பூக்களும்
பூவையர்களும்.
பூக்களிலே
நானும் ஒரு
பூவாய்த்தான்
பிறப்பெடுத்தேன்.
பூவாய்
நான் பிறந்தாலும்
பொன்விரல்கள்
தீண்டலையே.
பொன்விரல்கள்
தீண்டலையே
நான்
பூமாலை ஆகலையே.
என்ற
மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த
இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில்
நிற்கின்றது.
நேரு
மாமா என்றால் நமக்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, மென்னகை அரும்புதல், முல்லைச்
சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா,
பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று
நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.