தவறு செய்பவர்கள் பலரகம். தெரிந்தே தவறு செய்பவர்கள்,தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று. சிலர் தவறே செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறானவர்களாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். கம்பராமாயணத்தில் நிரபராதியான ஒரு பெண் அப்படித் தண்டிக்கப்பட்டு மனதால் கல்லான கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒரு முறை ப்ரம்மா குறையே இல்லாத ஒரு பெண்ணைப் படைக்க எண்ணினார். அவள் பூரணத்துவம் மிகுந்தவள். அவள் முன் மோகினி கூட நிற்க முடியாது. அவ்வளவு எழில், அவ்வளவு அழகு, அவ்வளவு சாந்தம். தன்மையா குணம் கொண்ட அவளை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும் கூட ஆராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள். குறையே இல்லாமல் படைக்கப்பட்ட அவள் பெயர் அகல்யை.
அந்தப் பெண்ணரசி திருமணப் பருவம் எட்டினாள். அவளை மணந்துகொள்ள இந்திரனும் மற்ற தேவர்களும் கூட போட்டி போட்டனர். அங்கே வந்தார் துறவியான கௌதம மகரிஷி.
