எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2019

காதல் வனமும் வாசகசாலையின் கவிதை இரவும்.

2061. Feb spl. Curry leaf.

2062.  ஏப்ரல் 2, 2019 லேருந்து G+ இருக்காதாம்ல. நாம ப்லாக்குல போடுற ஃபோட்டோஸ் எல்லாம் கூகுள்ல கலெக்ட் ஆகும்ல அதெல்லாம் இருக்குமா ?

2063. G+ shutdown ஆகப்போகுது. இப்பவும் தினம் புதுசு புதுசா சிலர் நம்மள அதுல ஃபாலோ பண்றாங்க. என்னவா இருக்கும்

2064. என்ன பார்த்தா டீச்சர் மாதிரி இருக்கோ 🤔 எதுக்கு தினம் இவ்ளோ பேர் குட்மார்னிங் சொல்றாங்க.

2065. Feb SPL. 80 களில் கிறுகிறுக்க வைத்த பாடல்.
what a waiting what a waiting.
காதலின் தீபம் ஒன்று & காதல் அணுக்கள்.
சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா ?

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பண்டிதரை வாதில் வென்ற பராசரர். தினமலர், சிறுவர்மலர் - 6.

பண்டிதரை வாதில் வென்ற பராசரர்.
குழந்தைகள் பலவிதம். சில குழந்தைகள் வளர வளர உலக ஞானம் பெறுவார்கள். ஆனால் சில குழந்தைகளோ கருவிலே திருவுடையவர்களாகப் பிறந்திருப்பார்கள். மேலும் எவ்வளவு திறமை இருந்தாலும் அகங்காரம்கொள்ளாமல் இவர்கள் தங்கள் பணிவன்பாலும் அடக்கத்தாலும் ஆசார்யர்களை மதித்து நடந்து பல்வேறு உயர்வுகளை எய்துவார்கள். அப்படிப்பட்ட புத்திசாலிக்குழந்தை ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீரங்கத்தில் கூரேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீரங்கன் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் மனைவி பெயர் ஆண்டாள் அம்மையார். ஆயிரக்காணக்கான அதிதிகளுக்குத் தினமும் அன்னமிட்டு வந்தவர்கள் இவர்கள். காலமாற்றத்தால் தினமும் உஞ்சவிருத்தி செய்தோ அல்லது கோயில் பிரசாதங்களைக் கொண்டோ எளிமையாக வாழ்ந்து வந்தார்கள் இத்தம்பதிகள்.
ரு நாள் உஞ்சவிருத்திக்குச் செல்லமுடியாமல் வெகுமழை பொழிந்தது. கணவன் மனைவி இருவரும் கொலைப்பட்டினி கிடந்தார்கள். தினமும் கோவிலுக்கு வந்து செல்லும் கூரேசர் மழை காரணமாக வராததால் அக்கோவிலின் அர்ச்சகர் பிரசாதங்களைக் கொண்டு வந்து வீட்டிற்கே கொடுத்துச் செல்கிறார். மகிழ்ந்த கூரத்தாழ்வார் அதிலிருந்து தனக்கு ஒரு கவளமும் தன் மனைவிக்கு ஒரு கவளமுமே பெற்றுக் கொள்கிறார்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “

எனது புது நாவலான “ காதல் வனம் “ புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கு எண் . 8 இல் கிடைக்கிறது. புதுக்கோட்டை வலைப்பதிவ நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வாங்கி வாசித்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.


டிஸ்கவரி அரங்கு எண் . 8 

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காதலர் தினத்தில் ”காதல் வனம்” வெளியீடு.

எனது புது நாவலான காதல் வனம் காதலர் தினமான ஃபிப்ரவரி பதிநான்காம் தேதி சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது.

அந்நிகழ்வுக்கு நம் வலைப்பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.
 

புதன், 20 பிப்ரவரி, 2019

கவிக்குயிலும் தேசப்பிதாவும் ஹலோ மதுரை ஃபிப்ரவரி இதழில்.

