எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நிகழவே இல்லை நம் சந்திப்பு.......

நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் ., பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க..
இன்மையின் திரையில்..

வியாழன், 28 அக்டோபர், 2010

மார்பகப் புற்று.. முன்னெச்சரிக்கை..

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நண்டூறுது ., என அறியா வயதில் விளையாடி இருக்கலாம்.. பேரிளம் பெண்களுக்கான பருவத்தில் அறியாமல் இருக்கலாமா..

சென்ற மாதம் ஒரு தோழியுடன் பேசியபோது சொன்னார்.. தற்போதெல்லாம் 40 வயதுக்கு மேல் அல்ல ...30 வயது உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படுகிறது என.. மார்பகத்தில் சிறு சிறு கட்டிகள் உருள்வது போல் இருந்தால் மாமோகிராம் செய்வது அவசியம் ..

புதன், 27 அக்டோபர், 2010

காந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., கைவினைப் பொருட்கள் கண்காட்சி..









ஒரு புக் ரிவ்யூக்காக காந்தி ஸ்டடி சென்டர் சென்றிருந்தேன்.. 28.0 2010 அன்று அங்கு தக்கர் பாபா வித்யாலயா ( வெங்கட்நாராயணா சாலை., தி. நகர்) வில் பயிலும் குழந்தைகள் நடத்தும் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்க இருக்கிறது..

தேன் சிறகு முத்தம்...

தாலாட்டும் ரயில்
தாய் போலெனக்கு...

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசைபோட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்..
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப் பார்த்தபடி..

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கடல் அடையும் விளையாட்டு...

அலங்காரத்தோடும்
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..

திங்கள், 25 அக்டோபர், 2010

தாம்பத்யம்..

என்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிட்டாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

செய்தியும் கருத்தும்..

தமிழகத்தில் தபால் நிலையங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.. ---- செய்தி..

நகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...!!!

இந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..

நல்ல கோல்தான்..தங்கம் விலை குறைகிறதே..

இந்தியா வரும் ஆறாவது அதிபர் ஒபாமா...-- செய்தி

சனி, 23 அக்டோபர், 2010

வெள்ளி கொலு..







கொலுவென்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு..
சுண்டல்., மரப்பாச்சி., பொம்மைகள்., பார்க்., மலை., ஃபவுண்டன்., கோலம்., பாடல்கள். , பட்டுப் பாவாடை ஜிமிக்கியில் கண்மை தீட்டிய குழந்தைகள்..
இப்படித்தான் நினைத்து நானும் சென்ற வாரம் என் நண்பர் அருண் வீட்டு கொலுவுக்கு சென்றேன்.. கை மாவுக்கட்டு இருந்தால் என்ன..? நட்பு முக்கியம் இல்லையா..:))

வியாழன், 21 அக்டோபர், 2010

மகாவின் கல்யாண வைபோகமே..

மக்காவின் மகா..
மஞ்சள் புடவையில்
சின்ன தேவதை..
கருவேல நிழலின் கீழ்
கிருஷாந்திப் பூ..
பாலையில் காய்ந்த பாராவின்
பசும் சோலை..
விளக்கில் விசும்பிய பூதம்
விருந்துத் தட்டோடு..
இனி முதலாளியென்று
சொல்லாதே..ஜீனியே
மாப்பிள்ளை என்று சொல்லு..

புதன், 20 அக்டோபர், 2010

எல்லாம் வாய்க்கிறது..

எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்...
படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..
பேரம் பேசிக் காய்கறி...
காக்காய்க்குச் சுடுசோறு..
தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்...
தோழிகளிடம் அளவளாவல்..
அலுவலில் இருக்கும் கணவரிடம்
குறுந்தகவலில் குறும்பு..

திங்கள், 18 அக்டோபர், 2010

வட்டங்கள் இறக்கிய கிணறு..

வட்டங்கள் இறக்கிய கிணறு...
வட்டச் சிற்றலைகளுடன்..

மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..

சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..

சனி, 16 அக்டோபர், 2010

புத்தகத்துள்ளுறை மா(னுடர்க)தர்களே..

இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
உருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..

