எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வியாழன், 27 டிசம்பர், 2012

கிளம்பவேண்டிய நேரம்

காலம் கடந்துவிட்டது
நீங்கள் கிளம்பவேண்டிய
நேரம் வந்துவிட்டது.
நொடிக்கணக்குடன் துல்லியமாய்.

ஒரு புத்தக வாசிப்பு
பாதிப்பக்கங்களில்
சுவாரசியம் தீர்க்காமல்
உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

புதன், 26 டிசம்பர், 2012

அசூயை.

பின்னெப்போதும்
இருந்திருக்கவில்லை
அந்த உணர்வு.

புரவி பிடறி சிலிர்க்க
ஓடியபோதும்
வியர்த்திருந்தது.

காணாத ஒன்றைக்
கண்டதாய்
பொய்ப்பித்தது கண்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2,ஏப்ரல் 2012, திண்ணையில் வெளியானது.


வியாழன், 20 டிசம்பர், 2012

பூவரசி அரையாண்டிதழ். எனது பார்வையில்


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 4, மார்ச் 2012 திண்ணையில் வெளியானது.


புதன், 19 டிசம்பர், 2012

சேமிப்பு

”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ”

”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”.

மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மகாபலிபுரம்,, உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி. நூல் விமர்சனம்


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை 13, ஃபிப்ரவரி, 2012  திண்ணையில் வெளியானது.


திங்கள், 17 டிசம்பர், 2012

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா... சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. அட நீங்க ஸ்லிம் ஆகத்தான். எதுக்கு ரெண்டு..? வீட்டுக்காரர் கூட போகவான்னு கேக்குறீங்க. அட அது ரெண்டுமே உங்களுக்குத்தாங்க.. ஏன்னா ஒரு ஊருக்குப் போயிட்டு திரும்ப வீட்டுக்கு வரணும்ல.. அதான்.

முக்கியமா அது ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் அல்லது சேரன் அல்லது ப்ளூ மவுண்டனா கூட இருக்கலாம். கொஞ்சம் இருங்க வெயிட் லாசுக்காக உங்களை மலை எல்லாம் ஏற சொல்லலை. நீலகிரி எக்ஸ்ப்ரஸைத்தான் அப்பிடிச் சொன்னேன். அப்புறம் முக்கியமா. ராத்திரி ட்ரெயினுக்கு புக் பண்ணுங்க.அதுவும் கடைசி சமயத்துலதான் தட்கால்ல புக் பண்ணனும் . அப்பத்தான் நம்ம கோச்சே இருக்கோ இல்லையோன்னு தேடிக்கிட்டே போனாம்னா ஏ1., ஏ2.,ஏ3., ஏ4 இது போல பி1 லேருந்து பி 4 வரை அப்புறம் ஏசி கோச். அப்புறம் எஸ் 1 எஸ் 2 லேருந்து எஸ் 11 வரைக்கும் இருக்கும். ஆனா எஸ் 12 இருக்காது. அதுக்குத்தான் நீங்க டிக்கட் புக் பண்ணி இருப்பீங்க. நீங்க நடந்து நடந்து கடைசியா எஞ்சினே வரபோகுது. ஒரு வேளை பாத யாத்திரையாவே போகப்போறமோன்னு நினைக்கும்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் அதுக்கும் அப்புறம் எஞ்சின் பக்கத்துல அப்பாடா உங்க எஸ் 12 வந்திருச்சு. சரி விருவிருன்னு ஏறி உக்காருங்க..அடுத்த ஊருக்க்கே வந்துட்டமோன்னு களைப்பா நடந்து வந்த நேரத்துல ட்ரெயின் கிளம்பிறப்போகுது.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை 30, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்தது.


திங்கள், 10 டிசம்பர், 2012

நம் உரத்தசிந்தனையில் இணையதள ப்லாகர்.

மார்ச் 2012, நம் உரத்தசிந்தனை இலக்கிய இதழில் இணையதள ப்லாகர் என்ற தலைப்பில் திரு. பத்மா மணி அவர்கள் என்னைப் பற்றிய குறிப்புக்கள் கொடுத்துள்ளார்கள். இந்த இதழ் உரத்த சிந்தனை அமைப்பிலிருந்து வெளி வரும் இலக்கிய இதழாகும்.

