எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).

பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மண்சட்டிகளும் ஆடுகளும்...

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சார்பு நிலை..

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..

வியாழன், 27 அக்டோபர், 2011

சேமிப்பாளர்களுக்கு மட்டுமே..

முதலீடு சம்பந்தமான என் கட்டுரைகள் அனைத்தும் சிறிய நடுத்தர அளவில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கான ஆலோசனைகள் மட்டுமே. அஞ்சலக முதலீடு., இன்சூரன்ஸ்., வங்கி டெப்பாசிட்டுகள்., பாண்டுகள்., தங்கம்., இதுபோன்றதே என்னுடைய ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றிய கட்டுரைகளும், பங்குச் சந்தை முதலீடு பற்றிய கட்டுரைகளும், ஏற்றுமதி பற்றிய கட்டுரைகளும். யாரையும் கட்டாயமாக பங்குச் சந்தையில் ட்ரேட் செய்யுங்கள் என கான்வாஸ் செய்யவில்லை. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என நான் ஒரு கட்டுரையும் எழுதியதில்லை.

நம்பகத்தன்மை வாய்ந்த செபியின் பரிந்துரைப்படியான A++ கம்பெனிகளின் நம்பிக்கையான ஷேர்களையே., முதலீட்டில் ஒரு பாகமாக மட்டுமே செய்யும்படி ஆலோசனை மட்டுமே பகிர்கிறேன். இது யாருக்கும் கட்டாயமானதல்ல. தேவை ஏற்படின் உங்கள் பணத்தை முதலீடு செய்ய மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்ற இறக்கங்கள் குறித்தான சிந்தனைகள் முதலீட்டாளர்களுக்கு அவசியம்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளிக்குத் தங்கம். நம்தோழியில்.

இன்றைய நிலைமையில் தங்கத்தோட விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய விலை ஏறினாலும் நகைக் கடைகளில் கூட்டம் இருந்துகிட்டுத்தான் இருக்கு. இது முதலீடுன்னும் ., இல்லை வேஸ்ட்ன்னும் சொல்றவங்க இருக்காங்க. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் கரன்சியையும் தீர்மானிக்கிற விஷயமா தங்கம் இருந்துகிட்டு இருக்கு. அரசாங்கத்தின் தங்கத்தின் இருப்பைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சி மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு ஏறினாலும் தங்கத்தை வாங்குவோம். அது சிறந்த முதலீடுன்னு சொல்ற இருவரையும் ., இது முதலீடு இல்லைன்னும் சொல்றவங்க கிட்ட கருத்து கேட்டோம். முதலில்.,

திங்கள், 24 அக்டோபர், 2011

ஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.

26.10.2011 விகடனில் கடவுளை நேசித்தல் என்ற என் கவிதை.. :)


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் நிறைய ப்ரபலங்கள் எழுதி இருக்காங்க.. சாந்தா தத்.,திருப்பூர் கிருஷ்ணன், பாக்கியம் ராமசாமி,விமலா ரமணி, சாருகேசி, காந்தலெக்ஷ்மி சந்த்ரமௌலி, புஷ்பா தங்கதுரை, இரண்டு நாளில் 25 கோயில்கள் என்று ம. நித்யானந்தம், மனைவி கணவன் மகிழ்விப்பது எப்படி என்று டாக்டர் பாலசாண்டில்யன் இவங்களோட நம்ம வலையுலகப் பிரபல பெண் பதிவர்கள் ஹுசைனம்மாவும் அமைதிச்சாரலும் எழுதி இருக்காங்க. மிக அழகான குழலூதும் கண்ணனோட அருமையா வந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். எல்லாருடைய படைப்புக்கும் இடம் கொடுத்துட்டு மிகச் சின்னச் சிறுகதையா ஜ்வாலா எழுதின பாட்டியின் தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஜ்வாலா வேறு யாரும் இல்லிங்க. நம்ம கிரிஜா ராகவன் மேடம்தான். மிக அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம். பெருநகரங்களில் தீபாவளி ஒரு விடுமுறைநாள் . அவ்வளவே .

வியாழன், 20 அக்டோபர், 2011

அதீதத்தில் வேதாளம்..

சந்தேகச் சுக்கான்கள்
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்

ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..

புதன், 19 அக்டோபர், 2011

தேவதை அனுப்பிய தேவந்தி.

