மறுபடியும் ரேவதி
நேற்று இல்லாத மாற்றம் என்னது, கண்ணுக்கு மை அழகு, பொன்மானே கோபம் ஏனோ, காதல் வெண்ணிலா கண்ணில் வந்ததே, வந்ததே குங்குமம், பச்சைமலப் பூவு, பாடு நிலாவே தேன் கவிதை, பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு, காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம், பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா, சின்னச் சின்ன வண்ணக் குயில், நீபோகும் பாதையில் மனசு போகுதே மானே, ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ என எத்தனை எத்தனை மெலோடீஸ்.
நடிகையர் திலகம் சாவித்ரி, சரோஜாதேவி, கே ஆர் விஜயா என்ற வரிசையில் வைக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர் ரேவதி. இவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அழுத்தமானவை. பெண்ணின் பிரச்சனைகளைப் பல்வேறு கோணங்களில் பேசியவை. காஜோல் போன்ற குட்டி உருவம். க்ளோஸ் நெக் ப்ளவுஸ், தீர்க்கமான பெரிய கண்கள், திருத்தமான நாசி, அழகிய கூந்தல், வடிவான உடலமைப்பு, அந்தக் கண்கள் குறும்பில் உருளும்போது வெகு அழகாய் இருக்கும். உடலமைப்பால் அல்ல, நடிப்பால் மட்டுமே பேசப்பட்டவர்களுள் ரேவதி முக்கியமானவர்.