சனி, 8 டிசம்பர், 2012

MENSES. மாதவிடாய்.

மாதவிடாய் பற்றி என் அன்புத் தங்கையும் தோழியுமான கீதா இளங்கோவன் எடுத்த ஆவணப்படம் இன்று பி. ஏ. ராமசாமி ராஜா ஹால், பாரதீய வித்யா பவன், சென்னையில் வெளியிடப்படுகிறது.

பாலபாரதி, தமிழிசை சௌந்தர்ராஜன், திலகவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

மூளையும் நாவும்.

வார்த்தைகளைக் கோர்த்துச்
சித்திரங்கள் வரைவது
பிடித்தமானது அவளுக்கு.

வரையும்போதே வண்ணங்கள்
சிதறி விழுகின்றன
மண்ணாய் அங்குமிங்கும்.

மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது
மண்டையோட்டுக்கான
வண்ணம் போதாமல்.

வியாழன், 6 டிசம்பர், 2012

குளம்.

பற்களான படிக்கட்டுக்களோடு
பாசம் புதையக் காத்திருந்தது குளம்.

தட்டுச் சுற்றான வேட்டியுடன்
தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன்.

விரால் மீன்களாய் விழுந்து
துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள்.

இரவுக்குள் ஒளிய நினைத்து
கருக்கத் துவங்கியது தண்ணீர்.

புதன், 5 டிசம்பர், 2012

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்” ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ்.

“அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா.

“என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ் அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

மந்திரப்பூனை. நூல் பார்வை..


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

வெள்ளி, 30 நவம்பர், 2012

மழை.

புலிக்குட்டிகளாய்
உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.

குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.

வியாழன், 29 நவம்பர், 2012

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

இன்றைய இந்தியாவின் மிக அத்யாவசியமான தேவை எது என்றால் கழிப்பிடங்கள் என்றுதான் சொல்வேன். ஏனெனில் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்யும்போதுதான் தெரியும் எத்தனை பெரிய நீளமான டாய்லெட்டை அரசாங்கம் அமைத்துள்ளது என்று. அது போக சுற்றி இருக்கும் வயல்வெளிகள், கம்மாய்கள் எல்லாமே இயற்கை உபாதையைத் தீர்க்கும் இடமாகவே திகழ்கின்றன.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் செல்லும்போது அங்கே ஒரு செம்மொழி நூலகம் திறக்கப்படக் காத்திருந்தது. இந்த முறை அது திறக்கப்பட்டு செயல்படுவதாகத் தோன்றியது. ஆனால் அடுத்தே ஒரு முகம் சுளிக்கும் காட்சியைக் காண நேர்ந்தது. அதன் பக்கமிருந்த வயல்களில் சிலர் அங்கேயே போய் அதன் பக்கம் தேங்கி இருந்த மழைத்தண்ணீரையே அள்ளிக் கழுவிக் கொண்டிருந்தனர்.

புதன், 28 நவம்பர், 2012

எஸ்டிமேட்..

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..”

”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்திரு.”

பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன் சிக்கன்தான். ஆர்ப்பாட்டமா இருக்குடா.. எங்க அம்மாவுக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும். ”

சின்னவன் நண்பர்களை அழைக்கச் சென்றிருந்தான். எல்லாரும் வந்துவிட ., ”டேய், தம்பி. இன்னும் கொஞ்சம் நேரமாகும். அந்த ஃபாண்டாவை ஊத்திக் கொடு எல்லாருக்கும்.”

செவ்வாய், 27 நவம்பர், 2012

சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 10, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்தது. 


திங்கள், 26 நவம்பர், 2012

குங்குமம் தோழியில் குட்டி ராஜாக்களும் சுட்டி தேவதைகளும்.

1. வளர்ந்து கொண்டே
போகிறாள் மகள்
குழந்தையாகிறேன் நான்.

2. அட்டைப் பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்.
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை.

புதன், 21 நவம்பர், 2012

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


டிஸ்கி:- இந்த விமர்சனம் 2 அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம்..

