எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மகப்பேறு நிலையங்களா, மரணக் கிடங்குகளா..

நாலு நாளா டிவியை பார்க்க முடியல, ரேடியோ கேக்க முடியல, பேப்பர் படிக்க முடியல. முகநூலுக்கு சென்றாலும் இதே டிபேட்தான். என்னுடைய தோழி கவிதா சொர்ணவல்லி 106.4 ஹலோ எஃப். எம்மில் பணி புரிகிறார். அவரோட வார்த்தைகள்ல இந்த வலிகளைப் பதிவு செய்றேன்..

///ரெண்டு வருஷமா நானும் பாலாஜியும் ப்ரைம் டைம் ஷோ பண்ணிட்டு இருக்கோம். நிறைய நிறைய...நிறைய Awareness விஷயங்கள் பேசி இருக்கோம். எல்லாமே அதீத Involvement-ட தான் பண்ணி இருக்கோம். ஆனா எந்த ஷோ அன்னைக்கும்...இன்னைக்கு நடந்த ஷோ அளவுக்கு கை கால் நடுங்கி, தலைல கை வச்ச, கண்ணீர் கட்டுபடுத்தி.....என்னைக்கு பண்ணினதில்லை.

வாய்ப்பு..

என்னுடைய வாய்ப்பு
அவளுக்கு வழங்கப்பட்டது
நானே காரணமாயிருந்தேன்
அதன் ஒவ்வொரு அசைவுக்கும்.

அவளை சிலாகித்தேன்
அவளின் ஏக்கங்களை விவரித்தபடி.
காற்றில் கண்டம் விட்டுக்
கண்டம் செல்லும்
புரவிப்பெண்ணாக
அவள் உணரும் தருணங்களை..

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பாரதத்தின் பெருமை.. பங்கஜ் அத்வானி. PROUD OF INDIA - PANKAJ ADVANI..!!!

பங்கஜ் அத்வானி.. பெருமையுடன் உச்சரிக்க நினைக்கும் பெயர்.. 16 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் (ஏஷியன் கேம்ஸ் கோல்ட் மெடலிஸ்ட்) ஆண்களுக்கான இங்கிலீஷ் பில்லியர்ட்ஸில்( MEN'S ENGLISH BILLIARDS CHAMPIONSHIP) தங்கம் வென்றவர். பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் 7 வேர்ல்டு டைட்டில்களை வென்றவர். 4 நாள் முன்பு இவர் விளையாடியதை ஸ்போர்ட்ஸ் சானலில் பார்த்தேன். மியான்மரின்  OO Nay Thway வை மிக அருமையாக ஆடி வென்றார்.

அவரைக்கொடிகள் இலவமாய்..

இறுக்கங்களுடன்
பயணித்து வந்தேன்.
எப்படி இறுக்கம்
தூர்ப்பதென அறியாமல்.
வினைகளை அற்று
வீழ விரும்பினேன்.
வகிர்ந்து வகிர்ந்து
வார்த்தைகளைத் தூவினாய்.
அதைப்பிடித்துக்
கொடியாக வளர்ந்தேன்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

இளம்பாடலாசிரியர் பத்மாவதி.

ஒரு பாடலாசிரியருக்கு என்ன வயதிருக்கலாம். அவர் என்ன படித்திருக்கலாம். சொல்லுங்கள். சின்னத்தாமரையைப் போல அழகான இந்தப் பாடலாசிரியர் பொறியியல் படித்தவர். ஃபர்ஸ்ட் க்ளாசில் டிஸ்டிங்க்‌ஷனில் கோல்ட் மெடலிஸ்ட். மிகச் சிறுவயதுப் பாடலாசிரியர்.. வயது 25 தான். நம்ப முடியவில்லை அல்லவா., இவர் பெயர் பத்மாவதி.இவரின் முதல் பாடல் வெளிவந்த படம் இயக்குநர் பரத்தின் ”நீதானா அவன்”. இசையமைப்பாளர் தஷி. அந்தப் படத்தில் இவர் எழுதிய பாடல் ஒரு டூயட் பாட்டு.. “ தாவணிப் பொண்ணுன்னு” எனத் தொடங்கும் பாடல். உதயம் தியேட்டரில் அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கும் போது பாடலாசிரியர் என்று இவர் பெயர் வந்ததும் இவரின் மகிழ்ச்சி எப்படி இருந்திருக்கும். இது பற்றி செய்தித் தாள்களிலும் வந்தது. இந்த உயரத்தை எட்டியது எப்படி என அவரிடம் கேட்டோம்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

களவும் கற்று பற. {கவிதை.} ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..

