எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 டிசம்பர், 2018

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள். ஒரு அறிமுகம்.

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள் நோஷன் ப்ரஸ் மூலம் வெளியாகி உள்ளன. இவரது நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் நாவல் பற்றி நான் எழுதிய விமர்சனம் படித்திருக்கலாம். மிக அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்.


சனி, 29 டிசம்பர், 2018

டெஸர்ட் சஃபாரியில் பெல்லி டான்ஸ்.

டெஸர்ட் சஃபாரியில் பெல்லி டான்ஸ்






சாட்டர்டே போஸ்ட் :- விவிஎஸ் சார் கூறும் ஐந்தில் விளையாதது ஐம்பதில் ..?

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் மிக அருமையான தகவல் ஒன்றுடன் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் உங்களை சந்திக்கிறார்.

ஐந்தில் விளையாதது அம்பதில் ……… ? மனோஜ்குமார் தன் இரண்டு மகன்களோடு அன்று என் வங்கிக்கு வந்தார். மூத்தவன் எட்டாம் வகுப்பு. இளையவன் ஐந்தாம் கிளாஸ். ஆளுக்கொரு உண்டியலைக் கையில் ஏந்தி இருந்தார்கள். குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறப்பு முகாம் ஒன்றை எங்கள் வங்கி நடத்தியது. ஒரு வருடம் முன்பு. அப்போது கணக்கு தொடங்கிய ஒவ்வொருவருக்கும் ஒரு உண்டியல் கொடுத்தோம். தகரத்தினால் ஆனதுதான். அடிப்பக்கத்தில் சாவி போட்டுத் திறக்கும் வசதி கொண்டது. அதைத்தான் ஒரு குழந்தை ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டை இறுகப் பற்றியிருப்பது போல் கையில் வைத்திருந்தார்கள்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ரூஃபியின் ஆணை.

நம்மை விளித்துத் தோழி ஆணையிட்டால் அதை சிரமேற்கொண்டு முடிக்காவிட்டால் எப்படி. அதான் :)

Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.

1. தூக்குத் தூக்கி.

”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)

விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.

நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு

2.சபாபதி.

”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.

நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.

திங்கள், 24 டிசம்பர், 2018

செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.

2001. வசீகர மாயங்களோடு
அழகாய்த்தானிருக்கிறது
ஒளிந்தோடும் நதி.

2002. ஆடியில் நாம் ரசிக்கும் பிம்பங்கள் தன்னைத் தானே ரசித்துக் கொள்கின்றன 

2003. நம்ம நடிப்புக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுற எழுத்துக்கும் அர்த்தம் இருக்கான்னு இங்க நிறையப் பெண்கள் நினைக்கலாம். இன்று எனக்கு இருவர் அதன் தாக்கம் நிச்சயமாய் இருக்குன்னு மெய்ப்பிச்சு இருக்காங்க.காலையில் ராஜ்குமார் பார்த்திபன் கௌதமியின் நடிப்பைப் புகழ்ந்து அவர் நட்பைக் கோரியது. இப்போது சாய் இந்துவின் கவிதைகளால் கவரப்பட்டு சேலம் செந்தில் அவர் கவிதைகள் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் சொல்லித் தேடிட்டு இருக்காரு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

ஆமாம் சாய் இந்து டீ ஆக்டிவேட் பண்ணிருக்காங்களா.

#உலகம்_உங்களைத்_தேடுகிறது_தொடர்ந்து_செயல்படுங்கள்_பெண்மணிகளே.

2004. வீழ்ச்சிதான் பயணமென்றாலும்
தரையிறங்காமல் இருப்பதில்லை
பொங்கித் ததும்பும் அருவி.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன். தினமலர். சிறுவர்மலர் - 49.

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன்
ரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக என் எழுத்துக்கள் பற்றியும்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அழகப்பா பல்கலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகவும் அய்க்கண் ஐயா, பழனி இராகுலதாசன் ஐயா ஆகியோருடன் பங்கேற்றேன்.

20 ஆம் நூற்றாண்டு சிறுகதை புதின ஆசிரியர்களில் எம் ஏ சுசீலாம்மா.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்புதின சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுசீலாம்மா பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை தமிழ் உயராய்வு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை அம்மா எழுதி இருக்கிறார்கள். அக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.

புதன், 19 டிசம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.

1141. வேதபாடசாலை – ரிக் வேதம் பயிற்றுவிக்கும் பாடசாலை. பாடசாலை கட்டுவித்து அதில் கனபாடிகள் ஒருவர் வேதத்தை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பிப்பார். இதற்கு என இறையிலி நிலங்கள் மூதாதையரால் எழுதப்பட்டு அவற்றில் இருந்து கிடைக்கும் பயன்கள் ( நெல், தானியம் காய்கறி ) இந்தப் பாடசாலையில் பயில்வோருக்கு உணவாக வழங்கப்படும். பாடசாலை நிர்வாகச் செலவுக்கும் பயன்படும்.

1142. பசுமடம் – கோசாலை, தினப்படி பூஜைக்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பால் வழங்கும் பசுக்களைப் போஷித்துப் பராமரிக்கும் இடம். நகரத்தார் பரிபாலனம் செய்யும் ஒவ்வொரு கோவிலுக்கும் அநேகமாக பசுமடம் இருக்கும். இப்பசுமடத்தில் முதிர்ந்த மாடுகளையும் பராமரிப்பார்கள்.

