எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 டிசம்பர், 2023

மறுபடியும் ரேவதி

மறுபடியும் ரேவதி



நேற்று இல்லாத மாற்றம் என்னது, கண்ணுக்கு மை அழகு, பொன்மானே கோபம் ஏனோ, காதல் வெண்ணிலா கண்ணில் வந்ததே, வந்ததே குங்குமம், பச்சைமலப் பூவு, பாடு நிலாவே தேன் கவிதை, பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு, காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம், பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா, சின்னச் சின்ன வண்ணக் குயில், நீபோகும் பாதையில் மனசு போகுதே மானே, ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ என எத்தனை எத்தனை மெலோடீஸ்.

நடிகையர் திலகம் சாவித்ரி, சரோஜாதேவி, கே ஆர் விஜயா என்ற வரிசையில் வைக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர் ரேவதி. இவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அழுத்தமானவை. பெண்ணின் பிரச்சனைகளைப் பல்வேறு கோணங்களில் பேசியவை. காஜோல் போன்ற குட்டி உருவம். க்ளோஸ் நெக் ப்ளவுஸ், தீர்க்கமான பெரிய கண்கள், திருத்தமான நாசி, அழகிய கூந்தல், வடிவான உடலமைப்பு, அந்தக் கண்கள் குறும்பில் உருளும்போது வெகு அழகாய் இருக்கும். உடலமைப்பால் அல்ல, நடிப்பால் மட்டுமே பேசப்பட்டவர்களுள் ரேவதி முக்கியமானவர்.  

புதன், 6 டிசம்பர், 2023

ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

 177.


3521.காரைக்குடிச் சிவன்கோவில் சிற்பங்கள்.






3522.அடேயப்பா என்று வியக்க வைக்கிறது. பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

#பாராட்டுக்களுக்கு நன்றிகள் :)

யூ ட்யூபில் 2281 - 2290 வீடியோக்கள்.

2281.ஐயன் அருளுண்டு என்றும் பயமில்லை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ex_5higC_Sc


#ஐயன்அருளுண்டுஎன்றும்பயமில்லை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN,



2282.பன்னிரு திருமுறைப் பாடல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Vh7jRh98YbY


#பன்னிருதிருமுறைப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 5 டிசம்பர், 2023

கழற்ற முடியாத கணையாழி

 கழற்ற முடியாத கணையாழி


றகைப் போலே அசைகிறேனே உந்தன் பேச்சைக் கேட்கையிலே..குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டையிலே. “  தொலைக்காட்சியோடு பாடிக்கொண்டிருந்தான் ஸாம். அவனது இரு கைகளிலும் நந்தனும் நந்தினியும் எச்சில் ஒழுகும் பொக்கை வாயோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் காலில் மாட்டியிருந்த மணித்தண்டையிலிருந்து ஜல் ஜல் என்ற ஒலி எழும்பிக் கொண்டிருந்தது.

 

”மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அடுத்த பாட்டை அவன் தொடரவும் கிக்கி கிக்கி என்றபடி இருவரும் அவனது கன்னத்தில் எச்சில் விரலால் தொட்டுச் சிரித்தார்கள். அவன் உடல் முழுதும் குழந்தை வாசம் அடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விலக இயலாத மயக்கம் அவனை ஆட்கொண்டது.

 

தேவி அமர்ந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸாம் குழந்தைகளை தங்கத்தாலே பூட்டி இருந்தான். கழுத்துச் சங்கிலி, ப்ரேஸ்லெட், இடுப்புச்சங்கிலி என தகதகவென ஜொலித்தார்கள் இருவரும். அவள் மேலும் குழந்தைகள் வாசம் அடித்துக் கொண்டுதான் இருந்தது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

திரு சோம. வள்ளியப்பன் அவர்களின் பார்வையில் எனது நூல்கள்

 திரு சோம வள்ளியப்பன் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், நிதி ஆலோசகர். பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்து வரும் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் எனது நூல்கள் பற்றித் தனவணிகனில் எழுதிய கருத்துக்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


கிரிக்கெட்டர் டோனி, கவியரசர் கண்ணதாசன் ஆகியோர் பற்றிக் கூறி என் முயற்சிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


அவருக்கு மனமார்ந்த நன்றிகள். இதை வெளியிட்ட தனவணிகன் இதழுக்கும் அதன் ஆசிரியர் திரு. வி.என்.சிடி. வள்ளியப்பன் அவர்களுக்கும் நன்றிகள். 


Related Posts Plugin for WordPress, Blogger...