எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

காதல் வனம் வெளியீட்டில் சில கலகலப்பான புகைப்படங்கள்

 2019 ஃபிப்ரவரி பதினாலு அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் என்னுடைய காதல் வனம் நூல் வெளியிடப்பட்டது. 

அன்று ஏராளமான அன்பு உள்ளங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். 

ஸ்டில்ஸ் ரவி சாருக்கு நான் சரியான நேரத்தைக் கூறாததால் அவர் முன்பே வந்துவிட்டு வேறு ஃபங்க்‌ஷன் இருப்பதால் சென்று விட்டார். 

அன்று விழாவை ஸ்பெஷலாக்கியவர் கல்லூரித்தோழி அன்பு ஏர்னஸ்டினின் கணவர் பிரபல புகைப்படக்காரர் அருளானந்த குமார் அவர்கள். ஒரு கிராண்ட் ஃபங்க்‌ஷன் அளவுக்குப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளித் திணறடித்துவிட்டார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் !



அன்புத் தங்கையும் தோழியுமான புவனாவுடன். 



அன்றே காவிரி மைந்தன் அவர்களின் காதல்பரிசு நூலும் வெளியிடப்பட்டது. 

சிறப்பு விருந்தினர் சாஸ்திரி பவன் யூனியன் லீடர் அன்புத் தோழி மணிமேகலை, முனைவர் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன், நாச்சியாள் சுகந்தி, கவிதா சொர்ணவல்லி, அன்பு நண்பர் இளங்கோசார், மற்றும் பத்மா இளங்கோ மேம். 
வந்திருந்து கௌரவித்த பெருந்தலைகள்.

எம். ஏ. ராமமூர்த்தி சார் & அன்பு நண்பர் ராகவன் (நைஜீரியா) ஸ்ரீனிவாசன். 


தல கேபிள் சங்கருடன் - அம்மையப்பர் இல்லையா :)

அன்புத்தோழி பெருமாள் ஆச்சி. 

அன்பு ஆச்சி மகள் லெக்ஷ்மி ராமசாமியும், அன்புத் தோழி விஜயலெக்ஷ்மியும். இவர் காரைக்குடி வாசகர் வட்ட நண்பர். 



அன்பின் முனைவர் ஆதிரா முல்லையுடன்.


பதிப்பாளர் வேடியப்பனின் உரை. 
ஒவ்வொரு முறையும் எனக்காக ஸ்பெஷலாக வருகை தரும் அன்பின் தோழி நெல்லை உலகம்மை. 


அன்று வேளச்சேரியிலிருந்து சிறப்பாக வருகை தந்து வாழ்த்திய என் அன்பு அய்த்தான் சுப்பைத்தான் அவர்களும் அலமேலு ஆச்சியும். 
மதிப்பிற்குரிய நண்பர் வெளி ரங்கராஜன் அவர்களுடன்.


வெகு தொலைவுகளில் இருந்து வந்து காதல் வனம் நூலை வெளியிட்டுப் பெற்றுக் கொண்டு, உரை நிகழ்த்திக் கலந்து கொண்டு  வாழ்த்திய பெருமக்களின் அன்புள்ளங்களுக்கு நன்றி . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...