எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

கதவு :-



கதவு :-

கதவில் கைப்பிடிகள்
திறப்பதற்கும்
மூடுவதற்குமாய். ( மனசு )

சராசரி.



29. 8. 86.

முட்டைச் சவத்துக்குள்
கிளைக்கும்
ரோஜாக்கள்.

சூரிய இரை.



7.5.86.

32. *சில பறவைகள்
சிறகை இழந்தபின்னும்
பறந்துகொண்டிருக்கும் பிரம்மையில்

வண்டி மாடு



7.5.86.

33. *வண்டிக்காரனை
ஏய்க்கும் மாடு.

சாணக்கியர்கள்.



7.5.86.

29. *நான்
கண்டனக்காரர்களை
இழந்துவிட்டேனே.

சீசாக்கள்..

முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது மழை .
பாதி நிறைந்த சீசாக்கள்
அங்கங்கே கிடக்கின்றன.
உருளும் அவற்றின் இதழ்களை
கலங்கலாகச் சுவைத்து 
அலமலங்கக் கிடத்தி இருக்கிறது வெள்ளம்.

கோபுரத்துப் பொம்மைகள்.



கொஞ்சம் நிலவும்
கொஞ்சம் நெருப்பும் உண்டு
காற்றும் மழையும் புணர
உச்சாணிக்கில் கொம்பில் வாசம்.

ஒரு கணவனின் கேள்விகள்:-



ஒரு கணவனின் கேள்விகள்:-

படுக்கைகள் சுருண்டிருக்கும்
வாளிகள் காய்ந்திருக்க
எலியை சாக்கடை குதறவிட்டு
எங்கே காணாமல் போனாய் நீ ?

புதன், 30 டிசம்பர், 2015

நம்பிக்கை



நம்பிக்கை

1.பறந்தன
வண்ணத்துப் பூச்சிகள்
நிறங்கள் தேயும்வரை.

உரம்.



12.3.86.

உரம்.

குளத்தின் நடுவே
துயின்று கிடக்கும்
தாமரையும் அல்லியும்

மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

இணைப்பு குட்டி புக்கில்

செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ்

நன்றி மங்கையர் மலர்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



செவ்வாய், 29 டிசம்பர், 2015

கால வேதாளம்.



7.5.86.

28. *காற்றைக் கீறும்
குருவியின் கீச்சலாய்
காலத்தைக் கீறும்
கடிகாரச் சத்தம்.

அனுபவம்.



12.3.86.

அனுபவம்.

இரயில் வரும்
இரயில் வரும்
பயணிகளைச் சந்திக்கலாம்.
என்னிடம் இருக்கும்
ஞானம் விற்று
கூட்டியோ குறைத்தோ
ஞானம் வாங்கலாம்

திங்கள், 28 டிசம்பர், 2015

அவளுக்கான..

ஒரு கடல்
ஒரு இரவு
ஒரு விளக்கு
ஒரு தென்றல்
வரைகிறது
அம்முகத்தை
அதன் வடிவை
அந்தக் கூந்தல் அலைவை.

உருவாக்குபவற்றுள்
நீராய்ப்
பொருந்திக் கொள்கிறாளவள்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

இதமாய் நீந்தவா !



ப்ரியச் சரிவுகளுக்குள்
இதமாய்க் கால்புதைத்து
மெல்ல நடக்கலாம்
வா..!
ஸ்நேகமலை மீது
நிலா இதழ்களுக்குள்
அன்புக் குளிருக்குள்
கைகோர்த்து ஓடலாம்
வா..!

வியாழன், 24 டிசம்பர், 2015

ஆடுகளம். :- முன்னணியில் இருக்கும் பெண் கிரிக்கெட்டர் எம் டி திருஷ்காமினி.



ஆடுகளம். :-

முன்னணியில் இருக்கும் பெண் கிரிக்கெட்டர் எம் டி திருஷ்காமினி. 


ஆண்களுக்கு இணையாக விளையாடினாலும் இன்னும் இந்தியாவில் சிறப்பாக ஊக்குவிக்கப்படவேண்டிய ஆட்டம் என்றால் அது பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள்தான். ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் போன நூற்றாண்டுகளில் கோலோச்சி வந்த கிரிக்கெட் சில தசமங்களாக பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 



செவ்வாய், 22 டிசம்பர், 2015

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.

