எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெண் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2015

பூக்களும் பூவையர்களும்.

பூக்களும் பூவையர்களும்.


பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்.
பூவாய் நான் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே.
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூமாலை ஆகலையே.

என்ற மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில் நிற்கின்றது.

நேரு மாமா என்றால் க்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, ென்னஅரும்புதல், முல்லைச் சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா, பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.

திங்கள், 1 ஜூன், 2015

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

சமீபகாலமா எதை எடுத்தாலும் ரேட்டிங்க்தான். ஒரு பொருளை வாங்கப் போனாலும் சரி ஒரு அலுவலகத்தில் வருடாந்திர முடிவிலும் சரி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரி. ரேட்டிங் போட்டு அவர்களைத் தரம்தாழச் செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது உலகம்.

முன்பு எல்லாம் பொருட்களுக்கு ரேட்டிங்க் வைத்து விற்பதில்லை. தரமான பொருட்களையே நாம் வாங்கினோம் என்பதல்ல. அவ்வளவு சுகாதாரக் கேடும் நோயும் ப்ளாஸ்டிக் உபயோகமும் , மரபணு மாற்றப் பயிர்களும் உரங்களும் தாக்காத காலகட்டத்தில் இருந்தோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இன்றைப் போல பெருவாரியாக விதம் விதமான காய்ச்சல்களும் தொற்று நோய்களும் இல்லை. கொஞ்சம் ஆரோக்கியமாகவே இருந்தோம் என்று சொல்லலாம்.

புதன், 27 மே, 2015

திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-



திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-

குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார்  (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க  அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.

திங்கள், 9 மார்ச், 2015

உடை அரசியலும் உடல் அரசியலும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. என்ற திரைப்படப் பாடல் கேட்டு இருக்கலாம். தமிழ்நாட்டுப் பெண்கள் என்றால் புடவைதான் அணிய வேண்டும் என்ற மனோபாவத்தில் கிண்டலாக எழுதப்பட்ட பாடல் அது.

தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.

திங்கள், 9 ஜூன், 2014

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-
 "மது லோகா " இது பெங்களூருவில் இருக்கும் ஒரு மதுபானக் கடை.. ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை எனக் காட்ட இங்கே இரு பாலாரும் மதுப் புட்டிகளைக் க்யூவில் சரிசமமான அளவில் நின்று வாங்கும் கண் கொள்ளாக்காட்சியைக் காணலாம். பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வேலை செய்யவும் அனுப்பி வைக்க அவர்கள் இங்கே வெளிநாட்டுக் கலாச்சாரப்படி உடை உடுத்தி வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் குளிரான க்ளைமேட்டுக்காகக் குடிக்கிறார்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகக் காசு கொடுக்கிறார்கள். எங்கே என்றா கேட்கிறீர்கள். அமெரிக்காவில்தான். ரோலண்ட் ஃப்ரேயர் ஜூனியர் என்ற பொருளாதார நிபுணர்தான் இந்த வித்யாசமான கல்விப் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை ”ஏ” என்றும் கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்களை “பி ”என்றும் இருபிரிவாகப் பிரித்து  சுமாராகப் படிக்கும் மாணவர்கள் நன்கு படித்தால் ஊக்கத்தொகை வழங்கிப் பார்த்தார்கள். ஆனால் ரிசல்ட் என்ன வென்றால் ஆரம்பத்தில் சூப்பராகப் படித்த அந்தப் பிள்ளைகள் நாளடைவில் பழையபடிதான் படித்தார்கள்.