1143. சம்போ (பூஜை) – காசியில் சிவனுக்கு செய்யப்படும் பூஜை சம்போ பூஜை.  காசி விஸ்வநாதர் கோயிலில் ஆறுகாலமும் நடக்கும் பூஜை நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து கூடைகூடையாய்ப் பூக்கள், அபிஷேகதிரவியங்கள் ஆகியன கொண்டு செல்லப்பட்டு நடத்தப்படும். சத்திரத்திலிருந்து ஆறு காலமும் மேள தாளத்துடன் தலைமேல் பித்தளைப் பூக்குடலைகளையும் அபிஷேகப் பொருட்களையும் சுமந்து பணியாளர்கள் முன்னே செல்ல அவர்களுடன் சத்திரத்தில் தங்கி இருக்கும் நகரத்தார் மக்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் தீபாராதனையையும் கருவறையின் படியில் அமர்ந்து தரிசிக்கலாம். இந்தப் பூஜை ஊர்வலத்த்தும் பூஜைக்கும் சம்போ பூஜை என்று பெயர்.  

1144. மகேஸ்வர பூஜை – சிவனுக்கு செய்யும் பூஜை. திருமண சமயங்களில் வேண்டிக்கொண்டவர்கள் இப்பூஜையைச் செய்வார்கள். ஏழு பானைகளில் பொங்கலிட்டுப் படைப்பார்கள். மிக விமரிசையான பூஜை இது.

1145. கார்த்திகை வேல் பூஜை:- கார்த்திகை மாதத்துக்காரர்கள் ( விரதமிருப்பவர்கள் ) கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரமும் முருகனின் தெண்டாயுதம் வேலுக்கு அபிஷேகம் செய்து மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து ஏழுவகைக்காய்கறிகளுடன் சர்க்கரைப் பொங்கல் அன்னம் படைத்து பூஜித்து ஊரோடு உணவிட்டு உண்பார்கள். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், அறுபடைக் கவசம், ஸ்கந்த குரு கவசம், காவடிப் பாடல்கள், வேல் மாறல், வேல் வகுப்பு,  பாமாலைப் பாடல்கள் படிப்பார்கள். இதற்கு கார்த்திகை வேல் பூஜை என்று பெயர்.

திங்கள், 17 டிசம்பர், 2018

தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை


தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.


ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வையாசி 19 – ஒரு பார்வை.


வையாசி 19 – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வெள்ளி, 14 டிசம்பர், 2018

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. தினமலர். சிறுவர்மலர் - 48.

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. :-

ரு விஷயத்தைத் தெரியும் என்றால் தெளிவுற உரைக்க வேண்டும். தெரியாது என்றால் உண்மையை ஒப்புக்கொண்டு அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு முனிவர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்போடு இருந்தார். அவரின் இறுமாப்பை ஒரு பெண் தகர்த்தாள். அந்தப் பெண் யார் அந்த முனிவர் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
வேதகாலத்திலேயே பெண்கள் கல்வி கற்றிருந்தார்கள். மைத்ரேயி, லோபமுத்ரா போல் கார்கி வாசக்னவி என்ற பெண் ரிஷியும் அவர்களில் முக்கியமானவர். இவர் சிறந்த பெண் துறவி. தத்துவ ஞானி, பிரம்மவதனி என்று அறியப்பட்டவர். ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் இவரது புகழ் பேசப்படுகிறது. 

இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
க்ஞவல்கியரும் சாமான்யப்பட்டவரில்லை. இவரது பெற்றோர் பிரம்மரதன் , சுனந்தா என்போர். இவரது மாமா வேதங்களில் சிறந்த வைசம்பாயனர் என்பார். யக்ஞவல்கியர் சூரியனிடமிருந்து யஜுர்வேதத்தைக் கற்று அதை உலகுக்கு அளித்தவர். இவரும் ஜனகரின் அவையில் இடம்பெற்றிருந்தார்.

புதன், 12 டிசம்பர், 2018

சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில்.

அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன். அதை சின்னவன் சவுண்ட் க்ளவுடில் போட்டு அனுப்பி உள்ளான்.



செவ்வாய், 11 டிசம்பர், 2018

வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.

1981. வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும் இன்றைய காலையை உயிர்ப்பித்தார்கள். ராய சொவின் பாரதி பரலியாருக்கு எழுதிய கடிதம் நூற்றாண்டுக்குப் பின்னும் ஒளிர்கிறது.

1982. சுயத்தை திருப்திபடுத்தவே எழுதுகிறோம். பசி தீர்வதாயில்லை.  ஆன்ம அமைதிக்குள் ஒடுங்கும் நேரம் சாத்யமாகலாம்.  அப்போதும் அது நீராயும் காற்றாயும் நிரம்பி இருக்கும்.

1983. Senthil ஒரே நாள்ல சாட்டர்டே போஸ்ட்/ஜாலிகார்னர் ஆல்பத்துல நூத்திப்பதினோரு போஸ்ட்லயும் லைக்ஸா. கிறுகிறுன்னு வருது. விறுவிறுன்னு எழுதி அனுப்பவும்

1984. கார்த்திக் உங்க ஃபோட்டோ போலவே வரையப்பட்ட கோலம்.

1985. ஹாஹா ட்ரெண்டிங்ல ஒரு சுவாரஸியமான விஷயம் . ( ஃபேமஸ் ) எழுத்தாளரால் ப்ளாக் செய்யப்பட்டோர் குழுன்னு ஒரு பேஜ் இருக்கு.
என்னவெல்லாம் ஆரம்பிக்கிறாங்க. . மிடில.

விளையாட்டு வினையான கதை . தினமலர் சிறுவர்மலர் - 47.