கூவமே சுத்தமாயிடுச்சு. ஆனா சென்னைதான் குப்பையாயிடுச்சு அந்த அளவு கூவமும் சென்னையும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்து விட்டது. இந்தத் திங்களன்று பெய்த மழையில் சென்னை ஒரு திகிலூட்டும் வெனிஸ் நகரமாகிவிட்டது. கல் எது மண் எது ரோடு எது சாக்கடைக் குழி எது எனத் தெரியாமல் மாட்டி வேலைக்குச் சென்ற கணவனோ பிள்ளைகளோ வீடு மீள்வதற்குள் ஒவ்வொரு  மனைவிக்கும் தாய்க்கும் தகப்பனுக்கும் ஏற்பட்ட துயரம் சொல்லில் சொல்லி  மாளாது. அன்றிரவு சிலர் இரவு இரண்டு மணிக்குத்தான் வீடு போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.


பேருந்துகளிலும் மகிழுந்துகளிலும் மாட்டிக் கொண்டவர்கள் பாடு தனி என்றால் நடைபாதை குடியிருப்புவாசிகள் எங்கே ஜீவித்திருக்கக் கூடும். வெள்ள நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஒரு பக்கம் கூக்குரல் இருக்க வெள்ளம் வந்த அன்று வீட்டை அடையமுடியாமல் பசியும் தாகமுமாய் இயற்கை உபாதைகளையும் பொறுத்துகொண்டு தவித்த நகரவாசிகளை என்ன சொல்வது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றா. வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கொண்டுவரும் புயலும் மழையும் நகர்ப்புற வாசிகளுக்கு கூரையின் உச்சியில் வாழ்வு கொடுக்கும், கிராமங்களில் கூரையைப் பிய்த்துக் கொண்டும் வாழ்வு கெடுக்கும். 

வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீருடன் அகதிகளைப் போல மூட்டை முடிச்சுகளுடன் இந்தத் திங்கட் கிழமையும் வாழ நேர்ந்த கொடுமையை சென்னைவாசிகளே பெருமளவும் அறிவர். உள்ளே கழிவு நீரும் பூச்சிகளும் பூரான்களும் சாக்கடையும் மிதக்க இரவு முழுக்க மின்சாரமுமில்லாமல் தூக்கமாவது ஒண்ணாவது. வாழ்தல் கொடுமை என உணரவைத்த இரவு இந்த டிசம்பர் ஒன்றாகத்தான் இருக்கும். மழைக்கு யாகம் செய்தது போக மழை வேண்டாம் என்று அனைவரும் ப்ரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.


திங்கள், 21 டிசம்பர், 2015

ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

 581.தானாடாவிட்டாலும் தசையாடுகிறது., நட்புலகத்திலும்.

582.என்னோடு இருப்பவர்கள் என்னானார்களோ தெரில. நான் மட்டும் சேஃபா இருக்கிறேன்னு முகநூலில் குறிப்பது அபத்தமானதுன்னு ஸ்டேடஸ் போட்டிருந்தார் ஒரு நண்பர்.

///உங்களைத் தேடும் மற்றவர்களுக்காகத்தான். நிம்மதியின்மை சூழ இருப்பவர்கள் தன்னோடு தொடர்புடையவற்றைத்தானே தேடுவார்கள் ஒரு பற்றுக் கோடாக அப்பாடா நிம்மதி என்று. தனக்குத் தெரியாதவர்களும் நலமுடன் இருக்கவேண்டும் என்பது பிரபஞ்சக் காதல். அது சித்தித்தாலும் முதல் தேடல் தன்வீடு தன் மக்கள் தன் மனைவி தன் “நட்பு” இதுதானே.///

583.கதறிக் கதறிக் கொட்டுன மழைக்கு வணக்கம்
பதறிப் பதறிக் கேட்ட மார்க்குத் தம்பிக்கு வணக்கம்
சிதறிச் சிதறிக் கிடந்த சென்னையச் சேர்த்த வெள்ளத்துக்கு வணக்கம்
கதறாமப் பதறாமச் சிதறாம ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுக்கும் வணக்கம்.

#நெம்பப்_பிடிச்சவங்கள்ளாம்கூடப்_பிடிக்காமப்_போயிடும்போல
_ஆக்கின_இயற்கைக்கும்_வணக்கம்.

584.அழகில் அன்பிருக்கலாம். ஆனால் அன்பில் அழகு பொங்கி வழிகிறது.


585. சென்னை கடலூர் மக்காஸ் நலமா..