கவிக்குயிலும் தேசப்பிதாவும்.

இந்தியாவின் நைட்டிங்கேல், பாரதீய கோகிலா என்றெல்லாம் புகழப்பட்டவர் யார் தெரியுமா. நம்ம கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள்தான். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் ஆளுமைத் தன்மையும் அழகும் இனிமையும் மன உறுதியும் வாய்ந்த மகத்தான சக்திமிக்க பெண்மணி அவர். நம் நாட்டு விடுதலையில் பெரும்பங்காற்றிய மாபெரும் பெண் சுதந்திரப் போராளி அவர். காந்தியடிகள் மேல் கொண்ட அபிமானத்தால் காங்கிரஸில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குத் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தவர்.

வங்காள குலின் ப்ராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிறந்தது ஹைதராபாத். சாதிக்கட்டுப்பாடு அதிகம் இருந்த அந்தக் காலத்திலேயே கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. 1879 பிப்ரவரி 13 இல் பிறந்த சரோஜினி நாயுடு எழுபது ஆண்டுகள் வாழ்ந்து இந்திய விடுதலைவேள்வியில் பங்கேற்றவர். காந்தியடிகள் மீது கொண்ட அபிமானத்தால் சுதந்திரப் போராட்டத்திலும் சத்யாக்ரகத்திலும் ஈடுபட்டவர்.. அதனால் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், விடுதலை இந்தியாவின் உத்திரப் ப்ரதே சகவர்னராகவும் ஆட்சி செய்தவர்.

தந்தை அகோர்நாத் புரட்சிச் சிந்தனையாளர். ஹைதராபாத்தில் நிஜாம் கல்லூரி என்ற ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தாய் பரதசுந்தரி தேவியும் கவி இயற்றுவதில் வல்லவர்.சரோஜினியோடு கூடப்பிறந்தவர்கள் எண்மர். அவர்களில் ஒரு சகோதரரான வீரேந்திரநாத் புரட்சிக்காரர், இன்னொரு சகோதரரான ஹரீந்திரநாத் கவிஞர். எனவே சரோஜினியின் ரத்தத்தில் கவிதையும் புரட்சியும் ஊறித்ததும்பியதில் ஆச்சர்யம் இல்லை.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி, கிங் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ், லண்டன் கிரிடன் கல்லூரிகளில் பயின்றவர் சரோஜினி. உருது , தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசுவை அடக்கிய நந்தி.( அ ) ஆணவம் அழிக்கும். தினமலர் சிறுவர்மலர் - 5.


பசுவை அடக்கிய நந்தி.( அ )  ஆணவம் அழிக்கும்.

துரையில் அனந்த குண பாண்டியன் காலத்தில் ஒரு நந்தி பசுவை அடக்கியது. பசுவும் நந்தியும் ஒரு இனம்தானே. இரண்டும் இணக்கமாகப் போனால் என்ன ? அது ஏன் நந்தி பசுவை அடக்கியது ? அப்படி நந்தியால் அடக்கப்படும்படி அந்தப் பசு என்ன செய்தது, என்ன காரணம் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மதுரையில் அனந்த குண பாண்டியன் என்ற மன்னனின் அரசாட்சிக் காலத்தில் அவுணர்களால் இடர்ப்பாடு அதிகம் ஏற்பட்டது. முதலில் யானையை ஏவியும் அதன் பின் நாகத்தை ஏவியும் தொல்லை கொடுத்த அவர்கள் பாண்டியனை இன்னும் துன்புறுத்த ஒரு மாயப்பசுவை உருவாக்கி ஏவினார்கள்.

பசு என்றால் அனைவரும் வணங்குவார்கள். அதை எதிர்க்க மாட்டார்கள். அதனை தெய்வமாகப் பூஜிப்பார்கள்.  எனவே பசு ரூபத்தில் ஒரு கொடிய அரக்கனை உருவாக்கி அனுப்ப நினைத்தார்கள். மிகப் பெரும்  கொடிய யாகம் ஒன்றை நடத்தி அதில் தீய மந்திர உச்சாடனம் செய்து அந்த அரக்கனை மாயப்பசு ரூபத்தில் உருவாக்கி ஏவினார்கள்.