மந்தரையின் வடிவில் வந்த விதி :-
நாளை விடிந்தால் பட்டாபிஷேகம். இளவல் ராமன் முடி சூடப் போகிறான். ஆனால் அதற்குள் இதென்ன கோலம் ? அவனது பிரியத்துக்குரிய சிற்றன்னை கைகேயி அவனைக் காட்டுக்குப் போகச் சொல்கிறாளே. என்ன நிகழ்ந்தது. ராமன் செய்த குற்றம் என்ன என்று போய்ப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடெல்லாம் மாவிலைத் தோரணங்கள். மாக்கோலங்கள். விளக்கு அலங்காரங்கள். சாதாரண குடிமக்களின் இல்லமே ஜொலிக்கும்போது பட்டாபிஷேகம் நடக்கப்போகும் அரண்மனை ஜொலிக்காதா என்ன.. அதுவும் ஜாஜ்வல்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அகிலும் சாம்பிராணியும் தூபமும் வேறு மணமூட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த அரண்மனையில் கூனி ஒருத்தியின் இதயமும் கூனலாக இருண்ட எண்ணங்களோடு இருந்தது.

சனி, 8 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.



20 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6. 12.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அழைப்பு வந்தது.

பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள், பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்கள் ஆகியோரோடு வலைப்பதிவர் & எழுத்தாளரான என்னையும் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர் திருமதி செந்தமிழ்ப்பாவை அழைத்திருந்தார்கள்.



இந்தக் கருத்தரங்கம் லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

சாட்டர்டே போஸ்ட். ஜாயிண்ட் அக்கவுண்ட் வகைகள் பற்றி விவிஎஸ் சார்.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பதினைந்து நாட்களுக்கு முற்பட்ட சனிக்கிழமைப் பதிவிலும் இன்சூரன்ஸ் பற்றிச் சொல்லி இருந்தார். சண்டேன்னா ரெண்டுங்கிறாங்க பேப்பர்காரங்க. நம்ம ப்லாகில் சாட்டர்டேன்னா ரெண்டு. ஏனெனில் செந்திலிடம் ஒன்றும், விவி எஸ் சாரிடம் ஒன்றும் வாங்கிவிட்டேன்.

தொடர்ந்து விவிஎஸ் சார் அவர்கள் இன்சூரன்ஸ், முதலீடு, வங்கிப் பரிவர்த்தனைகள் பற்றி என் ப்லாகுக்கு விவரங்கள் தந்துதவுமாறு கேட்டிருக்கிறேன். அதனால் இன்று அவர் ஜாயிண்ட் அக்கவுண்டில் ஃபார்மர் பற்றிச் சொல்லியிருப்பதைப் பகிர்ந்திருக்கிறேன். எனவே போனஸா சார் கொடுக்கும் விவரங்களை அறிந்து மற்றவர்க்கும் அனுப்ப வேண்டுகிறேன்.


நீங்கள் ஒரு ஃபார்மர் ஆவது சேஃப் !
எனக்கு ஒரு மகன் மட்டுமே. மனைவி இறந்து விட்டாள். மகன் கொஞ்சம் செலவாளி. அவனை எப்படி நான் ஜாயிண்ட் அக்கவுண்டில் சேர்ப்பது ? பாதுகாப்பாக இருக்காதே ?

சாட்டர்டே ஜாலிகார்னர். செந்தில் நடேசனின் - வரிசை கொடுத்ததும் வங்கி அனுபவமும்.

ஏழெட்டு ஆண்டுகளாக முகநூலில் நண்பராயிருப்பவர் செந்தில் கே நடேசன். அவ்வப்போது குண்டச்சி தேவசேனாவுக்கு ( அனுஷ்கா) என்று குறிப்பிட்டுக் கவிதைகள் படைத்து சிரிக்க வைத்தவர். இதை காதலும் காதல் சார்ந்த இடமும் என்ற வலைப்பதிவில் பதிவேற்றி இருக்கிறார். !

இவரின் முகநூல் பக்கத்தில் நிறைய தன்னம்பிக்கை போஸ்டுகள் பார்த்திருக்கிறேன். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன் . அவர் எழுதியது உங்களுக்காக இங்கே.

சாட்டர்டேன்னா இரண்டு. ஏன் பத்ரிக்கை எல்லாம் சண்டேன்னா இரண்டு பதிவு போடுறத ஆதரிக்கிறீங்கள்ல. அதுனாலதான் இன்னிக்கு விவிஎஸ் சாரோட ஜாயிண்ட் அக்கவுண்ட் பதிவும், செந்திலோட இந்தப் பதிவும். போஸ்ட் மழையில் என்ஜாய் பண்ணுங்க. :)

///பெயர்:- செந்தில் கே நடேசன் தந்தை: நடேசன் தாய்: அலமேலு ஆச்சி ஊர் :- சிலம்பவேளாங்காடு - பட்டுக்கோட்டை தொழில்: விவசாயம் தற்போதைய வசிப்பிடம்: தோஹா - கத்தார் தற்போதைய வேலை:- கொள்முதல் அலுவலர் பொழுதுபோக்கு: வாசித்தல், யோசித்தல் மற்றும் எழுதுதல் அவ்ளோதான்/////

என்னதான் கன்டினியூ ரீடிங் வர அளவுக்கு பெரிசு பெரிசா எழுதி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணாலும்....சார்ட்டர்டே போஸ்ட் க்கு எழுதுங்கன்னு ஆச்சி சொன்னப்போ.... ​ ஒன்னுமே தோணல... சார்ட்டர்டே போஸ்ட்ல ஏற்கெனவே போட்ட போஸ்ட்களை எல்லாம் பார்த்தப்போ , அங்கே ஏற்கெனவே பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எழுத வச்சிருந்தாங்க ஆச்சி....