அம்பேத்கார் மற்றும் பெரியார் இந்த இரு பெயர்கள் இல்லாமல் நாம் பெண்களின் விடுதலை பற்றிப் பேச முடியாது. வர்ணாசிர தர்மங்களை இறுக்கிப் பிடித்திருந்த நம் நாட்டில் (ஐந்தாவது வர்ணமாக குறிப்பிடப்படாவிட்டாலும்) பெண் இனம் என்ற ஒன்றுதான் அந்த ஐந்தாவது வர்ணம் என்று சொல்லலாம்.

மிக முன்னேறிய நாடுகளில் கூட மனைவி அடிமை மாதிரி நடத்தப்படுவதைக் காண்கிறோம். பெண்கள் மீது வன்முறை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளிகள், கொத்தடிமைகள், பாலியல் தொழிலாளிகள் என்று பலவிதத்திலும் இன்னல்படும் இனம் பெண்ணினம். சொல்லப்போனால் எல்லா வர்ணத்தின் ஆண்களும் தங்களின் கீழானதாகக் கருதும் இனம் பெண்ணினம்தான். அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட தங்கள் மனைவி தங்களுக்கு அடங்கி ஒடுங்கிப் போக வேண்டும் என எண்ணுகிறார்கள். சீதை கண்ணகி, நளாயினி இப்படித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது சமூகம்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

விடுவிப்பு.

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.

வியாழன், 15 நவம்பர், 2012

மனித நேயர்

தொழுகைத் தொப்பி
புனிதநூல் பிரதி
பேரரசன் உடுப்பிற்கும்
உணவிற்கும்
நெய்தபடி இருந்தார்.

மலை எலிகளை
விரிந்த நாகங்களை
விக்கிரகங்களை உடைத்து
பள்ளிகளை
எழுப்பினார்.

டாரா ஷிக்கோ
புறச்சமயியானான்,
அவனோடு ஷூஜா, முராட்,
சர்மட்டை சிதைத்தார்
வாழும் புனிதர்.

மதமெனும்
மதுவில் மூழ்கியவர்
வீராபாயையும்
இழந்தார் தந்தையின்
அன்பையும்.

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.

இந்தக் குழந்தைகள் தினத்தன்று என்னைக் கவர்ந்த மூன்று பெற்றோரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் முகநூலில் சந்தித்தவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்கள் ஈடுபடும், ஆர்வம் கொள்ளும் துறையில் ஊக்கம் கொடுப்பவர்கள். விடாமுயற்சியோடு செய்யும் கலையை இவர்கள் இவர்களின் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எனவே என்னுடைய ராயல் சல்யூட்  இந்த மூன்று பெற்றோருக்கும்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

காதலும் சாதலும்

இன்னிக்கு முளைச்ச 20 வயதுப் பிள்ளைகள்   நேத்திக்கு முளைச்ச 40 களில் இருக்கும் அப்பா அம்மாவையும் மதிப்பதில்லை.  முந்தாநாள் முளைச்ச 60 களில் இருக்கும் தாத்தா பாட்டி சொல்பேச்சும் கேப்பதில்லை.

ஒரு பெண் அப்பா அம்மாவை மதித்திருந்தால் அவர்களின் சம்மதத்தோடு மணப்பதுதான் காதலுக்கு மரியாதை. அதை விட்டு என்னவோ நடக்கட்டும் நாம் பாடு போவோம் எனப் போனதால் இன்று எத்தனை உயிர்கள் பலி. என்ன ஒரு சுயநலம். 20 வயது வரை வளர்த்த தகப்பன் முக்கியமில்லை, தாய் முக்கியமில்லை. சமூகத்தில் அவர்களின் மதிப்பு முக்கியமில்லை தன்னுடைய காதலும் காமமுமே முக்கியம் என்றால் அந்தப் பையனை அழைத்து வந்து  அவனுடைய நல்ல நடத்தைகளையும் குணநலன்களையும் புலப்படுத்தி சம்மதம் வாங்கித்தான் மணந்து கொண்டிருக்க வேண்டும்.

வெள்ளி, 9 நவம்பர், 2012

வியாபாரி..

மிக உன்னதமான
ஒன்றைப் போன்ற
பாவனைகளுடன்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைகளும்
மிக எளிமையான
ஒன்றைப் பற்றி.