திங்கள், 11 பிப்ரவரி, 2019

ஏமநாதனை வென்ற சோமசுந்தரன். ( இசைவாணனை வென்ற விறகுவெட்டி ) தினமலர் சிறுவர்மலர் - 4.

ஏமநாதனை வென்ற சோமசுந்தரன். ( இசைவாணனை வென்ற விறகுவெட்டி )
சை ஞானத்தில் சிறப்புற்ற ஒரு இசைவாணன் ஒருவன் கர்வமுற்று அலைந்தான். தன் இசைக்கு ஈடு இணை இவ்வுலகத்திலேயே இல்லை என்று ஆணவம் கொண்டு நாடு நாடாகச் சென்று இசைஞர்களைப் போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தினான். ஆனால் ஒரு நாட்டில் விறகுவெட்டியின் கானத்தைக் கேட்டு வெட்கமடைந்து ஊரைவிட்டே ஓடினான். அந்த இசைவாணனைப் பற்றியும் அவனைத் தன் இன்னிசையால் விரட்டிய விறகுவெட்டியைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பாண்டிநாட்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு வரகுணபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இசைவல்லுநர்கள், பாணர்கள், விறலியர், கலைஞர்கள் அனைவரையும் ஆதரித்து அவர்களின் திறமைக்கேற்பப் பொன்னும் பொருளும் பரிசிலாக வழங்குவான்.
வடநாட்டைச் சேர்ந்த இசைப்பாணர்கள் குழு ஒன்று ஒரு முறை மன்னனின் அவைக்கு வந்தது. அதன் தலைமை யாழ்பாணனின் பெயர் ஏமநாதன். அவன் தன்னுடைய இசைக்குழுவினருடன் ஒரு இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தினான். அந்த இசையைக் கேட்ட சபை மட்டுமல்ல நாடே மயங்கியது. அவ்வளவு இனிமை. ஆனால் இனிமையாகப் பாடத்தெரிந்த அவனுக்கு இங்கிதமாகப் பேசத் தெரியவில்லை.

சனி, 9 பிப்ரவரி, 2019

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

வாராக் கடன்களும் பாலைக் காதலும்.

2041. பார்க்கப் போனா நான் மட்டும்தான் தமிழ்ல ப்லாக் எழுதிட்டு இருக்கேன்போல. அதுவும் இண்டிப்லாகர்ல தினம் சப்மிட் பண்ணிட்டும் இருக்கேன். வோட்டுப் போட்டு ஹோம்பேஜில் போட்டு நெதம் கௌரவிக்கிறாங்களே

2042. என் அன்பு வேண்டுகோளை ஏற்று என் ப்லாகுக்காக எழுதித்தந்த லல்லி செல்லத்துக்கு தாங்க்ஸ். நல்ல விஷயங்களைச் சொல்ல & நெகிழ்வுகளைப் பகிர்ந்துக்க, நிறைய எழுத விருப்பமிருப்பவர்கள் என் இன்பாக்ஸுக்கு அனுப்பலாம்.

2043. 98 இல் டெல்லியில் இருந்தோம். பசங்க, அப்பா அம்மாவுடன் சிட்டி டூர்.
இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்ட இடத்தை அப்பாவும் அம்மாவும் மிரட்சியா பார்த்து ( கண்ணாடிக்குள் கீழ் ரோஜா பதிக்கப்பட்டுள்ளது ) தொட்டுக் கும்பிட்டாங்க.அப்பாவுக்கு மனசு ஆறவேயில்லை. இப்பிடிப் பண்ணிட்டாங்களே என்று கலங்கினார். அப்பாவுக்கு இந்திராம்மா மேலே பயங்கர அபிமானம்.நம்ம வீட்டு இந்திராகாந்திஎன்று என்னைச் செல்லமாக அழைத்துக் கொள்வார் :)

மகாத்மா சமாதிக்கு ( ராஜ்காட் ) சென்றபோது கண்கள் கலங்கி இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தே கும்பிட்டார்கள். கொஞ்சம் திகைத்துப் பின்வாங்கி மீண்டேன். நமக்குத்தான் கூட்டத்தினர் பார்க்கின்றார்களே என்ற அநாவசியக் கூச்சம் . அவர்களுக்கு அவர் தெய்வம். அப்பா அம்மா பிறந்ததே 1945, 1946 தான் எனும் போதிலும்.