586. பெய்த பெருமழையில் எழுதிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பதிவர்களையும் காணோம் . ஹ்ம்ம்

587. எழுத்தில் ஒருவிதமாகவும் பேச்சில் ஒருவிதமாகவும் நிஜத்தில் ஒரு விதமாகவும் வெளிப்படுகிறோம். நாம்  முப்பரிமாண வடிவங்கள் என்பது உண்மைதான். ! :)

#3D.

வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

541. வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.


துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும். 


ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.


மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


542. At Jaslok hospital --Mumbai..-- left knee contusion.. enjoying the pain

543. தங்க நிற வெளிச்சம்
தூவுகிறது சாலை.
சிவப்பில் நிறுத்தப்பட்ட
வாகனம் காத்திருக்கிறது
பச்சையின் ஆமோதிப்புக்காய்.
சீறலாய்ப் பச்சை உமிழ்ந்து
நேர்க்கோடாய்க் காட்டுகிறது
பயணத்தின் பாதையை.
திசை தெரிந்தும்
விசை மீறிப்பறக்கிறது
கைமீறிப்போன வண்டி.
பக்கத்து வண்டிகளைப்
பக்கத்துணையெனக்
கற்பிதம்கொண்டு
ஒளியின் வழிகாட்டலில்
கட கடப்புடன்
ஒவ்வொரு மஞ்சள் வெளியிலும்
காத்திருந்து பெருமூச்சுடன்
அடைகிறது தனக்கான இடத்தை.


544. Thenammai Lakshmanan
Lives in Chennai
1,913 followers|13,368,861 views
-- G+ la varra intha views unmaithana.. ?

அஹா இப்போ

நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.

521. ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பஞ்சு பயிரிடப்பட்ட நிலங்களைக் கடந்தோம். மோசமான குடிசையாகக் கூட இல்லை அவர்களின் வீடுகள். எங்கே வசிக்கிறார்கள்.. ஹ்ம்ம்ம்
முன்பு கும்பகோணத்தில் இருந்தபோது அங்கே டிசம்பரில் குறுவைப் பயிருக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.

மின்சாரமும் தண்ணீரும் வழங்கப்பட்டால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயி வாழ்க்கை செழிக்கும் என்று சொல்லி கார் ட்ரைவர் தெலுங்கில் & ஹிந்தியில் வருத்தப்பட்டார்.

இன்னும் இரு தினங்களில் இங்கே விவசாயிகள் தர்ணா செய்யப் போறாங்க. கிட்டத்தட்ட 3 மாதங்களில் 300 விவசாயிகள் தற்கொலை. தீபாவளி அன்னிக்கு 13 விவசாயிகள் தற்கொலை.. எங்கே போயிட்டு இருக்கோம் நாம்.

நதி நீரையும் மின்சாரம் வழங்குவதையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைக்கணும்.. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான மின் சலுகைகள் வழங்கவும் மற்ற சலுகைகள் வழங்கவும் உடனடியா முடிவு எடுக்கப் படணும்..இதைத்தான் கோரிக்கையா சொல்ல முடியுது.

522. நோக்கு வர்மம் பொல்லாதது...

அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.

481.யாருக்கு ஃபோன் செய்தாலும் போகலையே. சென்னை மக்களே நலமா இருக்கீங்களா.. ?

482. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாயே ஞானத்தங்கமே.. :))

483. எந்த ப்ரத்யேக இடமும் நமதில்லை..

484. ஆண் அரசாண்டால் எல்லாரும் பெரியவருக்குத்தெரியும் என சும்மா இருக்கிறார்கள். பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸி ஆகிவிடுகிறான்.. இது இந்தியக் குடும்ப மனோபாவம் . எல்லாவற்றையும் பெண் தன்னைக் கேட்டு செயல்படவேண்டும் என்பது..

485. அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை.. பிடித்தவர்கள் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை..

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

461 . திருமண நாளில் காலையில் பாடிய ஒரு ஒலி பெருக்கிப் பாடல்..பல வருடம் கழித்துக் கேட்கையிலும் ஜில்லென்று..:))
https://www.youtube.com/watch?v=tYzLPhMUTgE

462. LAWN MOVER MAN.. EVERYTIME ITS NICE TO WATCH BROSNAN'S SHINING EYES, GLASSES, HAIRSTYLE RATHER THAN HIS ACTING..:)))))

463. 1.Go to Google. 2. Type "Top 50 women on internet" 3. Click on the first link. 4. Look at seventh Rank. 5. Like before u die laughing !!