ஸ்பெஷலிடி.. இதில் படிக்க மட்டுமல்ல . எழுதலாம்., பகிரலாம்..
மல்டி ஸ்பெஷலிடி.. நிறைய பேருக்கு வீடே இதுதான்.. தூங்குற நேரம் டாய்லெட் நேரம் தவிர... இது தூக்கமும் தவிர்ந்த திரிசங்கு சொர்க்கம்..குப்பையைக் கூட இதுலதான் கொட்டுவோம்னா பார்த்துக்குங்க..

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ்மி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்..

அக்டோபர் மாதம் நவராத்திரி ஸ்பெஷல்.. அதில் துர்க்கையாக வாழ்வில் போராடி ஜெயித்த ரம்யாதேவியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.. இவர் ப்லாக்கிலும் எழுதிவருகிறார்.. போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கைப் பெண்கள் பற்றி கட்டுரை தொடரும்...வெற்றி தொடரட்டும் ரம்யா தேவி..

புதன், 13 அக்டோபர், 2010

விட்டிலாயிராமல் விலகியிரு...

மின்சாரமற்ற பொழுதுகளில்
மின்சார உற்பத்தியானில்
எரிப்பான் அற்ற நேரங்களில்..

கும்மிருட்டு மூலையில் கிடந்த
என்னைத் தேடி எடுத்து
ஒளிர்ப்பானில் பற்றவைத்த போது..

உணர்ந்தேன்.. உன் கைகளில்..
பஃப்களின் வெண்குழல் வத்திகளும்
புளித்த பார்லித் தண்ணீரின் வாசமும்..

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உயிர் உறை ரகசியம்..

குறுக்கில் மரத்துண்டாய்..,
பூவில் பனித்துளியாய்.,
காரணமற்ற காய்ச்சலாய்..
பீடித்துக் கிடக்கிறது..
உன் அன்பு.. என் மேல்..

எல்லா அம்புகளும் படுக்கையாய்..
தக்ஷிணாயனம் இருக்கட்டும்..
எய்துவிடு மிச்சமும்..

நேசத்தின் இழையா ..
அன்புப் பிளவை..
நெய்வதை நிறுத்து..

சனி, 9 அக்டோபர், 2010

சுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களுக்கான போட்டிகள்..




நவராத்திரி ..சுபராத்திரி.. பாடல் கேட்கும்போதே முப்பெரும் தேவியரும்.. பட்டுப்பாவாடையணிந்த சுவாசினிகளும் ., மஞ்சள் குங்குமமும் தாம்பூலமும் ., கொலுவும் சுண்டலும் கண்முன்னே விரிகிறதா..

வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஸ்மைலியும்., க்ளாடியும்., கல்கியும்...


சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..

உடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..?

புதன், 6 அக்டோபர், 2010

புகைப்படங்களில் வாழ்பவர்கள்...

சட்டமிடப்பட்டு சந்தனமிடப்பட்டு
சாஸ்வதமான தாத்தாவுடன் பாட்டியும்..

சலனமுற்று நகரும் கணனிப் படங்களில்
வெளிநாட்டுவாழ் அப்பாவுடன் அம்மாவும்..

திங்கள், 4 அக்டோபர், 2010

பெயரெச்சம்..

லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..

ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக் கடையோ.,
உணவுக்கூடமோ.,
அணியாடை அகமோ
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்...
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன்..THE ROBOT..எனது பார்வையில்...



கடவுள் இருக்கிறாரா..? இந்த கேள்விக்கு சிட்டியை கேளுங்கள் ..சொல்வார்.. இருக்கிறார்.. அவர்தான் வசீகரன்.. என்னைப் படைத்த கடவுள்..என்று.
ஒரு ரோபோ சொல்லும் சிம்பிள் ஆன்ஸர்..
 
ரோபோவுக்கு மனித உணர்ச்சிகள் வந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் கதை..முதலில் கோபம் வருகிறது..பின்பு உற்சாகம்.. பின் காதல்..
காதல் வந்ததும் ஆக்கபூர்வமான மனது காதல் போட்டியில் டிஸ்ட்ரக்டிவாக எப்படி எல்லாம் செய்ய முடியும்.. இதுதான்.. ஜெயண்ட் சைஸ்.. ரோபோ..
இது கலாநிதிமாறனின் லேபிளில் மிக அட்டகாசமாக வந்துள்ளது..

Related Posts Plugin for WordPress, Blogger...