என் தாய்மொழியெனும் தேவதை தேவந்தியாய் கிடைத்தது கைகளில். தேனுண்ணும் வண்டுகள் முரல்வதுபோல ஒரு மயக்கத்தோடு தொடங்கியது அந்தப் பூவுக்கு அருகிலான பயணம். தேனை சேமித்து சேமித்து கெட்டிப்பட்ட கல்பூவாய் ஆகியிருந்தது அந்தப் பூ. சுற்றிச் சுற்றிவந்த வண்டு தாபத்தோடு மயங்கத் தொடங்கியது, பூவைச் சுற்றி..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

விக்னேஷ்வராவில் (துணை)விருந்தினராக..

ஜூன் 25 ஆம் தேதி ருக்கு அம்மாவுடன் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பின் ஒரு விழாவுக்கு செல்ல நேர்ந்தது. அது போரூர் கவர்ன்மெண்ட் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து நல்லமார்க் வாங்கி தேறிய குழந்தைகளுக்குப் பணப்பரிசும், 18 குழந்தைகளுக்கு சீருடையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கும் விழா. அந்த க்ளப்பை சேர்ந்த பத்மா மணி மேடம் சிறப்பு விருந்தினராக ருக்கு அம்மாவை அழைத்திருந்தார்கள். ருக்கு அம்மாவுடன் துணைக்கு சென்ற என்னையும் துணை விருந்தினராக அமரவைத்துவிட்டார்கள். லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் அவர்கள் அனைவரும் என்பதும் என்னை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதும் மகிழ்ச்சியாய் இருந்தது. (நன்றி கிரிஜாம்மாவுக்கு) .

சனி, 15 அக்டோபர், 2011

போடுரா ஷட்டரை..

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..டாஸ்மாக்குக்குஎல்லாம் 5 நாள் ஷட்டர். ப்ளாக்குல கூட கிடைக்கலியாம்.. வீக் எண்டானா எஞ்சாய் பண்ணனும்னு நினைக்கிற வீக் எண்ட் ப்ரியர்களே.. பார், பஃப், கிளப்., நம்ம ஜனத்த எல்லாம் வாழவச்சிகிட்டு இருக்குற டாஸ்மாக்குல கூட கறுப்பு, வெள்ளை, நீலம் அப்பிடின்னு எந்தக் கலர்லயும் கிடைக்கலியாம்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜெயிக்கப்போவது யாரு.?

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் அவர்களின் சாதனைப் பட்டியல்.


முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன். இந்த முறை சைதை தொகுதியில் போட்டி இடுகிறார்.

**************************************************************


சைதை சா துரைசாமி அவர்கள் நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கியவர். தமிழகத்தை பெருமையுறச் செய்தவர். சைதை சா. துரைசாமி குளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முகப்புத்தகத்தில் என்னுடைய நண்பரான அவருடைய தேர்தல் வாக்குறுதியை முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன்.

வியாழன், 13 அக்டோபர், 2011

புதன், 12 அக்டோபர், 2011

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் நூல்கள். முதலீடு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.. ஆனால் ஏற்றுமதி சம்பந்தமான ஒரு வலைப்பூவை இவர் நடத்துகிறார் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. ஏற்றுமதியும் இறக்குமதியும் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.

இவர் செட்டிநாட்டின் நெற்குப்பையை சேர்ந்தவர். வெளிநாட்டு வங்கியொன்றின் இந்தியப் பொது மேலாளராகமும்பையில் பணியாற்றுகிறார். மிக அருமையான தகவல்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக் கிடக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்கிறார்.

இறக்குமதி பற்றிக் கூறும் போது,

செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாதுமானவள்.. SHE .. THE END AND THE BEGINNING.



யாதுமானவள். அப்பா என்ற சொல்லுக்கு எத்தனை பதம் பிரிக்க முடியும். தோழன், வழிகாட்டி, தந்தை. , இன்னும் இறைவன் என்றும் சொல்லலாம். இன்றும் கூட போனில் நான் சிறிது அப்செட் ஆக இருந்தால் அப்பா அன்று இரண்டு மூன்று முறை கூட பேசுவார்.. அப்பாவுக்கு மகள் என்பது அவ்வளவு பொக்கிஷமான உறவு. அது இந்த குறும்படத்தில் இன்னும் பலமாய் ஒலித்திருக்கிறது. அப்பாவுக்கு மகளைப் பிடிக்கும். அம்மாவுக்கு மகனைப் பிடிக்கும் என்பது இயற்கை.

