எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2018

சிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.

 ஆ.. காரைக்குடியிலா முதியோர் இல்லமா. அதுவும் நகரத்தார் குடும்பங்களிலா என்று திகைக்க வேண்டாம். இன்று பல்வேறு காரணங்களை ஒப்பு நோக்கும்போது முதியவர்கள் தங்க இவை பாதுகாப்பானவையாகவே எனக்குத் தோன்றுகிறது. இங்கே தங்குபவர்கள் மாதாந்திரக் கட்டணம் கட்டி மிகுந்த வசதியோடேயே தங்குகிறார்கள்.. ஹோம் அவே ஃப்ரம் ஹோம். பட் இட்ஸ் அ ஹோம்.. 

பெரிய வீடுகளில் தனித்தனியாகத் தங்கி வந்த பெரியவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தனிமை கருதி இங்கே தங்கி இருக்கிறார்கள். வசதியானவர்கள். ஒரு மகன், ஒரு மகள் உள்ள பெற்றோர், அல்லது பிள்ளை இல்லாதவர்கள், கணவன் அல்லது மனைவி இழந்தவர்கள் இவர்களுக்கு கிட்டத்தட்ட 60 வயதில் இருந்தே உடல்நலக் கோளாறுகள் ஆரம்பித்து விடுவதால் எல்லா வேலைகளையும் முன்போல் தனக்குச் செய்து கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மூன்று வேளையும் சுடச் சுட சமையல்.

திங்கள், 30 ஜூலை, 2018

விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் - 28.


விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன்.


ரு விஷயத்தைச் செய்யப் பகீரப் ப்ரயத்தனம் செய்தேன் என்பார்கள் அப்படி என்றால் என்ன ? பகீரதன் என்ற மாமன்னன் கங்கையை இப்பூமிக்குக் கொண்டுவர பலவிதமான தவம் தியானம் இவற்றை ஓராண்டு ஈராண்டல்ல பல்லாயிரம் ஆண்டுகள் இயற்றினார். அதைத்தான் பகீரதப் ப்ரயத்தனம் என்கிறார்கள். 

அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.


மமதையை அடக்கிய மகேசன்.

னிதர்களுக்குத் தற்பெருமையும் தான் என்ற மமதையும் இருக்கக் கூடாது. மனிதர்களுக்கே இருக்கக்கூடாது என்றால் தெய்வீக அவதாரங்களுக்கு இருக்கலாமா. அதை மகேசன் எப்படி அடக்கினார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.

வாட்ட சாட்டமான வயிறு பெருத்த குண்டோதரர்கள் இருவர் பந்தியில் சம்மணமிட்டு அமர்ந்து ’கல்யாண சமையல் சாதம் காய்கறிகள் ப்ரமாதம்’ என்று பாடாமலே வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். 

செவ்வாய், 24 ஜூலை, 2018

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். தினமலர் சிறுவர்மலர் - 26.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன்.


ர்மதை நதியின் கரை. அங்கே அஸ்வமேத யாகங்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.. நூறு யாகங்கள் ஒருங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்திர பதவியை அடைந்தபின்னும் அதைத் தக்கவைத்துக் கொள்ள மஹாபலி மன்னன் இந்த ஹோமங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

அசுரகுல மன்னன் ஆனாலும் மஹாபலி அறநெறி தவறாதவன். பிரஹலாதனுடைய பேரன். தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் கொண்டவன். சகல சம்பத்துகளும் கொண்ட அமராவதிப் பட்டணம் மஹாபலி மன்னனின் வசமாகிவிட்டது.  இந்திரனும் தேவர்களும் இந்திரபுரியைவிட்டு மறைவிடம் தேடித் தஞ்சம் புகுந்தார்கள்.

ஹோம சமித்துக்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. அவிர்பாகங்களை அந்த அந்த தேவதைகள் பிரத்யட்சமாகி வாங்கிக் கொண்டார்கள். பூக்களும் பூஜா திரவியங்களுமாக மணத்துக் கொண்டிருந்தது அந்த இடம். ஹோம குண்டங்களில் இருந்து ஹோமப் புகை சூரியனைத் தொடுவது போல எங்கெங்கும்உயர்ந்து கொண்டிருந்தது.

அசுர குல குரு சுக்கிராச்சாரியாரின் மேற்பார்வையில் ஒவ்வொரு யாக குண்டத்திலும் பட்டும் பீதாம்பரமும் கொப்பரையும் வாசனைப் பொருட்களும் பூமாலைகளும் மணக்கப் பூர்ணாகுதி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூர்ணாகுதி முடிந்ததும் யாசிப்பவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து மஹாபலி அவர்களின் ஆசி பெறுவான்.

புதன், 18 ஜூலை, 2018

தினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.

தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உள்ளார். அவருக்கு நன்றி.