464. சில ஆன்மீகவாதிகளின் பதில்களைப் படித்தால் அகங்காரவாதிகள் போலத் தோன்றுகிறதே. !

465. Spraysssssssssssssssssssssss.....பூச்சிக்கு இல்ல.. ஹிஹி இதெல்லாம் போன 3 மாசம் வீட்டுல இருக்குற எல்லாரும்தான் உபயோகப்படுத்தினது.. :)) சும்மா அப்லோட் செய்தேன்..;)))))

466. மிக எளிமையானது என் உலகம். .. சில பாட்டுக்களோடு.. சந்தோஷமானதாய்.. வாழ்க பாடகர்கள்., பாடலாசிரியர்கள்., இசையமைப்பாளர்கள்., நடிகர்கள்., இயக்குனர்கள்.. விஷுவல் ட்ரீட்..:))

467. கமல்தான் நடிகர். கேபிதான் டைரக்டர்., ஜெயகாந்தன்., சுஜாதாதான் எழுத்தாளர்.. என சொல்லும் பெட்டர் ஹாஃபுக்கு என்ன பதில் சொல்லலாம்.. ப்ளீஸ் கொஞ்சம் சஜஷன் கொடுங்க மக்காஸ்

உனக்கென்ன.



அந்த நந்தவனங்கள்
யாருக்காகவோ
பூத்தூவினால்
நீயேன்
சுருள வேண்டும்.

சனி, 19 டிசம்பர், 2015

தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

501. சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்சலசித்தம்
நிஷ்சல சித்தே ஜீவன் முக்தி..!!!

502. படகுகளும் கார்களும் சரிந்து ஓடியது கண்கொண்டு பார்க்க முடியவில்லை.. மண் சரிவில் எத்தனை மனிதரோ ..:(((

503. It's dificult... To wait for someone..
It's dificult to forget someone...
But most dificult thing is to decide
Whether to wait Or to forget...
" lovely.. Good .. Morning...Chellvagalaaa.."
------thx Rajikkaaaaaaaaaaaaaaaa

504. ஆராய்ச்சி.. ஆராய்க..!!!

505. அணைப்பது போலே கரமிருக்கும்.. அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்.

506. LOOK WITHIN...

507. சமையலும் மையலும்
கலந்து தரும் தையலே..
நீ எங்கள் வாழ்வில்
நிறைவான புதையலே..
மன்னன் மனராணியே
மயக்கும் மது தேனீயே.
அன்னமிட்ட தங்ககைக்கு
அடுக்கட்டுமா வளையலே..

நம்முடனே.

அவை நம்முடனே மரிக்கட்டும்
மறுதலிக்கப்பட்ட பொழுதுகள்
அவமானங்கள் காயங்கள் 
சின்ன சின்னக் கீழிறக்கங்கள்.
பழகிக் கொள்வோம்.

நம்மைப் பற்றிய நம் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய பிறர் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய நாமும் பிறரும் அறியா பிம்பங்கள்
நம்மைப் பற்றிய உண்மைகள்
நம்மைப் பற்றிய உன்னதங்கள்
நம்மின் கடைப்பட்ட குணங்கள்
அவை நம்முடனே ரகசியமாக இருக்கட்டும்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஐயா.



7.3.86.

சிப்பியதுள்ளே
முத்தாய் என் எண்ணம்.
சிப்பியது திறக்கும்
எண்ணமுத்தின்
ப்ரவேசமாய்
இக்கவிதை.

ஐயா
ஒரு அற்புதமான தலைவராய்.

புதன், 16 டிசம்பர், 2015

ஸ்வயம்:- (சொல்வனத்தில்)



ஸ்வயம்:-

குளக்கரை
ஓ.
உன்னுள் ஏன்
இத்தனை மிதக்கும் குழப்பம்.
மேலோட்டத்தில்
அலைமோதும்
அழுக்குச் சில்லுகள்
எருமைகளின் கால்படாத
ஆழ்குளம்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கோணாய்கள்.

