எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 மே, 2011

தொற்று...

தொற்று..
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...

தொற்று வியாதிகளின்
தீவிரம் தெரிந்தும்
தொழில் வாய்ப்புக்காய்
பணத்தை எண்ணும் குடும்பம்.,
அவளுக்குப் பின்
அழுது கொண்டே உண்கிறது
அவளது சவத்தை.

டிஸ்கி:- தோழி ஈழவாணி ஜெயாதீபனின் புது வெப்சைட் பூவரசி.காம் இல் மே 1. 2011 இல் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது.

11 கருத்துகள்:

  1. யதார்த்தம் நிறைந்த உண்மை கவிதை.
    ஆனால் படிக்கவே கஷ்டமாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அன்பே சிவம் இறுதில் சவம்

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சைக் கனக்க வைக்கிறது....

    பதிலளிநீக்கு
  4. சில மனிதர்களின் உண்மை வாழ்வு இப்படித்தான் !

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா24 மே, 2011 அன்று AM 11:25

    சமூக சிந்தனை

    பதிலளிநீக்கு
  6. மனத்தைக் கனக்க வைக்கும் அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  7. த்சோ....இதயம் கனத்துவிட்டது தேனு கவிதை படிக்கையில்

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ப்ரகாஷ்

    நன்றி கோபால்சார்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஆகாயமனிதன்

    நன்றி மாதவி

    நன்றி ஹேமா

    நன்றி சதீஷ்

    நன்றி ஜிஜி

    நன்றி ஸாதிகா..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...