வியாழன், 6 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாழ்த்துரை.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்ப்பண்பாட்டு  மையத்தின் சார்பில் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்களின் பன்னாட்டுக் கருத்தரங்கம் ( 2018 ) நடைபெற்றது.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு  36 கவிஞர்களுள் ஒருவராகக் கவிதை சொல்லும் வாய்ப்புக் கிட்டியது.  அது மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. அங்கேயே மலாயிலும் வாசிக்கப்பட்டது.



இந்த வருடம் சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கும் அரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது.

புதன், 5 டிசம்பர், 2018

தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அம்மா - ஒரு பார்வை.





இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்


அழகப்பா பல்கலையில் எனது கவிதை சூலும் சூலமும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் எனது கவிதை ஒன்றும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. :)

சூலும் சூலமும் என்ற தலைப்பில் அன்னபட்சி கவிதைத் தொகுதியில் வெளியான அக்கவிதை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியின் முதலாமாண்டு முதல்பருவப் பாடத்திட்டத்தில் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் ( 2018 - 2019 )  இடம் பெற்றுள்ளது.

திங்கள், 3 டிசம்பர், 2018

சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 1 டிசம்பர், 2018

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள்.


தேசம் தேசமாகச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது ஒரு புரவி. அதை ஒருவரும் கட்டி வைக்க முயலவில்லை. ஆனால் இரட்டையராய்ப் பிறந்த சின்னஞ்சிறுவர்கள் அதைக் கட்டி வைத்துவிட்டார்கள். அயோத்தி மாநகரமே போருக்கு வந்தும் அதை மீட்க முடியவில்லை. கடைசியாக ராமன் வந்துதான் மீட்டார். அப்படிப்பட்ட வீரச் சிறுவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வால்மீகி முனிவரின் ஆசிரமம். காலைச் சந்தி. அங்கே முனிவர்கள் தினசரி பூஜை புனஸ்காரங்கள் செய்து வேதபாராயணம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வால்மீகி முனிவரின் அருகே இரட்டை நிலவு போல் காட்சி தரும் இரு சிறுவர்கள் அவருடைய பூஜைக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் லவன் மற்றும் குசன். சீதைக்கும் ராமருக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

இவர்கள் தாய் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபின் இவர்களைப் பெற்றாள். அதனால் அவர்களுக்கு ராமர் தம் தந்தை என்பது தெரியாது.
”சாமி ..ஒரு குதிரை சர்வ அலங்காரத்தோட நம்ம ஆசிரமம் பக்கமா வருது. அது யாரோடதுன்னு தெரியல “ என்று சொன்னார் ஒருவர்.
“அலங்காரத்தோட வருதுன்னா அது அஸ்வமேத யாகக் குதிரையா இருக்கலாம் “ என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
“அது ஏன் இங்கே வருது. அதப் போய் நாங்க பிடிச்சுக் கட்டி வைக்கிறோம். அனுமதி கொடுங்க” என்று கேட்டார்கள் சிறுவர்களான லவனும் குசனும்.

வியாழன், 29 நவம்பர், 2018

தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-


தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-

உலகம் புகழும் ( பார் அதி ) பாரதியை, பாரதத்தின் ‘பா’ ரதத்தை ஓட்டிச் சென்ற வழிகாட்டியை ( ‘பா’ ரதியை ) அவனின் தாசன் புகழ்கின்றான். தாசனுக்குள் இனிமைச் சரிவுகளாய்ப் புரண்ட தலைவனின் நினைவுகள் பிரவாகமாய் வருகின்றன.

அவன் தன் தலைவனைப்

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன் : அவன்
செந்தமிழ்த் தேனி : சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிக்குயில் : நாட்டினைப்
பகைக்கும் பகையைக் கவிழ்க்கும் பகைமுரசு :
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்கும் கற்பூரச் சொற்கோ “ எனப் புகழ்கின்றான்.

புதன், 28 நவம்பர், 2018

பத்மாவதி விவேகானந்தன் உரை :-


பத்மாவதி விவேகானந்தன் :-

கவிதைப் பட்டறையின் ( 2011 ) பத்மாவதி விவேகானந்தனின் பேச்சைக் குறிப்பெடுத்து இருந்தேன். அதைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பும் சரியாக இணைக்க வரவில்லை. வழக்கம்போல் புரிந்தவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். :) 

பெண்கள் எவ்வாறு கவிதை எழுதுகிறார்கள் ?.

கனிமொழி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, தமிழச்சி, அம்பை, உமா மகேஸ்வரி, ஈழத்து அவ்வை, பூமணி ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை.

பெண் மைய கவிதைகளை முறையாக எழுதியவர் கனிமொழி.

“ தாலியற்றவருக்கெல்லாம் இட்லிக்கடை வைப்பதுதானே தாசில்தார் உத்யோகம் “ என்று பிற்போக்கான வசனங்கள் நிறைந்திருந்தது ஒரு காலம்.

பெண் படைப்புகளில் முலைகள் என்ற குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பு விற்றுத் தீர்ந்தது.

ஔவையாரை – கிரேக்கக் கவிஞர் சாப்போவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.

விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.

1961. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா. தென்னை வாழை இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கலாம், எடுத்திருந்தா ஒரு பங்குப் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்பது தோப்பு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்குமா. விவசாயிகள் நிலை கவலைக்குரியது. இவை நிலைபெற மூன்று நான்கு ஆண்டுகள் ஆகலாமாம். அதுவரை எதைப் பற்றிக்கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மத்திய அரசும் மாநில அரசும் களப்பணியை முடுக்கிவிட்டு நிவாரணம் மேற்கொள்ளவேண்டும். தகுந்த உதவித் தொகையும் சில ஆண்டுகள் வழங்க வேண்டும்.