2044. மதிப்புமிகு வலைப்பதிவ நண்பர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் திருச்சியில் இன்று காலை 9.15 க்கு மூச்சுத்திணறல் காரணமாக இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

2045. ESCAPE PLAN - 1 பார்த்தேன். ரொம்ப பிடிச்சிது. 2 & 3 யாரும் பார்த்தீங்களா நல்லா இருக்கா. 3 ல எல்லாம் புதுமுகமா இருக்கு. ஸ்டாலன் இல்லாட்டி பார்க்க வேணாம்.

2046. Dahlias , daisys with Zinnia . a triangle flower bed.


2047. பளிச் பளிச்சென்று


2048. To be precise.. Herge said ,Tintin was aimed at "all young people aged from seven to seventy-seven " and I think we can extend that from Nine to Ninety !

From Belgium to Bengaluru our beloved Tintin arrives at the age of 90. Billians of blue blistering barnacles !!. Happy Birthday Tintin


2049. Only Five more years.. we have to withstand dengue bite .. If we are alive

2050. Hahaha. Police studio

2051. ஏகாந்தம்.

2052. பாங்க் ஆஃப் மதுராவில் இருந்து ஐசிஐசிஐ வங்கியாக மெர்ஜ் ஆனதில் இருந்து தொடங்கியது பாங்க் ஆஃப் மதுரா முன்னாள் ஊழியர்களின் வாழ்வின் சீரழிவு.அது 2000 ஆம் ஆண்டு. ஐயா எல்லார் வாழ்விலும் ஏற்றி வைத்த விளக்கை பேரன் அழித்து ஒழித்தார்.

செக்யூரிட்டி ( derivatives ) ட்ரேடிங் செய்து பாங்கை கோடிக்கணக்கில் நஷ்டப்படுத்திய புதிய எம் பி ஏக்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தும். இன்சூரன்ஸ் பிடித்து மக்களைக் கொள்ளையடித்தும், பாண்டு விக்கவும் கோல்ட் விற்கவும் கமிஷன் ( ரேட்டிங்கில் கைவைப்பது ) ஏஜெண்டுகள் போல் மேனேஜர்களை நடத்திய ஐசிஐசிஐ பாங்க் ஆஃப் மதுராவின் முன்னாள் ஊழியர்களை வன்முறையாக வெளியேற்றியது. ரத்தம் சொட்டாததுதான் பாக்கி. ஒவ்வொரு குடும்பமும் படிக்கும் குழந்தைகளையும் திருமணவயதில் மகள்களையும் வைத்துக் கொண்டு அல்லாடியது மகா கோர சரித்திரம்.

மதுரை வங்கியின் முன்னாள் ஊழியர்களுக்குப் பென்ஷன் வழங்கும் ஆப்ஷனைக் கூடக் கொடுக்கவில்லை. அதே சமயம் பென்ஷன் ஆப்ஷன் கொடுக்காதவர்களுக்குக் கூட மற்ற வங்கிகள் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஷன் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்காதவர்கள் பல்வேறு கம்பெனிகள், வங்கிகள், நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஆனாலும் பலர் நொந்து வெந்து வாழ்வை இகழ்ந்து போனார்கள்.

இதற்கும் இன்றைய சந்தா கோச்சார் முறைகேடாக கடன் வழங்கிய ஊழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஆனால் உயிரைக் கொடுத்து உழைத்தவர்களை உதாசீனம் செய்த ஒரு நிறுவனத்துக்கு இதெல்லாம் வேண்டியதுதான்.