வலைப்பூக்கள்
முகநூல் காட்டில்
மலர்ந்து சிரிக்கின்றன.
சிலவற்றைப் பட்டாம்பூச்சிகளும்
சிலவற்றைத் தேன் சிட்டுகளும்
சிலவற்றை வண்டுகளும்
மாந்திக் களிக்கின்றன.
இன்னபிறவென நினைத்து
வாட்டி உண்கின்றன
வெள்ளாட்டு மாமிசமாய்
முயல்கண் கோர்த்த ஓரிரு கோணாய்களும்.


கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.

441. சிம் கார்டு சொல்லிக்கிட்டா என்ன செய்றது..? செல்லிலிருந்து கழட்டிட்டு திரும்பப் போட்டாலும் நோக்கியான்ன்னே நிக்குதே.. any idea plz makkalee.. என்னவோ எந்த நம்பரும் ஞாபக வேற இல்லை.:((

442. பழைய சினிமாக்களில் கச்சையைப் போல பயமுறுத்துகிறது இன்றைய இளைஞர்களின் கால்சராய்.. எப்போ ஃபேஷன் மாறுமோ..

443. PLZ RADIATE POSITIVE THINKING AND POSITIE ENERGY..WHILE CRITICIZING OTHERS DONT USE THE WORDS.. அவன், அவள், அது..GIVE RESPECT TO ELDERS.

444. SITTING ON THE PILLIAN OF YAMAHA SPACER IS LIKE SITTING IN KAROREPATHY STOOL..

445. பியர்ஸ் இருக்கு., பொண்ணுதான் இல்லை.. கன்னத்தோடு குட்டிக் கன்னமிழைச்சு சோப்புநுரை தேய்க்க...ஹ்ம்ம்ம்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அலைகளும் கடலும்..



அலைகளும் கடலும்
=================================

தோட்டத்தைச் சீர்படுத்தித் தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவள் கையில் புத்தகங்களை இறுக்கப்பிடித்து இடுப்பில் சாத்திக்கொண்டு நடந்து கொண்டு இருந்தாள்., மனதில் அவனைப் பற்றிய சிந்தனைகளுடன். 

அவன் யார்..? உங்களுக்குத் தெரிய வேண்டாம். ஏனெனில் அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் அவளுக்குப் பிடித்தமானவன்.

வித்யாசமாய் வலதுபக்கம் வகிடெடுத்துத் தலைவாரி பல்வரிசையை விளம்பரமாக்கிக் கொண்டிருப்பவன். புன்னகைத்தால் கண்ணும் கூடவே புன்னகைக்கும். வாய்விட்டுச் சிரித்தால் கண் சொருகிக் கொள்வது போல் மயங்கும். ஆர்வமுள்ளவன்.. துடிப்பானவன்.

“கடலின் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ வேறு தரையைத் தீண்டுமோ ..?” என்று கண்ணுள்ளும் மனசுள்ளும் காதுள்ளும் புதுந்து பாடிப் போனவன். பரவஸிக்க வைத்துக் கண்ணில் நீரைத் துளிர்க்க வைத்தவன்.

புதன், 9 டிசம்பர், 2015

மீன்கொத்தியின் மீள் உரு

பரந்து நெளிந்தோடும்
கண்ணாடி வளையல்களில்
தாழப்பறந்து மீன்கொத்தி
அபூர்வம் உய்யும்வேளை
சேணம் செக்கெதற்கு
மீன்கொத்திகள்
புரவிகளாகுங்கணம் சேணமும்
அசைபோடுங்கணம் செக்கும்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
சில
கொக்குகளாகவோ
வலசைப்பறவைகளாகவோ
கடக்குந்தொலைவுகள் விழுங்கி
மரிக்கவும் கூடும்.

தஞ் சாவூரிலிருந்து திருச்சிக்கு.


ஒரு ரயில் விபத்தைப் பார்ப்பது
துரதிர்ஷ்டவசமானது
தூரத்து ரயிலின் வேகமறியாமல்
மடுவில் கழுவச்சென்ற கால்கள்
தவ்வியோட விட்டுப் போன நொடி
உயிர் நடுக்க ஒரு கல்லுடையும் சத்தம்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

561. தேவதை தெய்வம்
முயல்குட்டி கோழிக்குஞ்சு
பூம்பாவை தேன்சோலையவள்


தேவன் சாமி
கந்தர்வன் காதலன்
அன்பன் கருணைக்காரனவன்



அவள்
யட்சிணியாகும்போது யட்சனாக
காளியாகும்போது கருப்பனாக,
பூதமாகும்போது பேய்பிசாசாக
வேட்டைக்காளியாகும்போது சுடலைமாடனாக
முருதாடியாகும்போது ராட்சசனாக
ரூபம் எடுக்கிறான் அவனும்.