#எல்லா விவசாய கிராமங்களிலும் விவசாய கூட்டமைப்பு சபை வேண்டும். அது பயிர்பாதுகாப்பு, விதை நேர்த்தி, உரம், பூச்சிமருந்து விழிப்புணர்வு, நீர் உபயோகம், இன்சூரன்ஸ் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும் அரசே இவர்களின் நிலங்களின் அளவு பொறுத்தும் பயிரிடும் பயிர்கள்/செடிகள்/மரங்கள் பொறுத்தும் மிகக்குறைந்த அளவு இன்சூரன்ஸ் தொகை பிடித்து அதை அவர்கள் நஷ்டப்படும்போதும் ( MASSACRE ) இயற்கைப் பேரிடர் நேரும்போதும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். 

#இது எனது கோரிக்கை. 

1962. வண்ணமயமான மதியப்பொழுது
என்னை நிறைத்திருந்தது.
சூரியக் கலவையில்
இறகுகள் ஒளிர்ந்திருந்தன.
பூமியின் பசுங்குளிர்
நாசியெங்கும் நிறைய
பறக்கத்தொடங்கி இருந்தேன்.
தேன்நிறைந்த பூவில்
செம்மாந்து ஓய்வெடுத்தேன்.
திப்பியாய் ஒட்டிக்கொண்டன கால்கள்.
பறக்கத்துடிக்கும் மனதை
பசையாய்ப் பிடித்திருக்கின்றன இதழ்கள்.
சூரியன் கவிழும் நேரத்துக்காய்க்
காத்திருக்கிறேன்
குவியும் இதழ்களுக்குள்
உயிர் உணவாய்ச் சிறைப்பட

1963. உள்ளன்போடு பழகுபவர்களை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நம் உயிர்ப்பை நம்மைவிட நேசிப்பவர்கள், நம் இருப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களே. !

திங்கள், 26 நவம்பர், 2018

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.








மகன் போதித்த ஞானம்.தினமலர். சிறுவர்மலர் - 45.

மருதவாணன் கொடுத்த ஞானம்.


காவிரிப்பூம்பட்டிணத்தில் பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்பவர் தன் மனைவி ஞானகலையுடன் வசித்து வந்தார். திரை கடல் ஓடித் திரவியம் தேடிய வணிகக் குடும்பம். எனவே அவர்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்து இருந்தது. வீட்டின் வாயில் எல்லாம் வெள்ளிக் கதவுகள், வீட்டுக்குள்ளோ முழுவதும் ரத்தினக்கம்பளங்கள், பாத்திரங்கள் எல்லாம் தங்கம், வீட்டினுள் உள்ள செல்வச் செழிப்பில் பாலாறும் தேனாறும் ஓடியது. வைரமும் வைடூரியமும் இழைத்த நகைகளை அவர்களது ஒரே மகள் அணிந்திருப்பாள்.
இவ்வளவு இருந்தும் அவர்களுக்கு ஒரு ஆண்மகவு இல்லையே என்ற குறை இருந்தது. இறைவனை வேண்ட அந்தக் குறையும் போக்க திருவெண்காடன் என்றொரு மகன் தோன்றினார். அவருக்கும் அவரது சகோதரிக்கும் உரியபருவத்தில் திருமணம் நடைபெற்றது. திருவெண்காடரின் மனைவி பெயர் சிவகலை. திருவெண்காடருக்கும் பல்லாண்டுகளாக மக்கட் செல்வம் இல்லாதிருந்தது.
வீடு முழுக்கப் பொன்னும் வெள்ளியும் நவநிதியமும் குவிந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை ஆளப் பிள்ளையில்லை. தங்கத் தொட்டிலும், வெள்ளிப் பாலாடைச்சங்கும், நடைவண்டியும் ஆடுகுதிரையும் அந்த வீட்டுக்கு ஒரு பாலன் இன்றித் தவித்தன. திருவெண்காடரின் இல்லறம் நல்லறம்தான் ஆனால் பிள்ளைவரம் இல்லையே.

சனி, 24 நவம்பர், 2018

சாட்டர்டே போஸ்ட். திரு. வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன் கூறும் ஹ்யூமன் லைஃப் வால்யூ.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பன்முகத் திறமை கொண்டவர். இன்வெஸ்ட்மெண்ட்ஸ், இன்சூரன்ஸ், சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பணியைச் செய்து வருகிறார். அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

 காந்தி ஸ்டடி செண்டரில் நடந்த ஒரு புத்தக விமர்சனம் பற்றி  என் உறவினரும் புத்தகப் பிரியருமான சென்னை பங்குச்சந்தையின் இயக்குநர் திரு நாகப்பன் அழைப்பை குறுந்தகவலில் பகிர்ந்திருந்தார்கள்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் அதை ஆர்கனைஸ் செய்துவந்த குழுமத்தில் இடம்பெற்றிருந்த திரு ஸ்ரீனிவாசன் சாரைத் தொடர்பு கொண்டு சேவாலயா பற்றியும், இனி இது சேரி இல்லை என்ற நூல் பற்றியும் அறிந்து அவற்றை எழுதும் வாய்ப்புக் கிட்டியது.

வெள்ளி, 23 நவம்பர், 2018

வேற்றுப் பொருள் வைப்பணி :-


வேற்றுப் பொருள் வைப்பணி :-

அணிக்கு நூற்பா :-

”முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்கு
பின்னொரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருளே “

அணி விளக்கம் :- ஒரு சிறப்புப் பொருளை வலியுறுத்தற் பொருட்டு ஒரு பொதுப்பொருளை ( உலகறிந்த பொருளை ) அதனோடு தொடர உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

வியாழன், 22 நவம்பர், 2018

அகத்திணை மரபுகள் :-


அகத்திணை மரபுகள் :-

1.அகத்திணைப் பாடல்களில் ஒருவரின் பெயர் சுட்டப் பெற்றிருக்காது.

“சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் “ என்பது அகத்திணைப் பாடல்களுக்குள்ள சிறப்பு மரபாகும்.

2.இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் மட்டுமே வாழும் தலைவன் தலைவியருக்கு அன்றி அனைத்துக் காலகட்டத்துக்கும், அனைத்துத் தலைவன் தலைவியருக்கும் அன்பு கொண்டோர் அனைவருக்கும் பொதுவானதாகும்.

3.ஆண்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படுமே தவிர பெண்மக்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படமாட்டாது. பெண்கள் மடலேறுவது முறையன்று.

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-


20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் என்று கூறப் போந்தால் அதில் சிறப்பாகப் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாகக் கூறப் போந்தால் கண்ணதாசன் அவர்களையும் மு. மேத்தா அவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் முன்பு இலக்கணப்படி கவிதைகள் ( மரபுக்கவிதைகள் ) எழுதி விட்டுப் பின்பு புதுக்கவிதையை எழுதியவர்கள்.

கவிஞர் கண்ணதாசன் :- ( முன்னாள் அரசவைக் கவிஞர் )

1.விரக்தி :-

“போனால் போகட்டும் போடா :- இந்த
பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா “

புதன், 21 நவம்பர், 2018

கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.


கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.

தமிழ்நாடு இயல் இசைச் சங்கத்தின் கவிதைப் பட்டறையில் ஒருநாள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பேசப்பட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ( கிட்டத்தட்ட 2011 இருக்குமென நினைக்கிறேன். குறிப்புகளைப் பார்த்தால் நான்தான் எழுதி இருக்கிறேன். ஆனால் பிராமியா, தெலுங்கா, மலையாளமா, கன்னடமா தெரியவில்லை. சிறு குறிப்பெல்லாம் குட்டிக் குறிப்பாக இருக்கிறது. புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள். J

விக்கிரமாதித்தன் :- உரைநடையை மடக்கிய பாணி கவிதைகள் இப்போ அதிகம்.  

க நா சு, புதுமைப்பித்தன், குபரா, தேவதச்சன், சுகுமாரன், தேவதேவன் ஆகியோர் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.  உயிர்மை, உயிரெழுத்து, காலச்சுவடு ஆகியனவும்.

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.



ந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.

திங்கள், 19 நவம்பர், 2018

ஷெங்க் னுவும் ஷெங்க்னானும்.


ஷெங்க் னுவும் ஷெங்க்னானும். .


இருமணம் இணையும் திருமணங்களில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சீனாவும் எதிர்கொள்கிறது. சீனாவிலும் தாமதத் திருமணங்கள் நிகழ்கின்றன. ஷாங்காயிலும் பெய்ஜிங்கிலும் ஐந்து லட்சம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து ( விடப்பட்டு )  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு 20 வயதுக்கும் மேல் பலவருடங்கள் திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்களை ”ஷெங்க் னு”  என்று அழைக்கிறார்கள். சிறு கிராமங்களில் அதிகம் சம்பாத்தியம்/வருமானம் இல்லாமல்  அதன் காரணமாகத்  திருமணமாகாமல் தனித்து வாழும் ஆண்களை ”ஷெங்க்னான்” என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை ஆகிவருகிறது.

இந்த தாமதத் திருமணங்களுக்கான காரணங்கள் சீனாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஏன் உலக அளவிலும் ஒன்றுதான். சீனாவிலும் மணமகன்கள்  மணப்பெண்களை விட வயதில் சிறிதாவது மூத்தவர்களாக, நல்ல உயரம், நிறம், பர்சனாலிட்டியுடன் உயர் கல்வித்தகுதியும் , கைநிறைந்த சம்பாத்தியமும் இருப்பவராக இருத்தல் இன்றியமையாத விஷயமாகும்.    

காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.


1121. காத்தியலுக்கு வடிக்கிறது -  கார்த்திகை மாதம் சோமவாரங்களில் குன்றக்குடியில் பாட சாலையிலும், வீடுகளில் மற்றும் பூசை வீடுகளில் முருகனுக்காகக் கார்த்திகைப் பூசை செய்து சோறு வடித்து பள்ளயம் போட்டு ஊரோடு அன்னதானம் செய்வது.  

1122. எக்கிப்புடும் - கூட்டம் எக்கிப்புடும் என்று சொல்வார்கள். அதிகக் கூட்டமாக இருப்பது. நெருக்கடி மிகுந்த இடம். விசேஷம், திருவிழா போன்றவற்றில் ஆள் பேர் அதிகம் சேர்வது. 

1123. கெந்துனாப்புல - காலில், பாதத்தில், பாதத்தின் அடிப்புறம் அடிபட்டிருந்தால் அல்லது முள் போன்றவை குத்தி இருந்தால் கெந்துனாற்போல் நடப்பது. காலை சரியாக ஊன்றாமல் நடப்பது. உடற்குறைபாடு உடையவர்கள் நடந்து வருவது. 

1124. கோவில் நாடி - கோவிலை நோக்கி. சாமி கும்பிடச் செல்வதைக் குறிப்பது. 

1125. கருதலையோ - ( தம்மை ) நினைக்கவில்லையோ. எண்ணவில்லையோ, ஒரு விஷயத்தைப் பொருட்டாகக் கருதவில்லையோ என்ற பொருளில் வருவது. 

