எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜூலை, 2010

அன்பின் மாலா...

அன்பின் மாலா..
அணையா விளக்கே..

செம்பருத்தியில் பூத்த சிகப்பழகி...
செம்மாதுளை பிளந்த சிரிப்பழகி...

மலைகளின் ராணியிடமிருந்து
விடைபெற்றுவந்த மகாராணி..

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஐந்தொகை - 3

*கர்ப்பக்கிரகத்துள்
பல்லியும் கரப்பானும்
உணவுப் போராட்டத்திலும்
உயிர்ப் போராட்டத்திலும்...

*யார் வரவுக்காக
இல்லாவிட்டாலும்
வாசலில் தினம் ஒரு கோலம்..

புதன், 21 ஜூலை, 2010

முகம்......

கார்பனும் ஹைட்ரஜனுமான மூலக்கூறின் கலவை தானே உனது முகமும் என்றது எனது அகந்தை... மென்மையாய் அழகாய்., ஓராயிரம் அல்ல லட்சம் கவிதைகள் எழுதலாம் என்றது மனம்..ஒரு ஒளியைச் சிந்தி ., பூவாய் விரிந்து., குழந்தையைப் போலானதாய்..

சாயங்கால மஞ்சள் கிரணமாக., காலை நேர இசைவகுப்பின் ஒலிக்குறிப்பாக.,இரவின் தண்ணென்ற பால் ஒளியாக ஒரு தீபத்தை ஏந்தி இருக்கிறது உன் முகம்.. சமயத்தில் கனிவாகவும்.. சமயத்தில் உக்கிரமாகவும்..

வெடித்துச் சிதறும் ஆவியைப் போல பீரிட்டு எழுகிறது எண்ணம் அவ்வப்போது..முழுதும் அடங்கும் வரை உஷ்ணமாய்.......டால்ஃபினின் அசைவைப் போலப் புரட்டிப் போடுகிறது ஞாபகங்கள்.. இரு கைகளாலும் ஏந்தி உச்சி முகர்ந்து அருகே காணும் ஆவல் அடித்துக் கொல்கிறது திடீர் மழைபோல்.. நினைக்கும் போதெல்லாம் பக்கம் சூழ்கிறது உனதான வாசனை..

திங்கள், 19 ஜூலை, 2010

கசியும் மின்சாரம்...

பஞ்சாமிர்தமும் தேனுமாய்
வழிகிறது உன் சிரிப்பு..
திகைத்து நிற்கும்
தெய்வச்சிலையாய் நான்..

பூக்களின் இதழ்கள் உண்டு..
இதழ்களில் பூக்கள்
விரியப் பார்த்தது உன்னிடம்தான்..

கன்னக் குழியின் கள்ளச் சிரிப்பு
கைப்பிடி பதித்த .,கற்கள் ஜொலிக்கும் .,
குறுவாளாய் மினுமினுக்க..

வெள்ளி, 16 ஜூலை, 2010

என் நன்றி அனைவருக்கும்.. வாழ்க வளமுடன்..! நலமுடன்..!!







என் வலைத்தளத்தில் வாழ்த்திய வானம் பாடி பாலா சார்.. வெற்றி., கதிர் அப்புறம் என் வலைத்தளத்திற்கு வந்து ஃபாலொயராகி., வாசித்து ஓட்டுக்கள் போட்டு என்னை ஊக்குவிக்கும் அனைத்து வலையுலக நட்புக்களுக்கும் ., தோழமைகளுக்கும் நன்றி..

வியாழன், 15 ஜூலை, 2010

எழுத்தாளர் என்றொரு இனம்..

சமூகத்தால் மட்டுமல்ல..
குடும்பத்தாலும் ஒதுக்கி
வைக்கப்படும் இனம்..

வாழ்க்கையை வாசிக்கத்
தெரிந்த அளவு பொருட்களை
நேசிக்கத் தெரியாமல்,

சுஜாதாவோ., தஸ்தாவ்யெஸ்கியோ.,
பேரும் புகழும் சேர்த்து
பணம் சேர்க்காமல்..

சேர்க்கத் தெரிந்தவன்
வியாபாரியாய்...
பட்டம் சூட்டி இறக்கப்பட்டு.,

திங்கள், 12 ஜூலை, 2010

செல்ல நாய்க்குட்டி ...

