எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
VIDHYAGIRI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VIDHYAGIRI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2017

காரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்.



கவிஞர்கள். யா. சாம்ராஜ், அன்பரசன்,  நீ. இரவிச்சந்திரன், கவியரங்கத்தலைவர் கனவுதாசன், கல்யாணி கணேசன், தேனம்மை லெக்ஷ்மணன், மனோ. இளங்கோ. ஆகியோர்.


பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் ? ( கவியரங்கக் கவிதை )

பாரதி இன்று வந்தால். இன்றையக் கல்வி பற்றி என்ன சொல்லி இருப்பார்.?

தமிழ்த்தாய் வாழ்த்து.

தீஞ்சுவைப் பாலெடுத்து 
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் 

புளிக்குதென்பேன்.,
தமிழ்த்தாயிடம் மதலை நான் 

தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு 

என்னை வளர்த்த காரணத்தால் 
அவள்தாளில் தெண்டனிட்டேன்.
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்.

காரைமாநகர் வாழ்த்து:-

காரைக்கட்டிடங்கள் செறிந்திருக்கும் காரைக்குடி
கல்விக்குடியானது கொடைவள்ளலின் விடாமுயற்சியால்
கல்விக்கோட்டை கட்டி ஞாலம் புகழவைத்த
வள்ளலின் அழகூருக்கு வற்றாத வணக்கங்கள்.

வெள்ளி, 10 நவம்பர், 2017

காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.




பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தொகுப்பு நூல் .


மகாபாரதம் வினா - விடைகள். தொகுப்பு நூல்

செல்வி அரு அழகம்மை புதுவயல் வித்யாகிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பக்தி இலக்கிய விநாடி வினா போட்டிக்குத் தயார் செய்திருந்த கேள்விபதில்களை வினாடி வினா டைப்பில் தொகுத்து புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள். மிக நல்ல முயற்சி.

இந்நூலின் பின்னணியில் அவரது பள்ளியும் தமிழாசிரியரும், வள்ளுவர் பேரவையும் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...