எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுகதை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !



கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

காகிதச் சங்கிலிகள். - ஒரு பார்வை.

நேற்று பழைய புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சுஜாதாவின் புத்தகம் கையில் சிக்கியது.  முகநூல் சகோ கல்யாண்குமார் சொல்லியபடி நம் பால்யத்தில் படித்த (கல்லூரிப்பருவத்தில் ) எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும் என்ற அவாவில் இந்த இடுகை போட்டிருக்கிறேன். :)

காகிதச் சங்கிலிகள்

அநேகமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா. ரங்கராஜனாகிய அவர் தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதி வந்தார். சட்டென விஷயங்களைக் கடத்தும் எழுத்து அவருடையது. இவருடைய கணேஷ் வசந்த் இல்லாத தொகுப்பு இது. இத்தொகுப்பில் நான்கு கதைகள் இடம்பெறுகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...