புரிந்து கொள்ளவும்
உணர்ந்து கொள்ளவும்
அயற்சி ஏற்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்
அதன் மதிப்பை
அதிகப்படுத்துகின்றன.

வியாழன், 8 நவம்பர், 2012

அவரோகணம்.

பழக்கப்பட்ட உடல்களைப்
போலிருந்தன அவை
செய்கையும் செய்நேர்த்தியும்
எத்தனை சிற்பியோ..
விரிந்தும் குறுகியும்
அகண்டும் பருத்தும்
ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள்
அறிகுறிகளின் கையெழுத்தோடு.

புதன், 7 நவம்பர், 2012

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனம்  17 செப்டம்பர் ,2011 திண்ணையில் வெளியானது.


செவ்வாய், 6 நவம்பர், 2012

வயதான பெண்களின் உடல் நலம்.

என் அம்மாவழிப் பாட்டி ( ஆயா) க்கு 87 வயதாகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் கூட குந்தாணியில் உலக்கையால் இடித்து நெல் குத்துவார், மாவு இடிப்பார். என்னால் கூட அப்படி எந்த உடல் உழைப்பும் செய்ய இயலாது. ஏனெனில் நான் யந்திரங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். தண்ணீர் இறைத்தல், மாவு ஆட்டுதல், அம்மியில் அரைத்தல் , துணி துவைத்தல் போன்ற எல்லாச் செயல்களும் எனக்காக எந்திரங்கள் செய்கின்றன. இன்னொரு காலத்தில் எனக்காக மூச்சு விடுதலைக் கூட எந்திரங்கள் நீட்டித்துக் கொடுக்கலாம்.

திங்கள், 5 நவம்பர், 2012

ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஸ்பெஷல் பதிப்பு ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் ரஜனி பற்றிய கருத்துக்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தார்கள். என்னுடைய கருத்து இதோ..


“ ரஜனி என்றால் நம் மனதில் வரும் பிம்பம் என்ன. ஸ்டைல் என்றால் ரஜனி ரஜனி என்றால் ஸ்டைல். என் சகோதரர்கள் முரட்டுக்காளையில் வரும் , ”பொதுவாக என்மனசு தங்கம். ஒரு போட்டி”யின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலை பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பாடி ஆடுவார்கள்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

பூனைகள்..

அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
 கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.

முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.

வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.

வியாழன், 1 நவம்பர், 2012

REVIEW OF "LOOPER".. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

LOOPER.. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

கோபாலன் சினிமாஸில் லூப்பர் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிசின் படம். 2074 இல் காலப் பயணம் கண்டுபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல அது கிரிமினல் கூட்டங்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கப் பயன்படுத்துகிறது. கான்சாஸில் இருக்கும்  மாஃபியா கும்பல்கள் 30 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று தங்களுக்கு எதிரியாக மாறப்போகிறவர்களை வாடகைக் கொலையாளி அதாவது லூப்பர் மூலம் தீர்த்துக் கட்டுகிறது.

வீடழகு.

எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.

வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.

நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.

புதன், 31 அக்டோபர், 2012

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மாமியார் மருமகள் உறவுமுறை..

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

திங்கள், 29 அக்டோபர், 2012

மேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.

குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் இருந்து மேக்கப் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறிய கருத்துக்கள் :-

“பொதுவா கேட்டா தேவையில்லைன்னுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்முடைய நிறமிகளை வெண்க்ரீம்கள் மறைத்து வெண்மையாக்கி காண்பிக்கின்றன. இயற்கைப் பொருட்களான தயிர்., எலுமிச்சை., தக்காளிச்சாறு., முல்தானி மிட்டி., தேன் பழக்கூழ்., பாலாடை, கசகசா., கடலை மாவு, பயத்த மாவு போன்றவை கலந்து குளித்தாலே கலர் கொடுக்கும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கனவுகள்

இரவு கருத்ததும்
கலங்கரை விளக்காய்
ஒளிவிடத் தொடங்குகின்றன
இன்றைக்கான கனவுகள்.

ஒளிர்ந்த விளக்குகள்
பிடறி சிலிர்க்கும்
சவாரிக் குதிரைகளாய்
காற்றில் பறக்கின்றன.