1126. வாஞ்சால - பாசம், பரிவு, அன்பு, வாஞ்சாலை, அதீத பாசம். உடல், மனம் சம்பந்தப்பட்ட உறவில் வரும் பாசம் , உறவினர் மேல் கொள்ளும் அன்பு. 

1127. தெகட்டுதல் - திகட்டிப் போதல். ஒரு விஷயம் அதீதமாகக் கொடுக்கப்பட்டால் ஏற்படும் உணர்வு. அதீதம். இனிப்பு திகட்டும். அதேபோல் இனிமையான விஷயங்களும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் திகட்டும்.  

சனி, 17 நவம்பர், 2018

சிந்தையைப் புதுப்பிக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.  பேச்சைப்போல எழுத்துக்களும்  கம்பீரமாய் இருப்பது சுசீலாம்மாவிடம் மட்டுமே.

மனச்சோர்வு அடையும் போதெல்லாம் இக்கடிதங்களைப் படித்துப் புத்துணர்வு கொள்வேன்.

பாடங்களில் அக்கறை கொள்ளச் சொல்லும் அன்பான அறிவுரை. அதற்கு உதாரணமாய் வனவாசம் கொள்வதை எடுத்தாண்டிருக்கும் அழகு. முத்திரையைப் பதிக்க வைக்கும் உத்வேகமான பேச்சு.

அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-


அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-

முன்னுரை :- அய்க்கண் சிறுகதைகள் அனைத்தும் சிறப்பானவை. அவர் தான் வாழ்ந்து வந்த செட்டிநாட்டின் மணம் பலவற்றில் கமழுகின்றது. இவர் கதைகள் இவர் ஊர்ப்பற்றை விளக்குகின்றன. இவருடைய கதாபாத்திரங்கள் இலச்சியங்களைக் கொண்டவர்களாகவே அமைவார்கள். சிறுகதையில் ஒரே வகை உணர்ச்சி, ஒரு பாத்திரத்தின் உணர்ச்சி மிகுத்துக் கூறப்படும். அந்த உணர்ச்சியைப் பெற வைக்க அவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக்க அழுத்தம் கொடுத்திருப்பார்.

இலட்சியவாத கதாநாயகர்கள், கதாநாயகிகள். :-

புதன், 14 நவம்பர், 2018

விஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.

1941. இங்கிட்டு எல்லோரும் நலம். அங்கிட்டு எல்லோரும் நலமா ;)

1942. அங்ஞாடே அங்ஞாடே என்ன அர்த்தம் . அங்க ஆடா. அங்கிட்டா .. அங்கிட்டு ஆடா ஹாஹா யார்பா எழுதினது இந்தப் பாட்டு.

1943. படிக்கும் ஒவ்வொரு நூலுக்கும் என்னை ஒப்புக் கொடுக்கிறேன். மிகச் சிறந்த தவமாய் அமைகிறது அது.

1944. 100 சிறந்த சிறுகதைகளில் நான் தேர்வு செய்த முதல் சிறப்பான கதை நீர்மை. திரு. நா. முத்துசாமி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. 😔

1945. முத்த விதைகள்

முத்த விதைகள் விழுந்தவுடனேயே
பூக்கத்தொடங்குகிறது
தேகம்.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா.
வந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்ணனும். அந்த குருகுலக் கல்வி முறையில் அரசனும் ஒண்ணுதான் ஆண்டியும் ஒண்ணுதான். அனைவரும் குருவின் கட்டளை ஏற்றி செயலாற்றி வரவேண்டும். அவர் அனைவருக்கும் சமமாகவே கற்பிப்பார். அனைவரையும் சமமாகவே நடத்துவார். அனைவருக்கும் சமமாகவே வேலைகள் கொடுப்பார்.
ருமுறை அவரது வயலில் மடையை அடைக்கும் பொறுப்பை கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் குரு. ஆனால் கிருஷ்ணருக்கோ உடல் நலமில்லாமல் இருந்தது. அவருக்குப் பதிலாக சுதாமா தான் அந்த வேலையை நிறைவேற்றுவதாகக் கூறிக் காலையில் சென்றார். மதியம் ஆயிற்று, மாலை ஆயிற்று, இரவும் ஆயிற்று. காற்றும் குளிரும் மழையும் சுற்றி அடிக்க சுதாமாவைக்காணவில்லை. மறுநாள் அதிகாலை கிருஷ்ணர் குருவிடம் இது விபரம் தெரிவித்து வயலில் சென்று பார்த்தால், வெள்ளமாய்ப் பொங்கி வரும் மடையை அடைக்க இயலாமல் அந்த மடை வரப்பில் தன் உடலை வைத்து அடைத்துப் படுத்துக் கிடந்தார் சுதாமா. மடையை அடைக்கா விட்டால் பயிர்கள் அழிந்து மூழ்கிவிடுமே.
இதைப்பார்த்ததும் கிருஷ்ணரின் கண்களில் நீர் துளிர் விட்டது. எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப்போனான்.

திங்கள், 5 நவம்பர், 2018

குணம் அழகு தரும். தினமலர். சிறுவர்மலர் - 42.


குணம் அழகு தரும்


மிக அழகாக இருக்கிறோம் என்ற கர்வத்தால் மற்றவரை மதியாமல் நடந்தாள் ஒரு பெண். அதனால் அந்த அழகி அரக்கியாக மாறும்படி சாபம் கிடைத்தது. அரக்கியாக இருந்தாலும் அறத்தைப் பின்பற்றி வாழ்ந்ததாலும் நல்குணத்தைப் பேணியதாலும் திரும்ப அவள் சாப விமோசனம் பெற்று அழகானாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை தீப்பற்றும்போது சுரங்க வழியாகத் தப்பிச் சென்றார்கள் அல்லவா பஞ்சபாண்டவர்கள் அவர்கள் கங்கையைக் கடந்து வந்து சேர்ந்த இடம் இடும்பவனம். அங்கே இடும்பன், இடும்பி என்ற அரக்கனும் அரக்கியும்  வசித்து வந்தார்கள். இருவரும் அண்ணன் தங்கை. அரக்கியாக இருந்தாலும் இடும்பி யாரையும் துன்புறுத்த மாட்டாள்.

