எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 15 மே, 2023
விரிநீர் வியனுலகம்.
ஞாயிறு, 14 நவம்பர், 2021
ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.
ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.
பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன
ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே
அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா?
சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும்
அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு
வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த
காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில்
சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.
சிறு வயதிலிருந்தே ஆண் என்றால் அழக்கூடாது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குச் சீர் செய்ய வேண்டும். நன்கு படித்துப் பெரிய வேலைக்குப் போக வேண்டும். உத்யோகம் புருஷ
லட்சணம் என்றெல்லாம் சொல்லிச் சுமையை ஏற்றி விடுகிறோம்.
திங்கள், 8 மார்ச், 2021
மரபின் நீட்சியாக..
மரபின் நீட்சியாக..
பெண்களும் மரபுகளும்
இன்றைக்கும் பெண் வீரமிக்க வளாக, விவேகம் நிறைந்தவளாக, நிர்வாகத்தினைச் செம்மையுற நடத்தும் ஆற்றல் பெற்றவளாக, பாசமும் அக்கறையும் நிறைந்தவளாக, விருந்தோம்பலில் இணையற்றவளாகத் திகழ்கிறாள். இவையெல்லாம் பண்டைய மரபின் நீட்சியாகும்.
இதிகாச புராணங்களிலும் சரி, வரலாற்றிலும் சரி, இலக்கியத்திலும் சரி பெண் என்பவள் எப்படி வரையறுக்கப்பட்டிருக்கிறாள் எனப் பார்தோமானால் வீரமான, வெற்றிகொள்ளமுடியாத மங்கையாகவே அவள் உருவாக்கப்பட்டிருக்கிறாள். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக உருக்கொண்டபோது காளியிலிருந்து காத்தாயிவரை ஆயுதம் சுமந்து அக்கிரமங்களை ஒழித்தவளாகவே மக்கள் சமூகத்துக்காக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். பெரும்பகுதி ஆண் தெய்வங்கள் கோலோச்சினாலும் உலக அளவிலும் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு.
செவ்வாய், 23 ஜூன், 2020
சிக்கனம் பழகுவோம்.
சிக்கனம் பழகுவோம்
கொள்ளைநோய் கொரானா பரவிவரும் காரணத்தால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைச்
சரிக்கட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு, வேலைக்குறைப்பு, சம்பளக் குறைப்பு
செய்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கொரோனாவோடு பழகி வாழக் கற்றுக்கொண்ட நமக்கு
சிக்கனம் பழகுவது கஷ்டமா என்ன. தேவையற்றவைகளை வாங்கிக் குவித்தால் தேவையானவைகளை
விற்க நேரிடும் என்கிறார் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பஃபே. வாங்கும்
சம்பளத்தில் செலவுபோக மிஞ்சியதை மட்டுமே சேமிப்பதென்று இருக்காமல் குறிப்பிட்ட
தொகையை சேமிப்பில் போட்டுவிட்டு மிச்சத்தையே செலவழிக்க வேண்டும் எனவும்
சொல்கிறார்.
வியாழன், 14 மே, 2020
தொழிலாளிகள். நமது மண்வாசம் மே சிறப்பிதழ்.
புதன், 3 ஏப்ரல், 2019
அரசியலில் பெண்களின் பங்கு.
திங்கள், 9 ஏப்ரல், 2018
புதன், 19 ஆகஸ்ட், 2015
சாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’ - ஒரு பார்வை.
சாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’
புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில்.
செவ்வாய், 28 ஜூலை, 2015
பூக்களும் பூவையர்களும்.
திங்கள், 20 ஜூலை, 2015
காதல் காதல் காதல்.
ஞாயிறு, 5 ஜூலை, 2015
புதன், 1 ஜூலை, 2015
பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும். நமது மண்வாசம் & ஷெனாய் நகர் டைம்ஸ்.
திங்கள், 1 ஜூன், 2015
ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-
புதன், 27 மே, 2015
திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-
குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-
வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார் (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.
செவ்வாய், 24 மார்ச், 2015
அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-
அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்
MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள் ஜான் ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். மூக்குச் சீரமைப்புச் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது. மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு முகச்சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டார். அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு மறுசீரமைப்பு சிகிச்சை என அடுத்தடுத்த சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு வெகுளித்தனமான அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பூரணமான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் தோல் மென்மையும் மாறக்கூடும்.
திங்கள், 9 மார்ச், 2015
உடை அரசியலும் உடல் அரசியலும்.
தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.
திங்கள், 2 பிப்ரவரி, 2015
உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
வெள்ளி, 16 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-
2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.
ஷானின் கவிதைகள் குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் பதிவு செய்கின்றன. அதிலும் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் இரைச்சலை எழுத்திலேயே நம்மையும் கேட்கவைக்க முடிகிறது அவரால்.
