திங்கள், 16 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா   பேர்ல் சங்கமம் ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒரு அங்கமாக என்னுடைய ஏழாவது நூலான ( சிறார்களுக்கானது )  ”விடுதலை வேந்தர்கள்” வெளியிடப்பட்டது.  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் வெளியிட ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்களும் ரோட்டரி கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினரும்,  தலைவரும்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு சகாய அமலன் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள்.  பொற்கிழிக் கவிஞர் திரு நாகப்பன் அவர்களும், சுசேந்திரன் என்னும் மாணவன் ஒருவனும் கவிதையில்  வாழ்த்துரை நல்கினார்கள்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புரை நல்கினார்கள். திரு பாகை கண்ணதாசன் அவர்களின் பேச்சும் கவிஞர் திரு நாகப்பன் அவர்களின் கவிதையும் வெகு சிறப்பு. நினைவில் இருத்தியவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலை வேந்தர்கள் நூலின் 25 பிரதிகளை பேர்ல் ரோட்டரி சங்கத்தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் வாங்கி அங்கேயே மாணவர்க்குப் பரிசளித்தார்கள். !

இவை அனைத்தும் கீழேயும் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மரியாதை. மாணவக் கண்மணிகள் பூத்தூவி வணங்குகிறார்கள்.

வரவேற்புரை கூறி இந்நிகழ்வை  ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மிக அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது.  பேச்சாளர்களின் உரையைக் கவனித்து சரியான தருணத்தில் கைதட்டினார்கள். ஊன்றிக் கேட்டதுமல்லாமல் கேட்டவற்றுக்குத் தக்க பதில் சொல்லி அசரடித்தார்கள்.

சனி, 14 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.

என் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பணி அனுபவம். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். திருமணமானவுடன் குடும்பம்,குழந்தைகள் ,வேலை என வாசிப்பது நின்று இப்பொழுது ,2015ல் முகநூல் வந்தப்பிறகு இழந்த ஆர்வங்களையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறேன். அதில் வாசிப்பது தலையாயது.

சரஸ்வதி காயத்ரி என் முகநூல் தோழி. புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை மென் இறகால் தொடுவது போல மென்மையாக விமர்சிப்பதிலும் வித்தகி. சொல்லப்போனால் இவருக்கு கவிதைத் தொகுதிகள்தான் பிடிக்கும். வண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்.

இவர் தனது உறவினர்கள் பற்றி எழுதும் அனைத்தும் மனம் தொட்டவை. உறவுகளின் நெருக்கத்தையும் அன்பையும் வாசித்துக் கண்ணைக் கசியவிட்டவை. வீடு பற்றிய இவரது கவிதை என் உயிரைத் தொட்ட ஒன்று. வீடு என்பது சிதிலமானாலும் அதில் வாழ்ந்த அன்பு இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது இவரது எழுத்தில்.

இனி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக நான் இவரிடம் சிறுகதை, கவிதைகள் பற்றிய இவரது பார்வையைக் கேட்டிருந்தேன். அவர் கூறியதை இங்கே அளித்திருக்கிறேன்.

///பாவண்ணனின் " துங்கபத்திரை" படித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகரின் குரலைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படித்தவுடன் படிப்பதை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்க ஆரம்பித்து விட்டேன்.துக்கப்பிரவாஹத்திலிருந்து மீள்வதற்கு படிக்க ஆரம்பித்து மீண்டுமொரு துக்கத்தில்..

புதன், 11 ஜூலை, 2018

பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.

பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை.


தொம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ஒலி காற்றில் அதிர்கிறது. அவன் விடும் குறட்டையிலும் மூச்சுக் காற்றிலும் அவனது கரிய மீசைகள் அசைகின்றன கருத்த உதடுகள் விரிய வாய்பிளந்து உறங்குகிறான். கடுமையான உறக்கம். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல. ஆறு மாதங்களாகப் போகின்றன அவன் தூங்க ஆரம்பித்து.

எந்த அசைவுமில்லாமல் நித்திரை கொண்டிருக்கிறான் அவன். அவனை எழுப்ப யானைகள் சூழ்ந்து நிற்கின்றன. பாகன்கள் அங்குசத்தால் குத்தி யானைகளை இயக்குகிறார்கள். அவை  படுத்திருப்பவனைத் தம் தும்பிக்கை கொண்டு புரட்டுகின்றன. வீரர்கள் கதம், தண்டம், சூலம் கொண்டு அவனை பல்வேறு திசைகளில் இருந்தும் குத்தி எழுப்புகிறார்கள். கழுதைகளைக் கத்தவிட்டுச் சத்தம் எழுப்புகிறார்கள். டம் டம் என்ற சத்தம் கேட்கிறது அவன் படுத்திருக்கும் மாளிகையின் விதான மாடமெங்கும்.

திங்கள், 9 ஜூலை, 2018

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

துபாய் நகரத்தார் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினருமான திரு சொக்கலிங்கம் அவர்களின் பெருமுயற்சியாலும் துபாய் வாழ் நகரத்தாரின் நன்கொடைகளாலும் கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி. சொல்லப்போனால் இது அவர்களுடைய நெடுநாள் விஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 8 ஜூலை, 2018

பழம்பெரும் வீடுகள்.

