எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 அக்டோபர், 2012

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மாமியார் மருமகள் உறவுமுறை..

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

திங்கள், 29 அக்டோபர், 2012

மேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.

குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் இருந்து மேக்கப் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறிய கருத்துக்கள் :-

“பொதுவா கேட்டா தேவையில்லைன்னுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்முடைய நிறமிகளை வெண்க்ரீம்கள் மறைத்து வெண்மையாக்கி காண்பிக்கின்றன. இயற்கைப் பொருட்களான தயிர்., எலுமிச்சை., தக்காளிச்சாறு., முல்தானி மிட்டி., தேன் பழக்கூழ்., பாலாடை, கசகசா., கடலை மாவு, பயத்த மாவு போன்றவை கலந்து குளித்தாலே கலர் கொடுக்கும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கனவுகள்

இரவு கருத்ததும்
கலங்கரை விளக்காய்
ஒளிவிடத் தொடங்குகின்றன
இன்றைக்கான கனவுகள்.

ஒளிர்ந்த விளக்குகள்
பிடறி சிலிர்க்கும்
சவாரிக் குதிரைகளாய்
காற்றில் பறக்கின்றன.

ஆசைக்காற்றில் உப்பி
வண்ண பலூன்களாகி
பருக்கத் தொடங்குகின்றன
கடல் மண்ணிலிருந்து.

வியாழன், 25 அக்டோபர், 2012

சங்கமம்..

நதியாய்ப் பெருகி
கரைகளைப் புணர்ந்து
புற்களையும் விருட்சங்களையும்
பிரசவித்திருந்தாள்.

வரத்து வற்றிய கோடையிலும்
நீர்க்காம்பைச் சப்பியபடி
பருத்துக் கிடந்தன
வெள்ளரிகள் கம்மாய்க்குள்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

காலால் வரையும் சாதனை ஸ்வப்னா..

இந்த வருடம் பெண்கள் தினத்தில் உங்களுக்கு இன்னொரு தன்னம்பிக்கைப் பெண்ணை அறிமுகப்படுத்தப் போகிறேன். இறைவன் அருளால் எல்லா வளமும்., எல்லா நலமும் பெற்றிருக்கும் உங்களில் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள். பிறப்பிலேயே ஏதாவது குறைபாட்டோடு பிறக்கும் பிள்ளைகளுக்கு கடவுள் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறார். அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ளவும், தங்கள் திறமை என்ன என கண்டுபிடிக்கவும் கூட. இப்படிப்பட்ட ஒருவர்தான் அகஸ்டின் ஸ்வப்னா.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)

வெள்ளி, 19 அக்டோபர், 2012

எடைமேடை.

தன்னைத்தானே நீதிமானாகக்
கற்பித்துக் கொள்ளும் ஒருவன்
பார்க்கும் அனைத்தையும்
எடையிட்டுக் கொண்டிருக்கிறான்.

கடந்து செல்லும் ஒரு பெண்ணை
உற்று நோக்குகிறான்.
அவள் திரும்பப் பார்த்தால்
மகிழ்வடைகிறான்.
 பிடித்தமானவள் என்றோ
உத்தமி என்றோ
குறியீடு இடுகிறான்.

வியாழன், 18 அக்டோபர், 2012

சந்திப்பு..

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

புதன், 17 அக்டோபர், 2012

பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.

வண்ணத்துப் பூச்சியின் மெல்லிய அழகோடு பச்சைக் கிளியின் மொழியோடு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அவர்தான் அர்ச்சனா அச்சுதன். தந்தை பெயர் அச்சுதன் . ரோட்டேரியன். தாய் மதுமதி அச்சுதன். தன் புத்திசாலித்தனமன பேச்சுக்களால் அடுத்தவர்களை தன்னுடைய இரண்டு வயதிலேயே மயங்கச் செய்தவர். எந்தக் கேள்விக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் இந்தப் பைங்கிளிக்கு ஒரு சின்ன குறைபாடு இருப்பதை இவரின் பெற்றோர் கண்டுபிடித்தார்கள். அது செரிப்ரல் பால்ஸி எனப்படும் ஒரு மூளைச் செயல் குறைபாடு நோய்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..

பெண்கள் தினம் கொண்டாடப்படுவதே உழைக்கும் மகளிரைக் கொண்டாடத்தான். என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணும் இங்கே சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணுக்கு இங்கே நல்ல சம்பளத்தில் காம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலை. அவருக்கு அந்த வேலையைத் துறந்துவிட்டு திருமணம் செய்து அமெரிக்கா செல்ல யோசனை. கைநிறைய சம்பாதித்து செலவு செய்தது போக எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்க்கவேண்டுமே என்ற அச்சம். தன்னுடைய தனித்துவம் , பொருளாதார சுதந்திரம் போய்விடுமோ என்ற கவலை.

ஒரு நாள் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன் அவரோடு. அங்கே சென்றபின்னும் அதேபோல வேலை கிடைக்கும் . எனவே திருமணத்துக்கு சம்மதிக்கும்படி சொன்னேன்.இன்று அங்கே சென்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். காரியர் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது., திருமணம் செய்து கொள்ளக் கூட யோசிக்கும் அளவு.

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

திரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றிவேல்..