இதிலிருந்து காசு கொடுத்துக்  கல்வியை வாங்க முடியாது என்று தெரிகிறது.இயல்பாகப் படிப்பின் மீது தானாக ஆர்வம் வந்தால் ஒழியப் படிக்க வைக்க முடியாது என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி, செயல்முறைக் கற்றல் கல்வி என்று முயன்று பார்க்கிறோம். இது நன்கு பரவலாக செயல்பட்டாலே போதும். அனைவர்க்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும். அதே சமயம் ஒரே மாதிரியான கல்வித் தரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வியாழன், 13 மார்ச், 2014

தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-


தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-
*******************************************
கமலஹாசன் குமுதத்தில் எண்பத்தைந்தில் ”அவரோகணம்” என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதன் கதாபாத்திரம் தன்னைப் போலவே ஆரோகணம் அவரோகணம் செய்யக்கூடியதாக தன்னைப் போன்ற ஒரு ஆணை நேசிப்பதான கதை. வேட்டையாடு விளையாடுவில் அப்படிப்பட்ட இருவர் வில்லன் காரெக்டர்களாக இருக்க உன் காதலி என்று அமுதனிடம் இன்னொரு ஆணைப் பற்றிக் கூறி அடிப்பார்.

அதன் பின் ஸ்டெல்லா புரூஸ் கதை ஒன்று வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவன் பற்றியது. அதில் அவன் ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஆசையில் ஓடிப்போவதாக வரும். ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு அவன் ஓடிப் போவதும் உறவினர்கள் தேடியலைந்து கூட்டி வருவதுமாக இருக்கும் அக்கதையில் முடிவில் அவன் தன் தாத்தா கேட்டுக் கொண்டதற்காக ஓடிப் போய்விடுவான். அவன் தாத்தாவுக்கும் வேறொரு ஆணுக்குமான உறவை அவன் கண்ணுற்று விடுவதால் இம்முறை அவனது தாத்தாவே அவனுக்குப் பணம் தந்து போகச் சொல்லி இருப்பார்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


ஒன்றரை வயதுப் பெண் குழந்தையில் இருந்து கற்பழிக்கப்படும் துர்ப்பாக்கியத்தில் உள்ளது பெண்ணினம்.  என்ன கொடுமை இது. இவ்வாறு செய்பவர்கள் ( மிக சொற்ப கேஸ்களைத் தவிர ) வேறு அந்நியர்கள் அல்ல. அந்தக் குழந்தைக்குப் பலமுறை பரிச்சயமானவர்களே. 

திங்கள், 16 டிசம்பர், 2013

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

திருப்பூரில் 20 வருடங்களாகக் கல்விச்சேவையில் ஈடுபட்டிருக்கும் ார்க் கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் துவக்கி வைக்க அக்கல்லூரியின் முதல்வரும் முகநூல் நண்பருமான திருமாறன் ஜெயராமன் அழைத்திருந்தார்.

அரசாங்கத்திலேயே இன்னும் 33 % இடங்களை நாம் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் பார்க் கல்லூரியில் சரிபாதியாக அங்கம் வகிப்பது அதை நிறுவிய ரவி அவர்களின் மனைவியும் மகளும். PARK  கல்லூரி  PREMA , ANUSHA, RAVI, KARTHIK, ஆகியோரின் பெயரில் முதல் எழுத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலும் மனைவி மகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பார்க் கல்லூரிகளுடனான தொடர்பு எனக்கு 8 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. என் மகன் அங்கே பொறியியல் படித்தார். மேலும் அதன் தாளாளர் அனுஷா என் முகநூல் தோழி . அந்தக் கல்லூரிகளின் ஹாஸ்பிட்டாலிட்டி குறிப்பிடத்தக்கது.  

திங்கள், 28 அக்டோபர், 2013

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

டிஸ்கவரி சானலின் ட்ராவல் அண்ட் லிவிங் சேனலில் நான் முன்பு இவரின் சமையல் நிகழ்ச்சியைத் தவறவிட்டதேயில்லை.. “நைஜெல்லாஸ் ஃபீஸ்ட். “ மிக அழகாக சமைத்து மிக அழகாக டிஸ்ப்ளே செய்வார். போற போக்கில் சமைப்பது போல் இருக்கும். முட்டையை உடைப்பதானாலும் சரி, பச்சை எலுமிச்சங்காயின் தோலைத் துருவி சமையலில் சேர்த்து ரொம்ப ஃப்ளேவரா இருக்கு என்று சொல்லும்போதும் சரி,  சாக்லேட் ஃபட்ஜை செய்து சுவைத்து மயங்குவதிலும் சரி, இமைக்காமல் அவர் செய்வதையே பார்த்து அவர் சமையலிலும் அழகிலும் பேச்சிலும் அசந்திருக்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...