ஆனால் அன்று காலை நேரம் வெகுகோபத்தோடு விழித்தான் இடும்பன். மனித நடமாட்டமும் வாசனையும் அடிக்கிறதே. “ அடி தங்காய். இடும்பி, பக்கத்தில் மனித வாசனை அடிக்கிறது. அது ஆபத்து. நம் இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். ஆகையால் அவர்களைக் கொன்று விட்டு வா “ என்று கூறித் திரும்பிப் படுத்தான்.

சனி, 3 நவம்பர், 2018

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கில் எங்கள் நூல்களுடன் தோழி நிம்மி சிவா :) 

நிம்மி சிவா & ராஜ் சிவா இருவருமே எழுத்தாளர்கள். இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். ஷார்ஜாவில் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு எனது நூலையும் தனது கைகளில் ஏந்தி சிறப்பிடம் அளித்திருக்கிறார் தோழி நிம்மி சிவா. பெருமை மிகு இத்தம்பதிகள் ஜெர்மனியில் இருந்து ஷார்ஜாவுக்கு வந்து புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது ஆச்சர்யமும் மகிழ்வும் அளித்தது. மிக்க மகிழ்ச்சியும் அன்பும் நிம்மி.

வெள்ளி, 2 நவம்பர், 2018

மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப் பொருத்தம் பாருங்க.


மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க.

”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இது. சினிமாவில் வர்ற மாதிரி வில்லன்கள் யாரும் வந்து அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. கரெக்டா தாலி கட்டும் சமயம் மணமேடையில் மணமகன் முன் சர்வாலங்கார பூஷிதையாக நின்றுகொண்டு இருந்த கல்யாணப் பெண்ணின் குரல்தான் அது.
அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர்கள். ”பையனைப் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி நிறுத்தி இருக்கலாமே. மணவறைக்கு வந்துட்டு இதென்ன அக்கிரமம் ?” என்று கொந்தளித்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்.  
அந்தப் பெண் மணமேடையை விட்டு இறங்கி வந்து “ எங்க அப்பா அம்மா கிட்ட இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்பதை சொல்லிட்டேன். ஆனால் அவங்க கட்டாயப்படுத்தியதால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே வந்து சொல்ல வேண்டியதாப் போச்சு “ என்றார்.
இரண்டு மாதங்களாக மணமகன் மணமகள் இருவருமே போனில் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். அப்போதும் ஒருவருக்கொருவர் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிக்கொள்ளவில்லையா என்று கேட்டால் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்கிறார் மணப்பெண்.

புதன், 31 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக் காட்டுதலும்.

1101.  அதமப்பொருத்தம் - ஜாதகம் பார்க்கும்போது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 3 பொருத்தங்களுக்கு மேல் இல்லாவிட்டால் அது அதமப் பொருத்தம். மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு வயசு அதிகமாய் இருந்தாலும் அது அதமப் பொருத்தம்.. ரஜ்ஜை தட்டினாலும், பெண் ராட்சச கணமாகவும் ஆண் தேவ அல்லது மனித கணமாக இருந்தாலும் அது அதமப் பொருத்தம். பெண்ணின் ராசி அல்லது நட்சத்திரத்திற்கும் பிறகு ஆணின் ராசி அல்லது நட்சத்திரம் வந்தாலும் அது அதமப் பொருத்தம். இப்படிச் செய்துவைக்கப்படும் மணங்கள் அதிக நாள் நீடிக்காது என்பது நம்பிக்கை.

1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை


ஓநாய் குலச்சின்னம்  - ஒரு பார்வை .



இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

திங்கள், 29 அக்டோபர், 2018

கூட்டாஞ்சோறு – அணிந்துரை.


கூட்டாஞ்சோறு – அணிந்துரை.

நிஜமான கூட்டாஞ்சோறு என்றால் இது தான். புதுக்கவிதைகள் மட்டுமல்ல. மரபுக்கவிதைகளும் வெண்பாக்களும் க்ளெரிஹ்யூக்களும் கூட கூட்டாஞ்சோற்றில் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை ஆக்கிரமிப்பு, விவசாயம், வான்பொய்த்தல், மழை, தரிசு, வெள்ளாமை, காதல், பாசம், காமம், உறவுகள், மூன்றாம் பாலினத்தவர், கிராமம் எனப் பல்வேறு பாடுபொருட்களுடன் துலங்குகின்றன கவிதைகள். அனைத்துக் கவிதைகளையும் பக்குவமாக ருசியான ஒரே கூட்டாஞ்சோறாக்கிய இம்மாபெரும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

கலக்கல் ட்ரீம்ஸின் வெளியீடான இதில் பதினாறு கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். தன சக்தி, சீதா, ஸ்வேதா, கார்த்திக் மணி, ராம் சங்கரி, காயத்ரி அருண்குமார், கிருபாஷினி, மதுவதனி, கரிக்கட்டி கவிராயர், ஸ்ரீபுஷ்பராஜ், தமிழ்த்தென்றல், சாயா சுந்தரம், அனுசரன், கடவுளின் ரசிகன், மதுரை சிக்கந்தர், வைகை ராஜீவ் ஆகியோர்.
Related Posts Plugin for WordPress, Blogger...