******************************************
ஆத்மலயம்..தன்னைத்தானே லயத்தோடு, சுருதியோடு ஒப்புரவாய் ஒழுக்கத்தின்பால் ஒழுகுதலே ஆத்மலயம் சித்திக்கும் கருவி. ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பால் களங்கம் ஏற்படுவதில்லை. உடல்தானே கருவியாகி நன்மைதீமை எல்லாம் அனுபவிக்கிறது.. அது மேற்கொண்ட கர்மவினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து எல்லாம் அனுபவித்துக் கடந்து துறந்து ஆன்மவலு பெற்றுப் பரம்பொருளை அடைகிறது.