சாவி குழுமத்தின் மூலமாக இன்றைய ஆ.வி மாணவர் திட்டத்திற்கு முன்னோடியான மாலனின் திசைகள் வார இதழ் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகம்.. குமுதம் சூர்யகதிர் இதழ்களில் சிறுகதைகளும் இந்தியா டுடே , தினமணி இதழ்களில் கட்டுரையும் வெளிவந்துள்ளது.. பல்வேறு இணைய இதழ்களில் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.. . தீவிர வாசகர்.. சங்க இலக்கியம் முதல் இன்று வலைப்பூக்கள் மூலம் எழுத வந்துள்ள இளம் படைப்பாளிகள் வரை அனைத்தும் படிப்பதில் ஆர்வம்.. இலக்கியம் தவிர அரசியலில் அதிக ஆர்வம்.. திராவிட இயக்கச் சிந்தனைகள் கொண்டவர்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்..

வியாழன், 11 அக்டோபர், 2012

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்....

புதன், 10 அக்டோபர், 2012

கானாவும் வெண்பாவும் அபுல்கலாம் ஆசாத்தின் எண்ணத்தில்.

///எல்லாரும் எதிலிருந்தாவது விடுதலை பெறவேண்டும் என்னும் நினைப்பில் கொஞ்சமாவது ஆழ்ந்துதான்போகிறோம் என்பது எனது கருத்து. சில தத்துவார்த்தமான பொழுதுகளில் துறவறச் சிந்தனை மேலோங்கி குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வோமா என்னும் நினைப்பு தோன்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன./// இது விடுதலை என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு தேன்கூடு .காமுக்கு அனுப்பச் சொன்னபோது நான் ஆசாத்ஜி எனக் குறிப்பிடும் திரு. அபுல் கலாம் ஆசாத் சொல்லியது.

காத்திருக்கிறேன்..

நான் காத்திருக்கிறேன்
என்பது தெரிந்தும்
உணராமலே வீடு சேர்கிறாய்
ஒவ்வொரு நாளும்.

உன் கைபிடித்துக்
கடைவீதி செல்லக் காத்திருக்கிறேன்.
தனியறையில் துய்க்காமல்
தேனிலவென்று சென்று
சுற்ற காத்திருக்கிறேன்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீங்க என்னவா இருக்கீங்க என்று கேட்டால் நான் வெறும் ஹவுஸ் வைஃபாதாங்க இருக்கேன். என சொல்லி இருக்கிறேன் . அது என்ன ஹவுஸ் வைஃப். சில வீடுகளில் தற்போது பெண்கள் நல்ல ப்ரொஃபஷனில் இருக்க அவர்கள் துணைவர்கள் எழுத்தாளர்களாகவோ அல்லது திரைத்துறையில் வெற்றி காணும் முயற்சியிலோ ஈடு பட்டு இருக்காங்க. மனைவி அலுவலகம் செல்ல அவங்க துணையா இருக்காங்க இது அவர்களின் சுய தேவையின் பொருட்டே. அவங்க கிட்ட நீங்க என்ன செய்கிறீங்கன்னு கேட்டா நான் தற்போதைக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டா இருக்கேங்க என சொல்வதில்லை. மாறாக என்ன செய்ய அல்லது என்னவாக ஆக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

ஹவுஸ் வைஃபாக மட்டும் இருப்பது ரொம்ப சுலபமான காரியமா என்ன.?

திங்கள், 8 அக்டோபர், 2012

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்து என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டுக் கடிதம் வந்தது. தினமலர் திருச்சி பதிப்பில் வெளிவந்த சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் பார்த்தபின் புத்தகம் வேண்டி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

சனி, 6 அக்டோபர், 2012

அலமாரி

குழந்தைகள் வளர வளர
உடுப்புக்கள் வளர்வதுபோல்
அலமாரிகள் வளர்வதில்லை.
 நகைகளும் சில சேர்ந்ததால்
லாக்கருடன் இன்னொரு பீரோதேடி
கணவனும் மனைவியும்
கடைகடையாய் அளந்தார்கள்.

அவன் சாக்லெட் நிறமெனில்
அவள் அது செங்கல் நிறமென்றாள்
அவள் சில்வர் க்ரே எனில்
அவன் அது கல்லறைச்சாம்பலென்றான்.
கறுப்புநிற அலமாரி பார்த்து
அது சாத்தானின் நிறமென்று
தள்ளிப் போகிறார்கள்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தொலைந்த ஒன்று

தொலைத்தது எங்கே
எனத் தெரியவில்லை
தேடுவது எங்கே எனவும்
பிடிபடாததாக.

இருட்டிலும் வெளிச்சத்திலும்
துழாவிக் கொண்டிருந்தேன்
தொலைத்த இடம் என
நம்பப்பட்ட இடத்தில்..

அது என்னுடையதாகத்தான்
இருந்ததாகத் தோன்றியது
வேறொன்றுடையதாகவும்
இருந்திருக்கலாம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

கருணையாய் ஒரு வாழ்வு...

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல்.

கருணையாய் ஒரு வாழ்வு...:-
*******************************

செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.??

பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..?

செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை குறித்து ஏதும் சட்டங்கள் இயற்றப்படவில்லை

புதன், 3 அக்டோபர், 2012

அளவுகோல்..

வெளியூர் சென்றுவந்தபின்
உறவினரைப் பார்த்துவந்தபின்
அலுவலகப்பெண்களைப் பார்க்கும்போதும்
அந்நியப்பெண்களைப் பார்க்கும்போதும்
அவர் கையில்
அளவுகோல் முளைத்துவிடுகிறது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இன்னொரு ஜென்மம்.

பள்ளித் தோழனைப் போல
தோளணைத்துச் செல்ல வேண்டும்.
காக்காய் கடி கடித்து
கமர்கட் சாப்பிட வேண்டும்.
அட்டை வாளால்
விளையாட்டாய் சண்டை
போட்டுக் கொள்ளவேண்டும்.

திங்கள், 1 அக்டோபர், 2012

நட்பு அழைப்பு

கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.

கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.

யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...