கழற்ற முடியாத கணையாழி
”இறகைப் போலே அசைகிறேனே உந்தன் பேச்சைக் கேட்கையிலே..குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே. “ தொலைக்காட்சியோடு
பாடிக்கொண்டிருந்தான் ஸாம். அவனது இரு கைகளிலும் நந்தனும் நந்தினியும் எச்சில் ஒழுகும்
பொக்கை வாயோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் காலில் மாட்டியிருந்த மணித்தண்டையிலிருந்து ஜல் ஜல் என்ற ஒலி எழும்பிக்
கொண்டிருந்தது.
”மானூத்து மந்தையிலே மான்குட்டி
பெத்த மயிலே” என்று அடுத்த பாட்டை அவன் தொடரவும் கிக்கி கிக்கி என்றபடி இருவரும் அவனது
கன்னத்தில் எச்சில் விரலால் தொட்டுச் சிரித்தார்கள். அவன் உடல் முழுதும் குழந்தை வாசம்
அடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விலக இயலாத மயக்கம் அவனை ஆட்கொண்டது.
தேவி அமர்ந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸாம் குழந்தைகளை தங்கத்தாலே பூட்டி இருந்தான். கழுத்துச் சங்கிலி, ப்ரேஸ்லெட், இடுப்புச்சங்கிலி என தகதகவென ஜொலித்தார்கள் இருவரும். அவள் மேலும் குழந்தைகள் வாசம் அடித்துக் கொண்டுதான் இருந்தது.