எஜமானனே..
என் கூடவே இரு..
உனக்காய் பந்து பொறுக்கி வருவேன்..
கால் கவ்வி இழுப்பேன் விளையாட..

உன் கையால் போடும் ரொட்டிக்காகவும்.,
இறைச்சிக்காகவும் பசியுடன்..

உன் உணர்வெல்லாம்..
உணர்கொம்பு இல்லாமலே
உணர்வேன்..கண்பார்த்தே..

சனி, 10 ஜூலை, 2010

கண்ணகியின் துயரம்

வணிகக் குலத்தில் பிறந்த
வனிதைகளை வடித்துப் போடவும்
வாகாய் அடிமைப்படுத்தவும் பழக்கி.,
வணிகம் பழக்காமல்..

வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்..
வாழ்வின் வண்ணம்
அறியக் கிடைக்காமல் செய்ய....

கணிகைக்குலத்து மகளிடம்
கூடையிலேற்றியும் கொண்டு
விடச்சொன்ன சமூகம்..

வியாழன், 8 ஜூலை, 2010

சாம்பல் நிற விளக்கு

உன்னிலும் என்னிலும்
உறைந்திருந்த சின்னக் குழந்தை
விழித்துக் கொண்டது..
என்னப்பா., என்னம்மாவென்றும்.,
என்னடா ., என்னடியென்றும்.,
இன்னும் போடா., போடியென்றும்..

மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
சிவப்பு வெளிச்சமிருக்..
சாம்பலென்றும்.,கறுப்பென்றும் கூட
வெளிச்சம் உண்டு..

புதன், 7 ஜூலை, 2010

உப்புறைந்திருக்கும் கடல்

உப்புரசிக் கிடக்கப் போகும்
மீன்கள் துள்ளலாய்..
பவளப்பாறை ., கடற்குதிரை
அயோடின் கரைசலில்..
மூச்சடங்கி முங்குளித்துப்
பழைய கப்பல் துண்டுகள்..
பாட்டன் பூட்டன் காலத்துக்
கிளியாஞ்சட்டிகள்..
யுகயுகமாய் விழுங்கிய
மக்கள் துகள்..
புகார் தனுஷ்கோடி
மிச்ச சொச்சம்..

திங்கள், 5 ஜூலை, 2010

டாக்டர் கல்லாறு சதீஷ்






தமிழன் என்று சொல்லடா., தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வார்த்தை நம் அன்பு நண்பர் கல்லாறு சதீஷுக்கு ரொம்பப் பொருந்தும்..

மொழிக்காக விழியிழந்தவர் தெரியும்... மொழிக்காக பதினெட்டு வயதில் முள்முடி சுமந்தவர் நம் சதீஷ்... அருள்ராசா நாகேஸ்வரன்.. என்ற சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழர்.. இவர் நம்மிடம் பேசப் பேச.. இ்னிமையும்.. நல்லெண்ணங்களும் பொங்குவது இயல்பு.. நேர்மறை எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்..

வியாழன், 1 ஜூலை, 2010

ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் சஷிகா., வாணி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன் மற்றும் நான்..

ஹலோ மக்காஸ்.. அதுக்குள்ள அடுத்த மாத லேடீஸ் ஸ்பெஷல் வந்துருச்சு.. நாளும் கிழமையும் பறக்குது மக்காஸ்.. என்னோட நெட் போதை கவிதை வந்து இருக்கு..

இந்த மாதம் நம்ம சஷிகாவோட ஓட்ஸ் கலாகண்ட்டும்., கறிவேப்பிலை சாதமும்., பார்லி பெசரட்டும் சுவைத்துப் பாருங்கப்பா...

வயசாயிருச்சு கை வலி., கண்ணு வலின்னு சொல்றவங்க இணையத்தில் கதை சொல்லும் இனிய பாட்டியைப் படிச்சுப் பாருங்க .... அவங்க பேர் ருக்மணி சேஷசாயி.. மிக இனிமையானவங்க.. என்றும் இளமையானவங்க .. வயசு ஒண்ணும் அதிகமில்லை மக்காஸ் .. 80 ஆகுது.. மனசுக்கு வயசில்லைதானே.. அப்போ சாதனைக்கு.... எல்லையில்லை ..!!!
Related Posts Plugin for WordPress, Blogger...