கவுச்சி வீச்சமடிக்கும்
சமையறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்.
துணியுலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புக்களை
வர்ண மிட்டாய்களாய்
எண்ணிச் சுற்றுகின்றன.
தினமும் ஒரு கைப்பிடி
கஞ்சியோ, அப்பளமோ
சின்னவன் தின்ன இட்லியோ
போடுகிறாள் அவளும்
அவை ஏமாறாமலிருக்க..
அரிசிச் சோறுண்டால்
அலறி அழைக்கும்
அண்டங்காக்கைகள்
ரொட்டி கண்டால்
யாருக்கும் அளிக்கப்
பிரியப்படாமல்
இறகு விரித்து மறைத்து
அலகு கொள்ளாமல்
அள்ளிப் பறக்கின்றன.
டிஸ்கி:- 23.5.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.

சமையறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்.
துணியுலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புக்களை
வர்ண மிட்டாய்களாய்
எண்ணிச் சுற்றுகின்றன.
தினமும் ஒரு கைப்பிடி
கஞ்சியோ, அப்பளமோ
சின்னவன் தின்ன இட்லியோ
போடுகிறாள் அவளும்
அவை ஏமாறாமலிருக்க..
அரிசிச் சோறுண்டால்
அலறி அழைக்கும்
அண்டங்காக்கைகள்
ரொட்டி கண்டால்
யாருக்கும் அளிக்கப்
பிரியப்படாமல்
இறகு விரித்து மறைத்து
அலகு கொள்ளாமல்
அள்ளிப் பறக்கின்றன.
டிஸ்கி:- 23.5.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)