ஆசைக்காற்றில் உப்பி
வண்ண பலூன்களாகி
பருக்கத் தொடங்குகின்றன
கடல் மண்ணிலிருந்து.

வியாழன், 25 அக்டோபர், 2012

சங்கமம்..

நதியாய்ப் பெருகி
கரைகளைப் புணர்ந்து
புற்களையும் விருட்சங்களையும்
பிரசவித்திருந்தாள்.

வரத்து வற்றிய கோடையிலும்
நீர்க்காம்பைச் சப்பியபடி
பருத்துக் கிடந்தன
வெள்ளரிகள் கம்மாய்க்குள்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

காலால் வரையும் சாதனை ஸ்வப்னா..

இந்த வருடம் பெண்கள் தினத்தில் உங்களுக்கு இன்னொரு தன்னம்பிக்கைப் பெண்ணை அறிமுகப்படுத்தப் போகிறேன். இறைவன் அருளால் எல்லா வளமும்., எல்லா நலமும் பெற்றிருக்கும் உங்களில் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள். பிறப்பிலேயே ஏதாவது குறைபாட்டோடு பிறக்கும் பிள்ளைகளுக்கு கடவுள் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறார். அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ளவும், தங்கள் திறமை என்ன என கண்டுபிடிக்கவும் கூட. இப்படிப்பட்ட ஒருவர்தான் அகஸ்டின் ஸ்வப்னா.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)

வெள்ளி, 19 அக்டோபர், 2012

எடைமேடை.

தன்னைத்தானே நீதிமானாகக்
கற்பித்துக் கொள்ளும் ஒருவன்
பார்க்கும் அனைத்தையும்
எடையிட்டுக் கொண்டிருக்கிறான்.

கடந்து செல்லும் ஒரு பெண்ணை
உற்று நோக்குகிறான்.
அவள் திரும்பப் பார்த்தால்
மகிழ்வடைகிறான்.
 பிடித்தமானவள் என்றோ
உத்தமி என்றோ
குறியீடு இடுகிறான்.

வியாழன், 18 அக்டோபர், 2012

சந்திப்பு..

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

புதன், 17 அக்டோபர், 2012

பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.

வண்ணத்துப் பூச்சியின் மெல்லிய அழகோடு பச்சைக் கிளியின் மொழியோடு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அவர்தான் அர்ச்சனா அச்சுதன். தந்தை பெயர் அச்சுதன் . ரோட்டேரியன். தாய் மதுமதி அச்சுதன். தன் புத்திசாலித்தனமன பேச்சுக்களால் அடுத்தவர்களை தன்னுடைய இரண்டு வயதிலேயே மயங்கச் செய்தவர். எந்தக் கேள்விக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் இந்தப் பைங்கிளிக்கு ஒரு சின்ன குறைபாடு இருப்பதை இவரின் பெற்றோர் கண்டுபிடித்தார்கள். அது செரிப்ரல் பால்ஸி எனப்படும் ஒரு மூளைச் செயல் குறைபாடு நோய்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..

பெண்கள் தினம் கொண்டாடப்படுவதே உழைக்கும் மகளிரைக் கொண்டாடத்தான். என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணும் இங்கே சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணுக்கு இங்கே நல்ல சம்பளத்தில் காம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலை. அவருக்கு அந்த வேலையைத் துறந்துவிட்டு திருமணம் செய்து அமெரிக்கா செல்ல யோசனை. கைநிறைய சம்பாதித்து செலவு செய்தது போக எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்க்கவேண்டுமே என்ற அச்சம். தன்னுடைய தனித்துவம் , பொருளாதார சுதந்திரம் போய்விடுமோ என்ற கவலை.

ஒரு நாள் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன் அவரோடு. அங்கே சென்றபின்னும் அதேபோல வேலை கிடைக்கும் . எனவே திருமணத்துக்கு சம்மதிக்கும்படி சொன்னேன்.இன்று அங்கே சென்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். காரியர் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது., திருமணம் செய்து கொள்ளக் கூட யோசிக்கும் அளவு.

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

திரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றிவேல்..