கானாடுகாத்தானில் மட்டுமல்ல பல்வேறு ஊர்களிலும் 941* பழம்பெரும் வீடுகள் பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகின்றன. அவற்றை எல்லாம் பாதுகாத்து ஆவணப்படுத்தலாம். அதோடு யாரும் வசிக்காததாலே அவை பாழ்படுகின்றன. அவற்றுக்கும் ஆன்மா இருக்கிறது. வயதான பெற்றோர் போலத் தனித்திருக்கிறது வீடு. அவற்றைப் புதுப்பித்து ஹெரிட்டேஜ் ஹோம்களாக மாற்றலாம்.
இந்த வீட்டில் காலிங் பெல் மிகப் பழமையானது. :)

சனி, 7 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்டி அளித்த சீனப்பெருஞ்சுவரும்.

தங்கை சுபஸ்ரீ மோஹன் முகநூலில்தான் அறிமுகம் என்றாலும்  எங்கள் நட்பு ஏழெட்டு வருடங்களுக்கு மேற்பட்டது. இவர் பெய்ஜிங்கில் வசித்து வருகிறார்.

சீனா அண்ணன் தேசம் என்ற நூலாசிரியர். இந்த நூலை இவர் சென்னையில் வெளியிட்ட நிகழ்வில் எங்கள் முகநூல் தோழமைகள் எல்லாம் கலந்து கொள்ள நான்மட்டும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அதைத் தீர்க்க அவரிடம் பலமுறை இந்தச் சீனாவைப்பற்றி ஏதேனும்  சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதிக்கொடுங்கள் என்று மன்றாடி  ( ! ) இருந்தேன். ஒருவழியாக டைம்கிடைத்து என் ஞாபகம் வந்து இன்று எழுதி அனுப்பினார் சுடச் சுட அந்த சீனப்பெருஞ்சுவர் இடுகை உங்களுக்காக இங்கே. :)

அன்பும் நன்றியும் தங்காச்சி :)

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.


ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.

”என்னம்மா உனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தா நல்லா படிப்பியா.”

”எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்காட்டியும் பரவாயில்லை. என்னை விட கஷ்டப்படுற நிறையப்பேர் இருக்காங்க. அவங்களுக்கு கட்டாயம் கொடுங்க. உங்க உதவி தேவைப்படுறவங்க நிறைய இருக்காங்க. ” என்று கண்ணீர் விட்டு அழுது தனக்கு வந்த உதவியைக் கூட இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்த அச்சிறுமி மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். இதைக் கேட்ட அந்த ஃபவுண்டேஷன் சார்பாக இந்தக் குழந்தைகளை நேர்காணல் நடத்திய என் உறவினர் கண்களிலும் கண்ணீர்.

மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள்.


மாமல்லபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை இருக்கிறது. அங்கே பல்வேறு வகையான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் அன்று அங்கு செல்ல அனுமதி இல்லை. கிடைத்தவற்றை சுட்டிருக்கிறேன். அதோடு முன்பே எடுத்தவையும் வருகின்றன. 

சுவரில் செதுக்கப்பட்ட எல்லா சிற்பங்களின் மேலும் சித்திரக்குள்ளர்கள் காட்சி அளிப்பது அழகு. பல்லவப் பேரரசன் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்க மற்றவை எல்லாம் சுண்ணாம்பு/வண்ணம் அடிக்கப்பட்ட மாதிரி இருக்கின்றன. சிம்ம யாளிகளும் தூண் நாகங்களும் ( காரைக்குடித் தூண்கள் போல ) காட்சி அளிப்பது சிறப்பு. 

இனி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் குறிப்புகள் தொடர்கின்றன. 

வியாழன், 5 ஜூலை, 2018

மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.

மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.



ஒரு நாள் நண்பர் & சகோதரர் எழுத்தாளர் கவிமதியும் உடன் வந்து இந்த மால்களை எங்களுக்குச் சுற்றிக் காட்டினார்.  நன்றி கவிமதி சகோ & மெய்யப்பன். :)
























இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்

புதன், 4 ஜூலை, 2018

கழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.

1821. இது எந்த நாடுன்னு சொல்லுங்க. விடை இந்த இடுகையின் கடைசியில்.

 1822. காலனையே எட்டி உதைத்தவர்கள் அல்லவா கவிஞர்கள்.

https://www.jeyamohan.in/110176#.WzuY_tUzbIU


1823.LETHARGIC.

1824. somedays to remember.. somedays to forget

https://www.youtube.com/watch?v=p9xizGZwGcc

1825. காரைக்குடியில் கழிவு நீர்க்குழாய் அமைக்கிறேன்னு ரோடை கிளறி வைச்சிருக்காங்க. சும்மாவே ரோடு லங்கோடு. இப்ப வெள்ளம் வடிஞ்ச காட்டாறு மாதிரி இருக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...