எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஓடுகளாய்...

ஒரு சந்திப்புக்குப்
பின்னான நம்பிக்கைகள்
பொய்க்காதிருந்திருக்கலாம்.
தூசு தட்டித் தேடி
எடுக்கப்பட்ட கோப்புகளில்
இருந்து பெய்யும்
எண்ணத் தூறல்களில்
நனையாது இருந்து
இருக்கலாம்.

எங்கோ அகதியாய்
விட்டு வந்த
நிலக்கோப்புகளை
பராமரித்துப் பொடியாய்
அடுக்காதிருந்திருக்கலாம்.
பழையனவற்றில்
நனைவதும், மூழ்குவதும்
தவிர்க்கயியலா போதுகளில்
திசைவிட்டு திசை நகர்ந்து
குடியிருப்பை அமைக்கும்
சிலந்தியை காணுவதும்
தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம்.
இதுதான் என தீர்மானித்தபின்
உயிர்வாழ்வதும்
மரணிப்பதும்
ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட
ஓடுகளாய் சரியும்வரை.

டிஸ்கி :- இந்தக் கவிதை 16 ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது. 


4 கருத்துகள்:

  1. /// இதுதான் என தீர்மானித்தபின்
    உயிர்வாழ்வதும்
    மரணிப்பதும்
    ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட
    ஓடுகளாய் சரியும்வரை. ///

    சிறப்பான வரிகள்....

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை ...
    திண்ணையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...