கவுச்சி வீச்சமடிக்கும்
சமையறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்.
துணியுலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புக்களை
வர்ண மிட்டாய்களாய்
எண்ணிச் சுற்றுகின்றன.

சனி, 25 ஆகஸ்ட், 2012

குற்றம். சிறுகதை குங்குமத்தில்

மீனு ஆண்டி வந்தா ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க.. எதுலடா குத்தம் கண்டுபிடிக்கலாம்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்ப்பாங்க.. அதுக்கு இன்னிக்கு இடம் கொடுக்கவே கூடாது.

வீட்டை பம்பரமாக சுற்றி சுற்றி க்ளீன் செய்தாள் ராஜி. டி. வி ஸ்டாண்ட்., கம்யூட்டர் டேபிள்., ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி என்று பார்த்து பார்த்து துணியையும் டஸ்டரையும் வைத்து படு சுத்தமாக்கினாள்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்மாவின் உடைகள்..

வெள்ளுடை
தேவதைகளையும்
செவ்வுடை
சாமிகளையும்
மஞ்சளுடை
மாட்சிமைகளையும்
பச்சை உடை
பகைமைகளையும்

படிமங்களாய்ப்
புதைத்தவற்றை
வர்ணாசிர தர்மமாய்
வெளியேற்றும்
ப்ரயத்னத்தில்..

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வேர் பாய முடியாத செடிகள்..

நெருப்புப்பொறி பறக்க
சந்திப்பு நிகழ்ந்தது
ஒரு எதிரியோடோ
முன்ஜென்ம விரோதியோடோ
உராய்ந்து திரிந்து
இந்த ஜென்மத்தில்
ஏன் கண்டுபிடித்தாய்
என்ற கண்டனத்தோடு.

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஓடுகளாய்...

ஒரு சந்திப்புக்குப்
பின்னான நம்பிக்கைகள்
பொய்க்காதிருந்திருக்கலாம்.
தூசு தட்டித் தேடி
எடுக்கப்பட்ட கோப்புகளில்
இருந்து பெய்யும்
எண்ணத் தூறல்களில்
நனையாது இருந்து
இருக்கலாம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

திருதிரு துறு துறு பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ்.

ஒரு பெண் சாதாரணமா என்னென்ன ஆசைகள் வைத்துக் கொள்ளலாம். நல்லா படிச்சு, இஞ்சினியராகலாம்., டாக்டராகலாம். பைலட்டாகலாம்., ஸ்பேசுக்கு கூட போகலாம். ஆனா ”திரு திரு துறு துறு” பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ் ஒரு நடிகையாக ஆக இல்லை., நடிகர்,நடிகைகளை ஆட்டுவிக்கும் ஒரு டைரக்டரா ஆக ஆசைப்பட்டார். அதுவும் எப்படி நடிப்புத் தொழிலுக்கே சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்து ஜெயித்தார் என இந்த மாதம் பார்ப்போம்.

உங்க கொள்கைகள்ல உறுதியா இருந்தீங்கன்னா ஜெயிப்பீங்க என்பதற்கு நந்தினி ஒரு உதாரணம். அப்பா ஜெயாநந்தன் எல் ஐ சியில் டெவலப்மெண்ட் ஆஃபீசர். அம்மா கிரிஜா க்வீன் மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை. தம்பி முருகானந்தம் பல் மருத்துவர். சினிமாவுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமேயில்லை.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கவிதைக்காரர்கள் வீதியில்..

கோதுதல்..

ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா

ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா..

ஆமாங்க ஆமாம். இந்த அதிசயத்தை நான் பல ட்ரெயின் பிரயாணங்கள்ல பார்த்து இருக்கேன். வரும்போது நம்ம மாதிரிதான் இருப்பாங்க. ஆனால் தூங்கும்போது ட்ரெயின் நிர்ணயிச்ச சீட் அளவை விட அதிகமா அவங்க கால்கள் நீட்டிக்கிட்டு இருக்கும்.