ராட்சசம் ஆடிப் போரிட்டுமுடிந்து
சாந்தமாகும் இருவரிடத்தும்
அதே ராட்சச வேகத்தில்
தெய்வமும் புகுந்துகொள்கிறது .

562. ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா..
,
,
,
,எதுக்குன்னு புரியல எல்லாரும் இன்னிக்கு ஹிந்தி பத்தி பேசி இருக்காங்க.. நானும் ஹிந்தி பேசிட்டேன். 

563. எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு ரெண்டு பேரை வேற கோத்து விட்டுருக்கு எஃப் பி... யாருடாது பார்த்தேன். ஆடிக்கொருக்கா அமாசிக்கு ஒருக்கா லைக் போடுறவங்க. நாம கோக்காம அதுவே நமக்கு க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு கோக்க முடியுமா தெரில.

உதிரும் வசந்தம் :-



12. 3. 86.

வசந்தம் :-

சிலந்தி வலைகளைப் பின்னி
உணவை உறிஞ்சும்.

கட்டிடங்கள் அழகாய்
உயரமாய்
நெருப்புக் கொழுந்துகளுடன்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னையைக் காத்த சில அன்புக்கரங்களுக்கு வாழ்த்துகள்.

என் அன்புத் தோழி ராமச்சந்திரன் உஷா 

////நான்கு நாட்களாய் டீவி இல்லை, செல் பேசி பாட்டரியும் தீர்ந்துவிட்டது, இணைப்பும் இல்லை, லாண்ட் லைனும் அவுட். ஓரே நாள் வந்து மாத சம்பளம் வாங்கிப்போன வேலைக்காரம்மா மைதிலி சொன்ன விஷயங்களைக் கேட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் மனசு அடித்துக்கொண்டது.
நாங்கள் இருக்கும் பெருங்குடி பெரும்பால இடங்களில் பெரிய பிரச்சனையில்லை. ஆனால் பெருங்குடி ஸ்டேஷனை ஒட்டி இருக்கும் கல்லுக்குட்டை என்ற இடம் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிந்தது.
அப்பா அம்மாவுக்கு துணையாய் மகனை உட்கார வைத்துவிட்டு, நானும் என் மகளும் கிளம்பினோம்.

வாழ்க்கை:- 2



12. 3. 86.

வாழ்க்கை:-

விராட்டிகள் கொடுத்து
சாம்பல் வாங்கும் வியாபாரம்.

உப்பு நீருறுஞ்சி
இளநீர் கொடுக்கும் தென்னை.

சனி, 5 டிசம்பர், 2015

வியாழன், 3 டிசம்பர், 2015

கூடு

ஆரத் தழுவி
அநேக நாட்களிருக்கும்
தினம் நூறு முட்டையிட்ட கூடு
சிதிலமடைந்திருக்கிறது
சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன
முத்தப் பறவைகள்.
குஞ்சுகளின் கீச்சொலியும்
வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன

புதன், 2 டிசம்பர், 2015

போ நீ போ. போடீ போ.

போ நீ போ போ நீ போ

தண்ணியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் மழையே போ
திவலையாகத் தவிக்கின்றேன் அழ வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் மூழ்குகிறது அன்பே போ
நான் போகும் வழியெங்கும் தடைகள்தான் தூரம்  போ

இது வேண்டாம் அன்பே போ தனைத்தேடும் அன்பே போ.
உயிரோடு விளையாட ஆசாரம் செய்தாய் அன்பே போ

ஓ ஓ ஓ உன்னாலே உயிர் வாழ்ந்தேன் ஒரு காலம் நான் மழையே.
உயிர்ப் பிச்சை நீ போட்டால் உயிர் வாழ்வேன் மாமழையே

ஆச்சி வந்தாச்சுவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஆச்சி வந்தாச்சு என்றொரு நகரத்தார் இதழ் வெளிவருகிறது. அதில் என்னுடைய சிறுகதையும் என் அம்மாவின் கவிதை ஒன்றும் ( ஆயாவீட்டின் காயா நினைவுகள் ) வெளிவந்துள்ளது.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

தொட்டிப் ப்ரபஞ்சம்.

