எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூவரசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூவரசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மாமியார் மருமகள் உறவுமுறை..

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

”பூவரசி” ஈழவாணி ஜெயாதீபன்

பூவரசி ஈழவாணி ஜெயாதீபன். :-

வாணி ஜெயாதீபன் இலங்கையைச் சேர்ந்தவர். ஈழவாணி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு பத்ரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர். 2004 இல் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். பின் 2007 இல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாபகம் வருதே.. எனது பார்வையில்

ஞாபகம் வருதே -- ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வெள்ளி, 9 மார்ச், 2012

வியாழன், 1 மார்ச், 2012

முருதாடி. பூவரசி காலாண்டிதழில்.


முருதாடி..:-
******************

பெல்லாப் பூடம்.,
அடம்., சீண்டரம்.,
லண்டி., சகடை.,
குந்தாணி மட்டை.,
காளி., முருதாடி
இதெல்லாம் அம்மாவின்
வழங்குபெயர்கள் அவளுக்கு.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தியானம் என்பது..


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 29 செப்டம்பர், 2011

செந்தீ..

செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..

புதன், 28 செப்டம்பர், 2011

மழையாய் இருந்தபோது..

எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..

அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,

எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிலையாய் நீ. பூவரசியில்.

சிலையாய் நீ..
*************************

காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ

வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்

புதன், 13 ஜூலை, 2011

இருப்பு..பூவரசியில்

இருப்பு..:-
***************

மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,

செவ்வாய், 12 ஜூலை, 2011

பலூன்கள்... பூவரசியில்..

பலூன்கள்..
**********************

காற்றூதி விரிவாக்கி
கடற்கரையில் விளையாடவும்

நெஞ்சடைக்கும்
குருதியோட்டம் சீராக்கவும்

கலவி முடிந்து
விந்து பிடிக்கும் பையாகவும்

கார் விபத்தில்
உயிர் காக்கும் மெய்யாகவும்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 28. மே 2011 பூவரசியில் தேனு கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

திங்கள், 11 ஜூலை, 2011

நம்பிக்கை.. பூவரசியில்

நம்பிக்கை..
**********************

விளைந்த புற்றுக்கள்
முளைவிட்ட நாகங்களோடு..

எங்கேயோ உரமடித்தால்
எங்கேயோ விளையுமென்று

வியாழன், 26 மே, 2011

வௌவால்கள்...பூவரசியில்.



புலனாய்வு., விசாரணை
மேல்முறையீடு ..
நீதியின் தாமதங்களால்
பாழடைந்த மண்டபங்களில்
பதுங்கித் தலைகீழாய்த்
தொங்கிச் சிறுத்துக் கிடந்த
உயிர் தின்னி வௌவால்கள்

திங்கள், 23 மே, 2011

தொற்று...

தொற்று..
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...
Related Posts Plugin for WordPress, Blogger...