பொதுவா நடுவில் வர பர்த்துங்கள்லதான் அதிகமா இப்பிடி இருக்கும். சைட் அப்பர்ல சில சமயம் இப்படி இருக்கும். எதுக்கும் எந்திரிக்கும்போது நாம பாத தரிசன க்யூவில நிக்கிறமோன்னு நினைக்கிற அளவுக்கு சில சமயம் இருக்கும்.

வானவில் ---- சிறுகதை. குங்குமத்தில்..

பாலத்தின் நடுவில் நின்றிருந்தார் அவர். தொலைக்காட்சியில் காண்பித்தபடி உருட்டி புரட்டி சென்று கொண்டிருந்தது வெள்ளம்.

ஹ்ம், அன்பான மனைவி இல்லை, மகள்கள் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். தனக்கு யாருமே இல்லை என நினைக்கும்போது சுய இரக்கத்தில் அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. யாருக்காக வாழ வேண்டும். இதில் குதித்துவிட்டால் எல்லாம் மறந்துவிடலாம்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.. ஸ்ரீலேகா..

ஸ்ரீலேகா.. இவர் சமூக சேவகி., சுதந்திரப் போராட்டத் தியாகி., விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லத்தின் நிறுவனர் சாவித்ரி வைத்தியின் தங்கை மகள். அம்மா., பெரியம்மா வழியில் இவரும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். ரொம்ப கூச்ச சுபாவமுள்ள குழந்தையாய் இருந்த இவர் இப்போது தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறார். இந்த மாஜிக் நிகழ்ந்தது எப்படி.. எல்லாம் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடம்தான்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. TAMIL BLOGGER'S MEET

பதிவர் சந்திப்பு பற்றிய இந்த அழைப்பிதழை சகோ மின்னல் வரிகள் கணேஷின் வலைத்தளத்தில் இருந்து பெற்றேன்.

எதிர்பாராமல்... ( சமுதாய நண்பனில்..)

எதிர்பாராத மழையோ
ஆளடிக்கும் வெய்யிலோ
ஒதுங்கச் செய்கிறது
அருகாமை வீட்டை..

தெரியாதவர் வீட்டு வாசலில்
ஒதுங்குவது நல்லது.
தெரிந்தவர் வீட்டு
வரவேற்பறையை விட..

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தோழிகளால் வளர்ந்தவன். ( சமுதாய நண்பனில்)

இளவேனிற் காலத்தின்
வளர் சிதை மாற்றங்களில்
இலைகளாய் துளிர்க்கும்
பிறப்பின் முதல் தோழியிடம்
அழுதபடியே வந்தேன்.
அணைத்து உச்சி மோர்ந்தாள்.

கபினியின் கருணையில் ஆவணி 18..?

இந்த வருடம் போல எந்த வருடமும் குழாயடியில் ஆடி பதினெட்டைக் கொண்டாடி இருக்க மாட்டார்கள் மக்கள். அகண்ட காவிரி மணலால் வரண்ட காவிரியாகக் கண்ணைக் கசியச் செய்தது நிஜம். எப்படியும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நீரோ, மழையோ வரவேயில்லை.

நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான். கோயில் இருக்கும் இடமெல்லாம் பார்த்தால் ஒரு ஊரணி, குளம், ஆறு, கடல் ஏதாவது இருக்கும். ஸ்தல புஷ்கரணி என்று. இப்போது எல்லாம் காய்ந்து கிடக்கிறது. வரண்ட வாய்க்கால்களையும், கால்வாய்களையும் பாலீதீன் குப்பைகளோடு பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் பார்த்தபடி கடக்கிறோம்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

என் கைரேகை படிந்த கல்.. எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


டிஸ்கி:- இந்த விமர்சனம் 16 ஜூலை 2011 திண்ணையில் வெளியானது.


வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பெண்ணாதிக்கம்..

கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த
கோபமோ என்னவோ.,
கர்ப்பக்கிரகத்துள்
அடக்கிப் போட்டாய்..
சில நூற்றாண்டுகளுக்கு முன்
நிலவறையிலும்..

தீட்டென்றும்
கற்பென்றும்
கண் அறியா
வேலியிட்டாய்..
தப்புவித்துக் கொண்டே
இருக்கிறேன்..
வேலிகளுக்குள்
சிக்கித் தவிக்கும்
உன்னையும்..

புதன், 8 ஆகஸ்ட், 2012

ராணி..

சேணம் பிடித்து
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

பிம்பத்தின் மீதான ரசனை.

