எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கார்த்திக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2019

கார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.

விடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை

புத்தகத்தைப் பற்றி
கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை தொகுத்து இப்பொழுது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கட்டுரையாக வெளியிட்ட கல்கி குழுமத்திற்கும்,புத்தகமாக கொண்டு வந்த “படி வெளியீடு” நிறுவனத்திற்கும் நன்றிகள்.  நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற திரு. கல்கி அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வெகு சிறப்பு !

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !



கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.
Related Posts Plugin for WordPress, Blogger...