திங்கள், 10 அக்டோபர், 2011

விஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.

ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டுக்கான ஸ்பெஷல் நீயா நானாவில் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அது சம்பந்தமாக ஃபோனில் சுதா பேசியபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின் டிவியில் தொடர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். நான் தொடர்களே பார்ப்பதில்லை என்பதால் அது பற்றிய சில கருத்துக்களைச் சொன்னேன். மெயினாக அதுக்கு அடிக்ட் ஆனவங்க பலபேரை பார்த்ததினால் அது பற்றியும் சொன்னேன். இந்தக் கருத்துக்களை நீயா நானா நிகழ்ச்சியில் சொல்ல முடியுமா, கலந்து கொள்ள விருப்பமா என கேட்டார். ஒப்புக் கொண்டேன். ( தொலைக்காட்சி சீரியல் கில்லர்களைப் பற்றி தெளிவுறுத்துவது என் கடமை என்பது போல:))

சனி, 8 அக்டோபர், 2011

காமமும் லஞ்சமும்..

தண்டவாளக்
கழிவறைகளைப் போல்
எங்கெங்கும் சிதறிக்
கிடக்கிறது காமமும் லஞ்சமும்..

அகலக்கால் வைத்து
தாண்டிச் செல்கின்றன
பெட்டிகளும் எஞ்சினும்..

வியாழன், 6 அக்டோபர், 2011

சதுரங்கம். எனது பார்வையில்.




செஸ் விளையாட்டில் எங்கெங்கெல்லாம் ராஜாவுக்கு செக் வர சாத்யக்கூறுகள் உண்டு. எதிர்பார்க்கும் இடத்தைத்தவிர மறைந்திருக்கும் எதிரிகளும் இருப்பார்கள். பலமுனைத்தாக்குதல்கள் இருக்கும். ராணி, குதிரை, யானை, தேர் என எல்லாம் இருக்கும். இது மூளை விளையாட்டு என்பதால் எல்லாப்பக்கமும கவனமாக விளையாட வேண்டும். இந்த மூளை விளையாட்டில் யார் யாரையெல்லாம் காவு கொடுத்தும் கடைசியில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. பொதுவா ராணி எல்லாப்பக்கமும் சுழன்று ராஜாவைக் காப்பாற்றுவது சதுரங்கம். இந்தச் சதுரங்கத்தில் ராஜா எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று ராணியைக் காப்பாற்றுகிறார்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.

சென்ற வருடம் போல் இந்த வருடமும் நண்பர் அருண்குமார் வீட்டில் கொலு. அவரது அம்மா தான் கையாலேயே செய்த நெட்டி பொம்மைகள் கொலுவை விவரித்தார்.

திங்கள், 3 அக்டோபர், 2011

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

இந்தத்தலைப்பைப் பார்த்ததும் தென்னக ரயிலில் பாத்ரூமுக்குப் பக்கத்தில் 72 ஆம் நம்பர் சீட்டில் அமர்ந்து பயணித்தது என எண்ணி இருப்பீர்கள். இல்லை இல்லை இது தட்காலில் ஏசி கோச்சில் புக் செய்து ( டிக்கட் விலை 705 ரூபாய்) அனுபவித்த கொடுமை இது.

நார்மல் டிக்கெட் செகண்ட் க்ளாஸில் புக் செய்தால் வீட்டில் இருந்து ஏர் பில்லோ., ப்ளாங்கெட் எல்லாம் தூக்கி வருவோம். இது ஏசி என்பதால் இதை எல்லாம் எடுக்காமல் வந்தேன். ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் த்ரீடயர் ஏசியில் பதினொன்னரை மணி வண்டிக்கு இடம் கிடைத்தது. தட்காலில் புக் செய்பவர்களுக்கென்றே அப்பர் பர்த் வைத்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டப்பட்டு ஏறினால் ஒரு தலையணை ஒரு போர்வை ஒரு பெட் ஸ்ப்ரெட் இருந்தது. கம்பளி இல்லை.கம்பளி இல்லாமல் எப்படி ஏசியில் இருப்பது. அப்போது கீழே இரு குழந்தைகள் கம்பளி போட்டு போர்வை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா எதிர் சைட் பர்த்தில் அமர்ந்து என் சீட்டைக் கைகாட்டி அது என்னுடையது என வாதிட்டார்கள். இல்லையம்மா இது என்னுடையது உங்களுடையது 38 அடுத்தது என சொல்லி விளங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...