ஸ்பைக் பஸ்டர்
”ஹேய் ஹேய் அண்ணனோட பாட்டு” என்று ரஜனி ஆடிக்கொண்டிருக்க முடி சிலும்பிச் சிலும்பி
விழுந்தது. ஸாம் பெருமையோடு ராணியின் அருகிலும் ரூபாவதியின் அருகிலும் நின்று புகைப்படத்துக்குப்
போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டு வாரங்கள் இங்குபேட்டரில் இருந்த அவனது குழந்தைகள்
நாப்கினால் நன்கு சுற்றப்பட்டு ஸாம் கையிலும் ராணி கையிலும் இருந்தார்கள்.
அனைவரும் புகைப்படத்துக்காகப்
புன்னகைத்து நகர்ந்ததும் அங்கே இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்தார்கள் ஸாமும்
ராணியும். ”எவ்ளோ தலைமுடி.” என்று. சிலும்பிக்
கொண்டிருந்த தலைமுடியைத் தடவியபடி சொன்னார் நீலாக்கா.
“நந்தினியும் நந்தனும் அவர் கைகளுக்கருகில் குன்றிமணிக் கண்களைத் திறந்து நாக்கை உதப்பிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். முகமெல்லாம் சிவந்து ரோஸ் நிறக் கன்னங்கள் மிளிர்ந்தன.