இன்னும் மற்ற வங்கிகளிலும் இதெல்லாம் நடைபெற்று வருகிறது. இதே போல் லோன் பார்ட்டிகளிடமெல்லாம் பணம் பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

வாராக் கடன்கள் வேறு. கோடீஸ்வரனிலிருந்து கல்விக் கடன் வரை திரும்புவது நிச்சயமில்லை. எந்த நேரம் எந்த வங்கி எதனோடு மெர்ஜ் ஆகும் என்று தெரியவில்லை. ஏதோ தெய்வபலத்தில்தான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற நினைப்பு வேண்டும்.

மேலும் என்றைக்கிருந்தாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மை.

பாங்க் ஆஃப் செட்டிநாடு என்று ஒன்று இருந்தது , அது மதுரை வங்கியுடன் மெர்ஜ் ஆனது 1960- 70 களில். இது தனியார் வங்கிதான் பழனிசாமி சார். நான் சொல்ல வந்தது வங்கிகளைத் திவாலாக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களைப் பற்றி. மேலும் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் உருப்படியாக உழைத்த மக்களைப் பற்றி ( அவர்கள் எல்லா ஜாதி மதம் இனத்திலிருந்தும் வந்தவர்கள். பாதிப்பேர் செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். ) அவர்களின் பாதரவு பற்றி.

2053. விடுவித்தல் எளிதாயிருக்கிறது. முரண்களோடு சேர்ந்து இருப்பதுதான் கடினமாயிருக்கிறது. :)

2054. பாலைக் காதல் பாடல்கள்

#காற்றே என்வாசல் வந்தாய்...

#சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா.

2055. புறாக்கள் வசித்த இடம்..

2056. காரைக்குடியைத் தேடி வருதே. ஜெய்னிகா நெய்ரோஸ்ட் <3 p="">#ஃபுட்_லவ்.


2057. கற்பனைதான் எவ்வளவு சுகமானது. Queen of Queen K. R. Vijaya  மனதை மயக்கும் இசையும் வரிகளும்..

#தொடுவதென்ன தென்றலோ மலர்களோ.

2058. ஆமா. நா ரொம்பக் கோவக்காரிதான். என்னோட யாரும் இருக்க முடியாது. நானும் இருக்கமாட்டேன்

2059. வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. சொல்லியபின் சிதைத்தல் அவற்றைக் கொல்வது போல். வார்த்தைகள் உண்மையானால் வாழ்க்கையும் உன்னதமாகும்..

2060. 70’S KIDS ATROCITIES. :)

சுதா எஸ் நாராயணன் பேஜுக்குபதில் கொடுத்தது .

SUDHA :- கோவை இலையில சிலேட்டு அழிச்ச 70 ஸ் கிட்ஸ் நாங்க

ME :-அப்பிடியே நாம குச்சி தின்னு அடி வாங்குனதையும் சொல்லணும் ஹாஹா

SUDHA :- அப்பா தினம் தந்த பாக்கெட் மணி 5 பைசால ஸ்கூல் வாசல் ஆயா கடைல காலைல 3 பைசாக்கும் மதியம் 2 பைசாக்கும் மிட்டாய் வாங்கி தின்ன 70ஸ் கிட்ஸ் நாங்க

ME :- காசே தரமாட்டாங்கப்பா. வேணும்னா வீட்டுல வாங்கி வைக்கிறோம் தின்னும்பாங்க .

SUDHA :- வானத்ல பறக்ற நாரைய பாத்து பூபோடுனு பாட்டு பாடி அது விரல் நகத்ல பூபோட்டதா நம்புன 70ஸ் கிட்ஸ்

ME :- அது கருடன் இல்லையா.கருடா கருடா பூப்போடு , கருடாதம்பி மாப்போடுன்னு சொல்வோமே :)

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


















செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

GLASS - CINEMA REVIEW. க்ளாஸ் -ஒரு பார்வை.

GLASS - CINEMA REVIEW. க்ளாஸ் -ஒரு பார்வை.

