எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 மே, 2011

அடுத்த கோர்ஸ்.




அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..


ஈழத்துக்கு.,
மீனவர்க்கு்.,
சாய(ந்த) மண்ணுக்கு.,
உரிமை மீறலுக்கு என
கவிதை எழுதித் தொலைக்கிறேன்..

ஒன்றையும் குணமாக்கும்
வழி தெரியாமல் விழிக்கிறேன்..
கையில் அடுத்த கோர்ஸை
தொடரச் சொல்லும்
மருத்துவக் குறிப்போடு..

////இன்று மே 18 அழிவை நினைத்து வருந்தி இக்கவிதை.////




15 கருத்துகள்:

  1. கவிதையில் தங்களின் முதல் உவமை நோயைக் குறிப்பிட்டு இருக்கிறது . அப்படியென்றால் . ஈழத்தின் இழப்பு நோய் போன்றது என்கிறீர்களா !? இல்லை வலி என்பதைத்தான் இப்படி உருவகப்படுத்தி இருக்கிறீர்களா ?????

    பதிலளிநீக்கு
  2. எழுதுவதை தாண்டி எழுதுபவன் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவன் படைப்பு . யதார்த்த கவிதை.

    பதிலளிநீக்கு
  3. தமிழ் உதயம் சொன்னது…

    எழுதுவதை தாண்டி எழுதுபவன் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவன் படைப்பு . யதார்த்த கவிதை.


    ..... true.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் உதயம் கருத்தை வழி மொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. //ஒன்றையும் குணமாக்கும்
    வழி தெரியாமல் விழிக்கிறேன்..//

    எல்லார் நிலைமையும் இதுபோலவே தான் உள்ளது போலத்தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. புலம்புவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?!

    பதிலளிநீக்கு
  7. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி கருன்

    நன்றி சங்கர்

    நன்றி ரமேஷ்

    நன்றி சித்து

    நன்றி மகி

    நன்றி ராஜா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கோபால்சார்

    நன்றி அக்பர்

    நன்றி செந்தில்..:)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...