சாவி குழுமத்தின் மூலமாக இன்றைய ஆ.வி மாணவர் திட்டத்திற்கு முன்னோடியான மாலனின் திசைகள் வார இதழ் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகம்.. குமுதம் சூர்யகதிர் இதழ்களில் சிறுகதைகளும் இந்தியா டுடே , தினமணி இதழ்களில் கட்டுரையும் வெளிவந்துள்ளது.. பல்வேறு இணைய இதழ்களில் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.. . தீவிர வாசகர்.. சங்க இலக்கியம் முதல் இன்று வலைப்பூக்கள் மூலம் எழுத வந்துள்ள இளம் படைப்பாளிகள் வரை அனைத்தும் படிப்பதில் ஆர்வம்.. இலக்கியம் தவிர அரசியலில் அதிக ஆர்வம்.. திராவிட இயக்கச் சிந்தனைகள் கொண்டவர்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்..

வியாழன், 11 அக்டோபர், 2012

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்....

புதன், 10 அக்டோபர், 2012

கானாவும் வெண்பாவும் அபுல்கலாம் ஆசாத்தின் எண்ணத்தில்.

///எல்லாரும் எதிலிருந்தாவது விடுதலை பெறவேண்டும் என்னும் நினைப்பில் கொஞ்சமாவது ஆழ்ந்துதான்போகிறோம் என்பது எனது கருத்து. சில தத்துவார்த்தமான பொழுதுகளில் துறவறச் சிந்தனை மேலோங்கி குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வோமா என்னும் நினைப்பு தோன்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன./// இது விடுதலை என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு தேன்கூடு .காமுக்கு அனுப்பச் சொன்னபோது நான் ஆசாத்ஜி எனக் குறிப்பிடும் திரு. அபுல் கலாம் ஆசாத் சொல்லியது.

காத்திருக்கிறேன்..

நான் காத்திருக்கிறேன்
என்பது தெரிந்தும்
உணராமலே வீடு சேர்கிறாய்
ஒவ்வொரு நாளும்.

உன் கைபிடித்துக்
கடைவீதி செல்லக் காத்திருக்கிறேன்.
தனியறையில் துய்க்காமல்
தேனிலவென்று சென்று
சுற்ற காத்திருக்கிறேன்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீங்க என்னவா இருக்கீங்க என்று கேட்டால் நான் வெறும் ஹவுஸ் வைஃபாதாங்க இருக்கேன். என சொல்லி இருக்கிறேன் . அது என்ன ஹவுஸ் வைஃப். சில வீடுகளில் தற்போது பெண்கள் நல்ல ப்ரொஃபஷனில் இருக்க அவர்கள் துணைவர்கள் எழுத்தாளர்களாகவோ அல்லது திரைத்துறையில் வெற்றி காணும் முயற்சியிலோ ஈடு பட்டு இருக்காங்க. மனைவி அலுவலகம் செல்ல அவங்க துணையா இருக்காங்க இது அவர்களின் சுய தேவையின் பொருட்டே. அவங்க கிட்ட நீங்க என்ன செய்கிறீங்கன்னு கேட்டா நான் தற்போதைக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டா இருக்கேங்க என சொல்வதில்லை. மாறாக என்ன செய்ய அல்லது என்னவாக ஆக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

ஹவுஸ் வைஃபாக மட்டும் இருப்பது ரொம்ப சுலபமான காரியமா என்ன.?

திங்கள், 8 அக்டோபர், 2012

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்து என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டுக் கடிதம் வந்தது. தினமலர் திருச்சி பதிப்பில் வெளிவந்த சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் பார்த்தபின் புத்தகம் வேண்டி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

சனி, 6 அக்டோபர், 2012

அலமாரி

குழந்தைகள் வளர வளர
உடுப்புக்கள் வளர்வதுபோல்
அலமாரிகள் வளர்வதில்லை.
 நகைகளும் சில சேர்ந்ததால்
லாக்கருடன் இன்னொரு பீரோதேடி
கணவனும் மனைவியும்
கடைகடையாய் அளந்தார்கள்.

அவன் சாக்லெட் நிறமெனில்
அவள் அது செங்கல் நிறமென்றாள்
அவள் சில்வர் க்ரே எனில்
அவன் அது கல்லறைச்சாம்பலென்றான்.
கறுப்புநிற அலமாரி பார்த்து
அது சாத்தானின் நிறமென்று
தள்ளிப் போகிறார்கள்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தொலைந்த ஒன்று

தொலைத்தது எங்கே
எனத் தெரியவில்லை
தேடுவது எங்கே எனவும்
பிடிபடாததாக.