இணைந்திருந்த போதும்
ஒரு தனிமையின் துயரத்தைத்
தருவதாய் இருந்தது அது.

புன்னகை முகம் காட்டி
ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது
அவள் பின் உடலை
ரசிக்கத் துவங்குகிறாய்.

எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில்
அலறும் பாடலைப் போல
நாராசமாயிருக்கிறது அது.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சூலும் சூலமும்

சூலும் சூலமும்..:-
*****************
அவளது அழுகையாலும் புலம்பலாலும்
நிறைந்திருந்தது அந்த வீடு.
தொட்டித் தண்ணீர் கசிந்து
ஊறிக்கிடக்கும் புல்தரையாய்
மொதும்பி இருந்தது அவளது தலையணை.
சமையல் மேடையின் தாளிதத்தெறிப்புக்களாய்
தரையெங்கும் சிதறிப் பொறிந்து கிடந்தன
அவளது கண்ணீர்ப் பூக்களின் உப்பு இதழ்கள்.

அம்முவும் புஜ்ஜியும்..:_ குமுதத்தில்

அம்மு நனைந்து கிடந்தாள்.,
வாயெல்லாம் பிஸ்கட் கூழ்., தண்ணீர்.
“அம்மா புஜ்ஜி என் தலையிலே
பென்சில் சொருவி வைச்சிருக்கா.. வலிக்குது”

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பண்புடன் குழுமத்தின் போட்டிகள்.

பண்புடன் மின்னஞ்சல் குழுமத்தின் ஆண்டு விழா போட்டிகள்...
 ------------------------------ ----------------------------------------------

கவிதைப் போட்டி தலைப்பு : "வீடு"

கட்டுரைப் போட்டி தலைப்பு : "இன்னுமா இருக்கிறது காதல்"

கதை : எந்த தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : panbudan.padaippugal@gmail.com

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மேலதிகாரிகள்..

உறங்கத் தாமதமாகும்
ஒவ்வொரு இரவும்
சுமந்து வருகிறது
உழைப்பின் களைப்பை..

அலுவலகம் உறிஞ்சிச்
சுவைத்த நேரத்தை
பார்களில் அமர்ந்து
பீராக உறிஞ்சியபடி

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வெண்கலம் பெற்றுத்தந்த ககன் நரங்..

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுப்பது என்பதே மிகக் கடினமான விஷயம். எல்லாப் போட்டிகளையும் உற்று நோக்கினால் ஒரு சில விநாடிகள் அல்லது ஒரு சில மில்லிமீட்டர்கள்தான் வித்யாசம்தான் இருக்கும் தங்கக் கோப்பைக்கும் வெள்ளிக் கோப்பைக்கும் வெண்கலக் கோப்பைக்கும். அந்த வகையில் லண்டனில் நடைபெற்ற 2012 க்கான ஒலிம்பிக்ஸில் நமது நாட்டுக்காக விளையாடி துப்பாக்கி சுடும் போட்டியில் (AIR RIFLE COMPETITION) முதல் பதக்கத்தை வாங்கித்தந்த ககன் நரங்குக்கு வாழ்த்துக்கள். மிகக் கடுமையாக விளையாடி அவர் பெற்றுத்தந்த வெண்கலமும் தங்கம்தான்.

5 குறுங்கவிதைகள்

ஒளியூட்டப் போகிறோமா
எரியூட்டப் போகிறோமா
என அறிவதில்லை
பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்..

 ***********************************

புழுவைப் போல உள்நுழைந்து
பத்து மாத உறக்கம்..
கொடி வழி உணவு கூட்டுக்குள்...
இறக்கைகளைப் போல
கை கால்கள் முளைத்ததும்
உந்திப் பறந்தது கூடை விட்டு ..
குழந்தையாய்..

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

மஞ்சளுக்கு மகிமை பெற்ற ஈரோடு அதிக புத்தக வாசிப்பாளர்களையும் உடையது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட்3ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இது 8ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.. ஈரோடு வாசிப்பு இயக்கம் 2 ஆண்டு காலமாக இயங்குகிறது..

முதுகில் பதிந்த முகம்

பால்கனியில் தொற்றியபடி
கண்மறையும் வரை
கையாட்டி உள்வந்து
படுக்கை விரிப்புகளை
உதறிச் செருகும்கணம்
இரவு ஊடலில்
திரும்பிப் படுக்க
Related Posts Plugin for WordPress, Blogger...