இருவருக்கே
இடநெருக்கடியான வீட்டில்
ஒரு மீன் தொட்டி வளர்த்தார்கள்
பலராய்ப் பல்கிப் பெருகினார்கள்.
வண்ணங்களை இறைத்து
அவர்கள் கோபத்தை உறிஞ்சின மீன்கள்
அதீதப் பராமரிப்பால்
அவை மூச்சுத் திணறிய காலங்களும் உண்டு.
இன்ன நேரம் என்றில்லாமல்
அவர்களுக்கு இதழ்குவித்து
முத்தங்களை வழங்கிச் செல்லும் அவை.

வைர நட்பு



நட்பு இழக்கப்பட்டது
வைரத்திலும் உறுதியான நட்பு.
விதைகள் அற்று
கன்றும் கொல்லப்பட்டுப் போனது.

நாவு மதில்கள்
வார்த்தை ஈட்டியெறிய
செத்துப் போனான்
சமாதானத் தூதுவன்

திங்கள், 30 நவம்பர், 2015

இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

421. அஹா எனக்கு இன்னிக்கு ஃபேஸ்புக் குட்மார்னிங் சொல்லிருக்கு.. மெய்யாலுமே.

////GOOD MORNING, THENAMMAI !
THANKS FOR BEING HERE - ENJOY FACEBOOK TODAY.////
உங்க யாருக்காவது வந்திருக்கா..?!!!!!!

422.கோவை இலக்கிய சந்திப்பில் அகிலா எனது நூலினைப் பற்றி மதிப்புரை செய்தபோதுதான் உனது பெயரைத் தெரிந்தேன். நீ இருக்கும்வரை உனக்கு ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தைத்தான் அளித்திருக்கிறேன் நண்பா.

இருப்பதும் இறப்பதும் மனிதர் இயல்பென்றாலும் கலம்பகம் போல் மரணத்தையும் அறமாகப் பாடிச் சென்றவன் நீ. நாணற்காடன் சரவணன் எழுதி போல் இன்று நீ நாளை நாங்கள் என்றாலும் பூர்த்தி செய்யாத உன்னிரு கவிதைகளைக் காணும் துணிவற்றிருக்கிறோம்.


பெயரெழுத்தில் பூக்களைத் தூவிச் சென்றவன் நீ ஒருவனாகத்தான் இருக்கமுடியும். என்ன சொல்லித் தேற்றுவது நீ விட்டுச் சென்ற மலர்க்கொடியை. ஹ்ம்ம். 


ஜான் சுந்தரின் வார்த்தைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 
/////வணக்கம்,
கவிஞர் ப.தியாகு அவர்களின் மனைவி திருமதி.மலர்க்கொடி அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை தியாகுவின் பெற்றோருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு பதிவிடுகிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ள வகையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். பெரிய மனதோடு நீங்கள் செய்யப் போகும் உதவிக்காக முன் கூட்டியே உங்கள் திசை நோக்கி கை கூப்புகிறேன். நன்றி!


NAME : MALARKODI
W/O THIYAGARAJ.P
A/C NO : 5480101001056
CANARA BANK- COIMBATORE KOVAIPUDUR BRANCH
IFSC CODE : CNRB0005480
MICR CODE :641015053
முகவரி:
11/20 பழனியப்ப நாயக்கர் தெரு
குளத்துப் பாளையம்
கோயம்புத்தூர்-641042 ///

423. வான்நிலா நிலா அல்ல.. பாடலின் கடைசி வரிகளில் சிவச்சந்திரன் பின்னோக்கிப் படிகளின் மேலே ஏறுவார்..

#பின்னோக்கிப் போதல் இனிமையானது. சமவயதுக்காரர்களுடன் இணைந்து கொள்ளுதலும்..

 424. ஒரு கப் காஃபி.. தெளிவை உண்டாக்குதோ இல்லையோ ஆசுவாசத்தை உண்டாக்குது.. HAVE A NICE DAY MAKKASS.

425. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம். இதெல்லாம் கூட தோத்துப் போயிடும்போல இருக்கு ஃபேஸ்புக் வைராக்கியத்துக்கு முன்னே. !

அரை நாள் கூட விட்டுட்டு இருக்க முடிலயே. அப்ப அப்ப லாகின்.. ஐ லவ் யூ ஃபேஸ்புக். :) :)

#திட்டணும்னா ரீஜண்டா திட்டுங்கப்பா.

