாசர். அவர் சொல்லச் சொல்லத் தனது கொம்பை ஒடித்து ஓலைச்சுவடிகளில் எழுதியவர் விநாயகர். பகவத் கீதை இதன் முக்கிய அம்சம். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதை முதலில் தமிழ்ப்படுத்தினார். அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. நல்லாப்பிள்ளை என்பவர் இயற்றிய “ நல்லாப்பிள்ளை பாரதம்” மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !



கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.
Related Posts Plugin for WordPress, Blogger...