ஷ்யாமளன் எம் நைட் எடுத்த படம். ப்ரூஸ் வில்லீஸ், ஜேம்ஸ்மெகஅவோய், சாம்வேல் எல் ஜாக்ஸன் ஆகியோர் நடித்த படம். எக்ஸ்பெண்டபிள்ஸ், ஸ்ப்ளிட் ஆகியவற்றின் தொடர்ச்சி.

THE MULE - REVIEW. தி ம்யூல் - ஒரு பார்வை.

THE MULE - REVIEW. தி ம்யூல் - ஒரு பார்வை.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட்  தயாரித்து நடித்த படம். 90 வயதுக்காரரான லியோ ஷார்ப்  என்ற  போதைப்பொருள் கடத்தல்காரரைப் பற்றி வெளிவந்த ( நியூயார்க் டைம்ஸ் ) பத்ரிக்கைச் செய்தியை மையமா வைச்சு வெளிவந்த படம் இது.

சனி, 2 பிப்ரவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். :- திரு விவிஎஸ் சார் கூறும் தலைகீழ்ப் பாடம் !


இந்த வாரமும் மிகப் புதிதான வங்கி, காசோலை சார்ந்த தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறார் திரு விவிஎஸ் சார் அவர்கள்.

தலைகீழ்ப் பாடம் !


காசோலையில் தமிழில் கையெழுத்து போட வேண்டும்.   சமூக ஊடகங்களில் இந்தக் கருத்து வலம் வருகிறது.  அதாவது தாய் மொழியில் கையொப்பம்.  நல்ல விஷயமே. 

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

உணவை வீணாக்கியதால் வந்த தொல்லை !. தினமலர் சிறுவர்மலர் - 3.

உணவை வீணாக்கியதால் வந்த தொல்லை. 
காசி மாநகரில் வசித்துவந்த இரு சகோதரர்கள் பற்றிய கதை இது. இதில் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும் இருந்தார்கள். முற்பிறப்பில் தனக்கு வழங்கப்பட்ட உணவை வீணாக்காதவன் அடுத்தபிறவியில் செல்வந்தனாக விளங்கினான். ஆனால் வீணாக்கியவன் அடுத்தபிறவியில் வறுமையில் உழலும் ஏழையாக துயருற்றான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவநாதரும் விசாலாட்சியும் குடி கொண்டிருக்கும் காசி மாநகரம். அங்கே அன்னபூரணியும் அனைவருக்கும் அன்னம் பாலித்து வருகிறாள். ஆனால் நகரின் ஒரு கோடியில் மாபெரும் மாளிகையில் தேவதத்தன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் அறுசுவை உணவை உண்டு இன்பமாய் இருந்தான்.
ஆனால் அவனது சகோதரன் தனஞ்செயனோ கங்கையின் மணிகர்ணிகை கட்டத்தில் நீராடி காலை உணவு கிடைக்குமா என்று கவலையோடு விசுவநாதர் கோயிலுக்கு வந்து நின்றான். பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அவனிடம் சல்லித்துட்டு கூட இல்லை. தன் அண்ணனுக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்திருக்கும்போது தான் மட்டும் தரித்திரனாய் உழலும் காரணம் என்ன என்று அவன் கோயில் மண்டபத்தில் அமர்ந்து இறைவனிடம் கேட்டான்.
பசிக்கிறக்கத்தில் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு சாமியார் காட்சி தந்தார். “ தனஞ்செயா உனக்கு வறுமை ஏன் ஏற்பட்டது என்பதை நான் கூறுகிறேன்.  காஞ்சி மாநகரத்தை சத்ருதர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது தோழன் ஹேரம்பனுடன் ஒருமுறை வேட்டைக்குச் சென்றான். அப்போது அவர்கள் காட்டில் வழி தவறி விட்டார்கள். அவர்களைப் பார்த்த முனிவர் ஒருவர் பரிவோடு அழைத்து உணவு வழங்கினார். “
Related Posts Plugin for WordPress, Blogger...