இடமிருந்து வலம். ( நமது மண்வாசம் )

இடமிருந்து வலம் :-
*************************
பாப்பு கைப்பற்றினால்
க்ரையான்ஸால்
ரொப்பி வைப்பாள்.

அம்மா கைவசப்பட்டால்
கோழிக்கால் கீறலாய்ப்
பென்சிலால் குறிப்பார்.

சித்தப்பாவுக்குக் கிடைத்தால்
கிராப்பு வைத்த எழுத்துக்களால்
பூர்த்தி செய்யும்.


செவ்வாய், 24 நவம்பர், 2015

நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.

401.நாம எழுதின கதையைப் படிச்சிட்டு விளக்கம் கேக்குறவங்கள எல்லாம் என்ன செய்யலாம்.

‪#‎கோனார்_நோட்ஸ்_காலத்தவர்கள்‬.

402.ப்லாக் ஒரு காலத்துல ப்ளேபால் க்ரவுண்ட் மாதிரி இருந்துருக்கு.
ஒரே நேரத்துல ஆடுறவங்களையும் பார்க்குறவங்களையும் ரத்தக் கொதிப்பேத்துறமாதிரி.

‪#‎ப்ரபலமானவர்களின்_பழைய_போஸ்ட்ஸ்_அட்ராசிட்டீஸ்‬.

403. கள்ளப் புன்னகைன்னு ஒருத்தரைச் சொல்லும்போதே சொல்றவங்களுக்கு அவர் மேல ஒரு கள்ள ரசிகத்தனமும் கள்ள அபிமானமும் இருக்கது தெரியுது.

404. அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு

வியாழன், 19 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி  போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.

210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் )  - என்றாலும் 211. முருகனுக்காக  கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.

ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!

இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம்.  அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.

புதன், 18 நவம்பர், 2015

எருக்கஞ்செடியும் வெற்றிலைக்கொடியும்.

381. கற்பக விநாயகர் நகர். இது ஒரு ஏரியா பேர். அங்கே இருக்க வீடுகள்ல எல்லா இடத்திலும் கற்பக விநாயகர். வாசல்ல, கேட்ல, நிலையில ஏன் க்ரில்லுல கூட..  :) 
 
கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்.


382. கவர்ன்மெண்டை எதிர்பார்க்காம சொந்த செலவுல கான்க்ரீட் ரோடு போட்டுருக்காங்க.

டேமேஜே ஆகாது.. இத வசதி இருக்க எல்லாரும் ஃபாலோ பண்ணலாம். பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்காம.. :)
 
‪#‎முட்டுசந்து_சொகுசு_குடியிருப்புவாசிகள்‬


383.ஏதோ லாரி புகுந்து போற மாதிரி ஒரு சத்தம்..

பதறி ஓரங்கட்டினா..

சுவேகா சாம்ராட்டுனு ஒரு வண்டிதான் போச்சு பக்கத்துல.:)

இதுக்கெல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா என்ன..


384. பால்கனிங்கிறத நம்ம மக்கள் பழைய சாமான் போடுற இடம்னு வைச்சிருக்காங்க. அதுவும் வீட்டோட அங்கம் இல்லையா.

அழகான ஃப்ளாட்டுகளோட எண்ட்ரன்ஸ்ல இருக்க எல்லா முதல் வீட்டு பால்கனியும் கழிவை குப்பையை அடைச்சுவச்சு இருக்கு . திருஷ்டி பரிகாரமே தேவையில்லை. .


385. வெள்ளைக் கார்டு வைச்சிருக்கவங்களுக்கு ஏன் 5 கிலோ ஜீனி.

#சுகர்_அதிகமாகட்டும்னா :P


386 சட் சட்னு எதுக்கெடுத்தாலும் கோப வயப்படுறவங்க காதல் வயப்படுறவங்களுக்கு கவிதை எழுதுறது தீ மாதிரி.. பொறி பறக்கும்.

திங்கள், 16 நவம்பர், 2015

வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயத்துக்காகவும்.



5..3. 2004.

*ஒப்பனைகள் ததும்பும் முகம்
பொய்யும் புனைசுருட்டும்
கள்ளத்தனமும் காமமும்
துகிலுரிகையில்
மருண்ட மானாய் மனசு.

*விநோதமான மனோபாவங்கள்
பூகம்பமாய் வெடிக்கையில்
சிதறிச் சரியும்
ஜீவிதமாய் மனசாட்சி.
Related Posts Plugin for WordPress, Blogger...