இருட்டிலும் வெளிச்சத்திலும்
துழாவிக் கொண்டிருந்தேன்
தொலைத்த இடம் என
நம்பப்பட்ட இடத்தில்..

அது என்னுடையதாகத்தான்
இருந்ததாகத் தோன்றியது
வேறொன்றுடையதாகவும்
இருந்திருக்கலாம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

கருணையாய் ஒரு வாழ்வு...

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல்.

கருணையாய் ஒரு வாழ்வு...:-
*******************************

செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.??

பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..?

செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை குறித்து ஏதும் சட்டங்கள் இயற்றப்படவில்லை

புதன், 3 அக்டோபர், 2012

அளவுகோல்..

வெளியூர் சென்றுவந்தபின்
உறவினரைப் பார்த்துவந்தபின்
அலுவலகப்பெண்களைப் பார்க்கும்போதும்
அந்நியப்பெண்களைப் பார்க்கும்போதும்
அவர் கையில்
அளவுகோல் முளைத்துவிடுகிறது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இன்னொரு ஜென்மம்.

பள்ளித் தோழனைப் போல
தோளணைத்துச் செல்ல வேண்டும்.
காக்காய் கடி கடித்து
கமர்கட் சாப்பிட வேண்டும்.
அட்டை வாளால்
விளையாட்டாய் சண்டை
போட்டுக் கொள்ளவேண்டும்.

திங்கள், 1 அக்டோபர், 2012

நட்பு அழைப்பு

கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.

கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.

யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.

சனி, 29 செப்டம்பர், 2012

உயிரற்றும் இருப்பது.

ஒற்றைக் கோப்பையில்
இனிப்புத் திரவம்
வசீகரித்தது.

இதமான சூட்டில்
ஆடை மேலமர்ந்ததும்
கால் வழுக்கியது.

தலைகுப்புற விழுந்ததும்
ஞாபகம் வந்தது
நீச்சல் தெரியாதது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இடறல்.

ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.

வியாழன், 27 செப்டம்பர், 2012

சகிப்பு

கர்ண குண்டலங்களைப் போல
கனமாக இருந்தாலும்
கழட்டி வைத்துவிட
முடிவதில்லை அவைகளை.

அறுத்தெறிந்தாளாம்
மறத்தமிழச்சி
பால்குடித்தவன்
வீரனில்லை என்பதால்.

புதன், 26 செப்டம்பர், 2012

ஜ்வெல் லோன்.

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி..

“என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?”

“ஆமாம். நீங்க நலமா..”

பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

”சாதனை அரசிகளு”ம், ”ங்கா”வும் மயிலாடுதுறையில்.

”சாதனை அரசிகள்” மற்றும் ”ங்கா” புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகி வருகின்றன. சாதனை அரசிகள் புத்தகம் வெளிவரும் முன்பே சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அதன் முழு விநியோக உரிமை - டிஸ்கவரி புக் பேலஸ் என்று போட்டு வெளியிடவேண்டுமென்று சொன்னார்.

வள்ளல்.

வேலை செய்பவளுக்கு
முதல் தேதியே சம்பளம்..
பிச்சை கேட்பவனுக்கு
ஒற்றை ரூபாய்.
அநாதை ஆசிரமத்துக்கு
பழைய துணிகள்.
உறவினர் குழந்தையின்
கல்விச் செலவில் ஒரு பங்கு

திங்கள், 24 செப்டம்பர், 2012

வீடும் வீடு சார்ந்த இடமும்..சமுதாய நண்பனில்

அடி பம்பு.,
முக்குச் சந்து.,
மிரட்டும் வண்டிகள்.,
பெட்டிக் கடை,
தண்ணீர் லாரி.,
சிதறிய குப்பைத்தொட்டி.,
வறுபட்ட பஜ்ஜிகள்.,
மழைச்சேறு
மனித முகங்களைச்
சுமந்து கிடந்தது
எனக்கான வீடு..
Related Posts Plugin for WordPress, Blogger...